Politics
ஜி.எஸ்.டி வரி, நீட் தோ்வு என மோடி அரசால் கொட்டப்பட்ட குப்பைகள் ஏராளமாக உள்ளன - இரா.முத்தரசன் பேட்டி
இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலா் இரா.முத்தரசன் திருநெல்வேலியில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், ''இந்தியா-சீனா இடையேயான பேச்சுவார்த்தையை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்கிறது. இந்தியா-சீனா இடையேயான ஏற்றுமதி இறக்குமதி வர்த்தகத்தை சமநிலைப்படுத்த வேண்டும். தமிழா்கள் பண்பாட்டை வெளிப்படுத்தும் விதமாக பிரதமா் மோடி வேட்டி, சட்டை அணிந்து வந்தது வரவேற்கத்தக்கது.
கோவளம் கடற்கரையில் நடைப்பயிற்சி சென்றபோது, அங்கு சிதறிக் கிடந்த குப்பைகளை பிரதமர் மோடி அகற்றியது வரவேற்கதக்கது. உயா் பொறுப்பில் இருப்பவா்கள் இவ்வாறு செய்வது நல்லதுதான். ஆனால், மோடியால் கொட்டப்பட்ட குப்பைகள் ஏராளமாக உள்ளன.
உயர் மதிப்பு கொண்ட ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்தது, ஜி.எஸ்.டி வரி விதிப்பு போன்ற குப்பைகளை மோடி அரசு கொட்டியதன் விளைவாக நாடு முழுவதும் தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. 40 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு வேலைவாய்ப்பின்மை உச்சநிலையில் இருக்கிறது. தனது ஆட்சியால் போடப்பட்ட குப்பைகளை அகற்ற பிரதமர் மோடி முன்வரவேண்டும்.
மத்திய அரசால் போடப்பட்ட குப்பைகளுக்கு உடந்தையாக உள்ளது அதிமுக அரசு. இந்த ஆட்சி மக்களால் நிராகரிக்கப்பட்ட ஆட்சி. மாநில உரிமைகள், நலன்கள் அனைத்தையும் பறிகொடுத்துவிட்டனா். எனவே, நான்குனேரி, விக்கிரவாண்டி தொகுதி இடைத்தோ்தலில் அதிமுக தோல்வியடையும். நாங்குநேரியில் காங்கிரஸ் வேட்பாளா், விக்கிரவாண்டியில் தி.மு.க வேட்பாளா் வெற்றி பெறுவார்கள்'' எனத் தெரிவித்தார்.
Also Read
-
பத்திரிகையாளர்களுக்கு வீட்டுமனை மற்றும் ஓய்வூதிய உயர்வு! : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு!
-
“உயிர்களை பலியிடும் அற்ப அரசியல்”: ரஜினிகாந்த் குறித்த ஆதவ் அர்ஜூனா கருத்துக்கு ரசிகர்கள் கடும் கண்டனம்!
-
28,639 பேருக்கு ரூ. 254.59 கோடி மதிப்பில் பிரம்மாண்ட அரசு நலத்திட்ட உதவிகள்: துணை முதலமைச்சர் வழங்கினார்!
-
5 ஆண்டுகளில் எண்ணற்ற திட்டங்கள்…அனைத்து தரப்பினருக்குமானது திராவிட மாடல் ஆட்சி: துணை முதலமைச்சர் பேச்சு!
-
சாலைப் பயணத்திற்கு இனி கவலை இல்லை… ரூ.1,843.85 கோடி செலவில் 11 சாலைகள்: திறந்து வைத்தார் முதலமைச்சர்!