Politics
''தமிழகத்தில் ஏற்பட்ட வெற்றிடத்தை மு.க.ஸ்டாலின் நிரப்பிவிட்டார்''- வைகோ பேட்டி
ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், நீர்மேலான்மை விஷயத்தில் தமிழக அரசு குற்றவாளிக் கூண்டில் நிற்கிறது. எடப்பாடி அரசின் மெத்தன போக்கால் கர்நாடகம் தென்பெண்ணையில் 70 சதவீத அணை கட்டும் பணிகளை முடித்துவிட்டது.
இது குறித்து தமிழக அரசு தீர்ப்பாயத்தை அனுகாதது ஏன் என நீதிமன்றமே கேள்வி எழுப்பியது. அதற்கு தமிழக அரசிடமிருந்து எவ்வித பதிலும் இல்லை. இத்திட்டத்தினால், கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் ஆகிய மாவட்டங்கள் மிகக் கடுமையான பாதிப்புக்குள்ளாகும்.
அது போல மேகதாது, ஹைட்ரோ கார்பன் என பல பிரச்சனைகள் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. உள்ளாட்சி தேர்தலை நிறுத்த அ.தி.மு.க முயற்சி செய்யும், ஆனால் தி.மு.க அந்த முயற்சி ஈடுபடவில்லை. உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க உடன் ம.தி.மு.க கூட்டணி தொடரும்'' எனத் தெரிவித்தார்.
மேலும், தமிழகத்தில் வெற்றிடம் என்பது அறிவியல் பூர்வமாக இல்லை என்ற வைகோ, கலைஞர் மறைவால் தமிழகத்தில் ஏற்பட்ட வெற்றிடத்தை தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் நிரப்பிவிட்டார்.
வலுவான கூட்டணி அமைத்து 39 தொகுதிகளை வென்று தனது ஆளுமையை, தலைமை பண்பை நிரூபித்துள்ளார் எனத் தெரிவித்தார்.
Also Read
-
பழனிசாமிக்கே தேர்தல் ஆணையத்தின் SIR நடவடிக்கை மீது சந்தேகம் இருக்கிறது - அம்பலப்படுத்திய முரசொலி !
-
பேருந்து கட்டணம் இல்லை : மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு புதிய அறிவிப்பு வெளியிட்ட துணை முதலமைச்சர்!
-
“சென்னையில் 50 ஆண்டுகளாக இருந்த பட்டா பிரச்சனைகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது!”: துணை முதலமைச்சர் உதயநிதி!
-
”பா.ஜ.கவிற்கு வாக்களிக்காவிட்டால் வெளியே நடமாட முடியாது : பீகார் மக்களை மிரட்டிய ஒன்றிய அமைச்சர்!
-
”மக்கள் ஆதரவு இல்லாததால் வாக்குகளை திருடி வெற்றி பெற பார்க்கும் பாஜக” : ராகுல் காந்தி குற்றச்சாட்டு!