Politics
P Chidambaram: ப.சிதம்பரத்தை சந்திக்க காங்கிரஸ் நிர்வாகிகளுக்கு அனுமதி மறுப்பு! #LIVE
ப.சிதம்பரத்தை சந்திக்க காங்கிரஸ் நிர்வாகிகளுக்கு அனுமதி மறுப்பு.
திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ப.சிதம்பரத்தை சந்திக்கச் சென்ற காங்கிரஸ் பொதுச் செயலாளர்கள் பி.சி.சாக்கோ, முகுல் வாஸ்னிக், நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாக்கூர் உள்ளிட்டோருக்கு அனுமதி மறுப்பு.
-ப.சிதம்பரம் திகார் சிறைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
-ப.சிதம்பரத்தின் மனு விசாரணைக்கு ஏற்பு.
-ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில் சரணடைய விருப்பம் தெரிவித்து தாக்கல் செய்த ப.சிதம்பரத்தின் மனு விசாரணைக்கு ஏற்பு.
இந்த மனு செப்டம்பர் 12ல் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என சிறப்பு நீதிமன்ற நீதிபதி அஜய்குமார் குஹர் தெரிவித்துள்ளார்.
-அமலாக்கத்துறையில் சரணடைய தயாராக இருக்கிறேன் என ப.சிதம்பரம் தரப்பில் நீதிமன்றத்தில் மனுதாக்கல்.
-ப.சிதம்பரத்துக்கு மருந்து, பாதுகாப்பு மற்றும் பாத்ரூம் வசதியுடன் கூடிய தனி சிறை வழங்க சி.பி.ஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவு.
-ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரத்தை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் திகார் சிறையில் அடைக்க சி.பி.ஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவு.
-ப.சிதம்பரத்தை ஜாமினில் விடுவிக்க சி.பி.ஐ. நீதிமன்றம் மறுப்பு.
- ப.சிதம்பரத்தின் ஜாமீன் மனு மீதான தீர்ப்பு இன்னும் சற்று நேரத்தில் அறிவிக்கப்படுகிறது.
-நீதிமன்ற காவலுக்கு கபில் சிபல் எதிர்ப்பு
ப.சிதம்பரத்தை நீதிமன்றக் காவலில் வைக்க வேண்டும் என்ற சி.பி.ஐ வாதத்துக்கு கபில் சிபல் எதிர்ப்பு. விசாரணையில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கப்பட்டுள்ளதாகவும் வாதம். அமலாக்கத்துறையின் விசாரணை காவலுக்கு செல்லத் தயார் எனவும், நீதிமன்றக் காவலுக்கு அனுப்ப வேண்டாம் எனவும் கபில் சிபல் வாதம்.
- சிறைக்கு அனுப்ப சி.பி.ஐ வாதம்
விசாரணை முடிந்து விட்டதால், ப.சிதம்பரத்தை நீதிமன்ற காவலில் வைக்க சி.பி.ஐ தரப்பு வாதம். நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிடப்பட்டால், திகார் சிறைக்கு ப.சிதம்பரம் செல்ல நேரிடும்.
- நீதிமன்றத்தில் ப.சிதம்பரம்ஆஜர்
சி.பி.ஐயின் காவல் இன்றுடன் முடிவடைந்த நிலையில், டெல்லி சி.பி.ஐ நீதிமன்றத்தில் ப.சிதம்பரம் ஆஜர்படுத்தப்பட்டார்.
Also Read
-
“அடிப்படை வசதிகள் இல்லாத இரயில் நிலையங்களை சரி செய்வது எப்போது?” : ஆ.ராசா எம்.பி கேள்வி!
-
“நிதிச் சுமைக்கு எதிராக தமிழ்நாடு முன்வைத்த கோரிக்கையை பரிசீலிக்காதாது ஏன்?” : பி.வில்சன் எம்.பி கேள்வி!
-
“மாற்றுத் திறனாளிகளுக்கான வேலை வாய்ப்புக்கு ஒன்றிய அரசு செய்தது என்ன?” : கனிமொழி எம்.பி கேள்வி!
-
“பா.ஜ.க.வின் தேர்தல் தந்திர உத்தி ‘மக்களுக்கு புரியும்’ என்பது உறுதி!” : ஆசிரியர் கி.வீரமணி திட்டவட்டம்!
-
தமிழ்நாட்டில் 77% புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செயல்பாட்டிற்கு வந்துள்ளன : அமைச்சர் டி.ஆர்.பி ராஜா தகவல்!