Politics
காஷ்மீரை போன்று மகாராஷ்டிராவையும் இரண்டாக பிரிக்க மத்திய அரசு திட்டம் : ராஜ் தாக்கரே குற்றச்சாட்டு!
ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு ரத்து செய்தது. மேலும், ஜம்மு காஷ்மீர் மாநிலம் இரண்டாகப் பிரிக்கப்பட்டு ஜம்மு காஷ்மீர், லடாக் என இரண்டு யூனியன் பிரதேசங்களாக அறிவித்தது. இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
மும்பை பிரபாதேவியில் நடைபெற்ற கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய ராஜ் தாக்கரே, ''தற்போது காஷ்மீரை இரண்டாகப் பிரித்திருக்கிறார்கள். அடுத்து மகாராஷ்டிராவையும் பிரிக்க திட்டமிடுவார்கள். மகாராஷ்டிரா மாநிலம் பிரிக்கப்பட்டால், உங்கள் வீட்டுக்கு வெளியே துப்பாக்கி ஏந்திய ராணுவம் நிற்கும். இணையதளம், மொபைல் போன் சேவையைத் துண்டித்து விடுவார்கள்.
மத்திய அரசின் அடுத்த இலக்கு மகாராஷ்டிரா மாநிலமாகத்தான் இருக்கும். நீங்கள் பா.ஜ.க.வை புகழ்ந்து பேசினாலும் அவர்கள் உங்களை விட்டுவைக்கமாட்டார்கள். காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை நீக்கியது மக்களின் திசை திருப்பும் முயற்சியாகும். சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டன மூலம் காஷ்மீரில் புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும் என பிரதமர் கூறுகிறார். அப்படி என்றால், சிறப்பு அந்தஸ்து இல்லாத மற்ற மாநிலங்களில் ஏன் புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படவில்லை'' இவ்வாறு கூறினார்.
Also Read
-
”சொந்தக் கட்சிக்காரர்களாலேயே நிராகரிக்கப்பட்ட பழனிசாமி” : முரசொலி!
-
காசா நகரின் 40% பகுதிகளை கைப்பற்றிவிட்டோம், மீதம் இருக்கும் பகுதி விரைவில்... - இஸ்ரேல் அறிவிப்பு !
-
"தமிழ்நாட்டில் பெயர்களுக்கு பின்னால் சாதி இல்லை, பட்டம்தான் உள்ளது" - துணை முதலமைச்சர் உதயநிதி பெருமிதம்!
-
“நம்முடைய அடையாளத்தை ஒருபோதும் மறக்கக் கூடாது” - இங்கிலாந்து வாழ் தமிழர்கள் சந்திப்பில் முதலமைச்சர்!
-
இனி பாதுகாப்பாக பயணம் செய்யலாம்... பொது மக்களின் வசதிக்காக தமிழ்நாடு அரசு திட்டம் விரைவில் அமல் !