Politics
அரசு விழாக்களில் தி.மு.க எம்.எல்.ஏக்களுக்கு அழைப்பு விடுப்பதில்லை எனக் குற்றம்சாட்டியதால் வழக்குப்பதிவு!
அரசு விழாக்களில் பங்கேற்க தி.மு.க எம்.எல்.ஏக்களுக்கு அழைப்பு விடுக்கப்படுவதில்லை என மாவட்ட ஆட்சியரை விமர்சனம் செய்ததற்காக தி.மு.க எம்.எல்.ஏ எஸ்.ரகுபதி மீது போலிஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
புதுக்கோட்டையில் தி.மு.க கூட்டணிக் கட்சிகளின் சார்பில் சமீபத்தில் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. இந்த நிகழ்வில் பங்கேற்றுப் பேசிய, திருமயம் தொகுதி தி.மு.க எம்.எல்.ஏ எஸ்.ரகுபதி, “என்னுடைய தொகுதியில் நடைபெறும் குறைதீர் முகாமில், எனக்கு அழைப்பு விடுக்கப்படுவதில்லை” எனக் குறிப்பிட்டார்.
மேலும், “கூட்டுறவு வாரவிழாவிலும் எம்.எல்.ஏ என்ற முறையில் அழைப்பிதழில் பெயர் போடவில்லை. அழைப்பும் விடுக்கவில்லை. இதுகுறித்து மாவட்ட ஆட்சியரிடம்தான் முறையிட முடியும். ஆனால், மாவட்ட ஆட்சியரோ அ.தி.மு.க மகளிரணி மாவட்ட செயலாளர் போலச் செயல்படுகிறார்” என விமர்சித்தார்.
இந்நிலையில் மாவட்ட ஆட்சியர் குறித்து தி.மு.க எம்.எல்.ஏ அவதூறாகப் பேசியதாக அ.தி.முக வழக்கறிஞர் ஷேக் திவான் என்பவர் அளித்த புகாரின் பேரில் எஸ்.ரகுபதி எம்.எல்.ஏ மீது 4 பிரிவுகளின் கீழ் புதுக்கோட்டை நகர போலிஸார் வழக்குப் பதிவு செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
அதிகாலையிலேயே 7 மீனவர்கள் கைது.. உடனடியாக விடுவிக்கக் கோரி ஒன்றிய அமைச்சருக்கு முதலமைச்சர் கடிதம்!
-
750+ திரைப்படங்கள்... பத்ம ஸ்ரீ விருது.. ஒருமுறை MLA... - பிரபல நடிகர் கோட்டா சீனிவாச ராவ் காலமானார்!
-
திருவண்ணாமலை மக்கள் வசதிக்காக.. விடியல் பேருந்து & AC பேருந்துகளை தொடங்கி வைத்தார் துணை முதலமைச்சர்!
-
திருவள்ளூரில் ரயில் தீ பிடித்து விபத்து... 3 தண்டவாளங்கள் சேதம்... 8 எக்ஸ்பிரஸ் ரயில்கள் ரத்து !
-
“தி.மு.கழகத் தொண்டர்களின் உழைப்பை ஒருபோதும் மறந்ததில்லை!” : கழகத் தலைவர், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!