Politics
“அழிக்கப்படும் ஜனநாயகத்தைக் காக்க நீதிமன்றமே முன்வராதது வேதனைக்குரியது” : மம்தா பானர்ஜி கண்டனம்!
ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் முன் ஜாமின் அளிக்க நீதிமன்றம் மறுப்பு தெரிவித்ததால் நேற்று இரவு டெல்லியில் ப.சிதம்பரம் வீட்டின் சுவர் ஏறிக் குதித்து அவரை சிபிஐ கைது செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையாக ப.சிதம்பரத்தை மோடி அரசு கைது செய்திருப்பதாகவும், சிபிஐ, அமலாக்கத்துறையை ஏவி தங்களது வஞ்சத்தைத் தீர்த்துக்கொள்வதாகவும் என காங்கிரஸ் உள்ளிட்ட பல எதிர்க்கட்சித் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், ப.சிதம்பரத்தை கைது செய்தது மிகுந்த வேதனையை அளிப்பதாக மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.
ப.சிதம்பரம் முன்னாள் மத்திய அமைச்சர் மட்டுமல்லாமல் பொருளாதார நிபுணர் ஆவார். அவரை சிபிஐ கைது செய்திருப்பது முறையற்ற செயல் எனச் சாடிய மம்தா, ஜனநாயகம் ஒழிக்கப்பட்டு வரும் நிலையில் அதனைக் காக்க நீதிமன்றமே முன்வராதது வேதனைக்குரிய செயலாக உள்ளது எனவும் பேசியுள்ளார்.
Also Read
-
ரூ.110.92 கோடியில் துணைமின் நிலையம் : கொளத்தூரில் திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
ரூ.2000 கோடி முதலீடு - 3000 பேருக்கு வேலை : Hitachi நிறுவனத்துடன் தமிழ்நாடு அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம்!
-
“கலவரத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதே அவர்களது நோக்கம்” : சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
-
“ஒன்றிய அரசின் மனிதத்தன்மையற்ற செயல்” : புதிய EPFO விதிகளுக்கு கனிமொழி MP எதிர்ப்பு!
-
மக்களே உஷார் : தொடங்குகிறது வடகிழக்கு பருவமழை - வானிலை அப்டேட் இதோ!