Politics
சி.பி.ஐ போன்ற தன்னாட்சி நிறுவனங்கள் சுதந்திரமாக செயல்பட வேண்டும் - மன்மோகன் சிங்
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கலந்துகொண்டார்.
அப்போது பேசிய அவர், '' ஜனநாயகத்தை வலுப்படுத்த நமக்கு அறிவார்ந்த, தொலைநோக்கு பார்வை கொண்ட தலைவர்கள் தேவை. நாடாளுமன்றத்தையும், அதன் செயல்பாடுகளையும் நாம் மதிக்க வேண்டும். கூட்டாட்சி அமைப்பை கொண்ட இந்தியா போன்ற நாடுகளில், உச்ச நீதிமன்றம், தேர்தல் ஆணையம், சி.பி.ஐ ஆகிய தன்னாட்சி நிறுவனங்கள் சுதந்திரமாக செயல்பட வேண்டும். அரசியலமைப்புக்கு உட்பட்டு அனைத்தும் நடக்க வேண்டும்" என்றார்.
மேலும், தற்போது நம் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வீதம் குறைந்து வருகிறது. இந்தியாவை 5 டிரில்லியன் பொருளாதாரமாக மாற்றுவதற்கு நல்ல திட்டமிடல் வேண்டும் என்றார்.
Also Read
-
"இந்த ஆண்டு 1 லட்சத்து 98 ஆயிரம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது" - தஞ்சாவூர் ஆட்சியர் !
-
"நேரடி நியமனம் : "ஒன்றிய அரசின் களங்கம் கற்பிக்கும் முயற்சி வெற்றி பெறாது" - அமைச்சர் KN நேரு விளக்கம் !
-
“பழனிசாமியிடம் துரோகத்தை தவிர வேறு எதையும் எதிர்பார்க்க முடியாது” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளாசல் !
-
தென்காசியில் 2.44 லட்சம் பயனாளிகளுக்கு உதவிகள் – முதலமைச்சர் தொடங்கி வைத்த புதிய திட்டங்கள் என்னென்ன?
-
சொந்தமாக வீடு… கலைஞர் கனவு இல்ல திட்டத்தில் பெரும் சாதனை - 1 இலட்சமாவது பயனாளிக்கு சாவி வழங்கிய முதல்வர்!