Politics
“இந்தி திணிப்பு மூலம் பல்வேறு மாநிலங்களை ஒன்றிணைத்த அமித்ஷாவுக்கு நன்றி” : ஆசிரியர் கி.வீரமணி பேட்டி!
தந்தை பெரியாரின் 141வது பிறந்தநாளை முன்னிட்டு திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, சென்னை பெரியார் திடலில் உள்ள பெரியாரது சிலைக்கு மரியாதை செலுத்தினார். பின்னர், பெரியார் பிறந்தநாளுக்கான உறுதிமொழியும் ஏற்கப்பட்டது.
அதன்பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த ஆசிரியர் கி.வீரமணி, “பெரியாரின் பிறந்தநாள் உலகம் முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. பெரியாரின் கொள்கைகள் முன்பை விட இப்போது அதிகம் தேவைப்படுகிறது.
தொடர்ந்து பேசிய அவர், அமித்ஷாவுக்கு ஒருவகையில் நன்றி தெரிவிக்க வேண்டும். ஏனெனில், தேர்தலுக்குப் பின்பு பிரிந்திருந்த பல்வேறு மாநிலங்களை மொழிப் பண்பாட்டில் கைவைத்து ஒன்றிணைத்திருக்கிறார். தமிழகம் மட்டுமின்றி கேரளா, கர்நாடகாவிலும் இந்தித் திணிப்புக்கு எதிரான குரல்கள் வலுவாக ஒலிக்கின்றன” என்றார்.
இதனையடுத்து, 5 மற்றும் 8ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படுவது குறித்து கேள்வி எழுப்பியபோது, ராஜாஜி கொண்டுவந்த குலக்கல்வித் திட்டத்தை விட இது மிகமோசமான திட்டம் என்றும், குலக்கல்வி விவகாரத்தில் அண்ணா அவர்களின் வழியை மறந்து சமூக நீதிக்கு மாறாக அ.தி.மு.க வேறு பாதையில் செல்கிறது” என்றும் ஆசிரியர் கி.வீரமணி சாடியுள்ளார்.
மேலும், “அதிகப்படியான தேர்வுகள் மாணவர்களை மேலும் நெருக்கடிக்கு உள்ளாக்கும். செத்த மொழியான சமஸ்கிருதத்துக்கு 300 கோடி ரூபாய் செலவு செய்யும் அரசு, தமிழுக்கு வெறும் 3 கோடி ரூபாய் மட்டுமே செலவு செய்கிறது எனில் யார் இங்கு நன்றி மறந்தவர்கள்?” என பொன்.ராதாகிருஷ்ணனின் பேச்சுக்கு பதிலடி கொடுத்துள்ளார் கி.வீரமணி.
Also Read
-
தண்ணீர் கேட்பது போல் நடித்து மூதாட்டி கொலை : கம்மல் கொள்ளை - நாகர்கோவில் அருகே கொடூரம்!
-
“கரூரில் 41 பேரைக் கொன்ற பாவத்தின் தொடர்ச்சிதான் இது” : முதல்வர் விஜயின் வஞ்ச எண்ணத்தை தோலுரித்த முரசொலி!
-
சமூகநீதித் தேரைப் பின்னுக்குத் தள்ளுவதா? : விஜய்க்கு தி.க. தலைவர் ஆசிரியர் கி.வீரமணி கேள்வி!
-
“தமிழோடு விளையாடியவர்கள் வாழ்ந்ததாக சரித்திரம் இல்லை” : தமிழ்த்தாய் வாழ்த்து அவமரியாதை - திமுக கண்டனம்
-
ராமநாதபுரத்தில் பரபரப்பு : ரூ.50 லட்சம் லஞ்சம் கேட்ட சார்பதிவாளர் கையும் களவுமாகக் கைது!