Politics
“ஜெகன்மோகன் ரெட்டி சைக்கோ போல நடந்துகொள்கிறார்” - சந்திரபாபு நாயுடு விமர்சனம்!
தெலுங்கு தேசம் கட்சியின் தலைவரும் ஆந்திர முன்னாள் முதல்வருமான சந்திரபாபு நாயுடு விசாகப்பட்டினத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் அரசு, மக்கள் விரோத சட்டங்களை நிறைவேற்றி வருகிறது. பிற கட்சித் தலைவர்கள் மீது தேவையில்லாமல் பொய் வழக்குகள் பதியப்பட்டு வருகின்றன.
என்னிடம் நல்ல முறையில் பேசுபவர்களிடம், நானும் நன்றாகவே பேசுவேன். ஆனால், ஜெகன்மோகன் ரெட்டி ஒரு சைக்கோ போல நடந்துகொள்கிறார். ஜெகன்மோகன் ரெட்டி ஆட்சி மிக மோசமாக உள்ளது. அவர் கட்சியினர் 'ஜெ' வரி (ஜெகன் வரி) வசூலிக்கின்றனர்.
நான் பல முதல்வர்களை பார்த்துள்ளேன். ஆனால், ஜெகன்மோகன் ரெட்டி போல ஒரு மோசமான முதல்வரை பார்த்தது இல்லை. சட்டம் அனைவருக்கும் பொதுவானதுதான். அரசு ஆணவப்போக்குடன் செயல்படுவதை மாற்றிக்கொள்ள வேண்டும். எங்கள் கட்சித் தலைவர்களை குறிவைத்து அரசு செயல்படுகிறது. இது நியாயமற்றது'' எனத் தெரிவித்தார்.
Also Read
-
“திட்டத்தை முடக்க நினைத்தவரின் சதியை முறியடித்த முதலமைச்சர்...” - முரசொலி பாராட்டு!
-
“எத்தனை விருது கிடைத்தாலும், தமிழக அரசின் விருதுகளான ‘தாயின் முத்தத்திற்கு’ ஈடாகாது!” : உதயநிதி பேச்சு!
-
தமிழ்நாடு அரசின் 7 ஆண்டுகளுக்கான திரைப்பட விருதுகள் மற்றும் சின்னத்திரை விருதுகள்! : முழு விவரம் உள்ளே!
-
“எடப்பாடி பழனிசாமியின் வாயை, நம் முதலமைச்சர் இன்றைக்குத் தைத்துவிட்டார்!” : அமைச்சர் ரகுபதி!
-
தமிழ்நாடு காவல்துறைக்கு ரூ.122.19 கோடியில் புதிய கட்டடங்கள்.. 360 புதிய வாகனங்கள்! : முழு விவரம் உள்ளே!