Politics
சபாநாயகருக்கு உத்தரவிட மறுப்பு... கர்நாடக அதிருப்தி MLAக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட வாய்ப்பு!
கர்நாடகாவில் கூட்டணி அரசில் அதிருப்தி ஏற்பட்டதால் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 13 பேரும், மஜத கட்சியைச் சேர்ந்த 3 பேரும் ராஜினாமா செய்தனர்.
அதிருப்தி எம்.எல்.ஏக்களின் ராஜினாமாவை ஏற்க மறுத்த சபாநாயகரின் முடிவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் 10 எம்.எல்.ஏக்கள் வழக்குத் தொடர்ந்தனர்.
இதனை விசாரித்த உச்ச நீதிமன்றம் வருகிற செவ்வாய்க்கிழமை வரை (இன்று வரை) கர்நாடகாவில் தற்போதையே நிலையே நீடிக்க உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தது.
இந்த நிலையில், இன்று வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்த போது, எம்.எல்.ஏக்கள் ராஜினாமா விவகாரத்தில் சபாநாயகருக்கு உத்தரவிட முடியாது என்றும், சபாநாயகர் முடிவில் உச்சநீதிமன்றம் தலையிட முடியாது என்றும் தலைமை நீதிபதி அமர்வு தெரிவித்துள்ளது.
இதனையடுத்து, நாளை மறுநாள் நடைபெற உள்ள நம்பிக்கை வாக்கெடுப்பில் ஆளும் கர்நாடக அரசுக்கு எதிராக வாக்களிப்பதை தடுக்கும் வகையில் அதிருப்தி எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்படவும் வாய்ப்புள்ளது.
Also Read
-
அண்ணா வழியில் அயராது உழைப்போம்! சட்டமன்றத் தேர்தலில் உறுதியாக வெல்வோம்! : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மடல்!
-
சட்டம் ஒழுங்கு பற்றிப் பேச என்ன யோக்கியதை உண்டு? : பழனிசாமி ஆட்சியின் அவலங்களை நினைவூட்டிய முரசொலி!
-
“கருப்பு, சிவப்பு, நீலம் கொள்கைகள் மதவாதத்தை வீழ்த்தும்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி!
-
“ரயில் திட்டங்களில் தமிழ்நாடு முழுமுற்றாக புறக்கணிப்பு” : சு.வெங்கடேசன் எம்.பி கண்டனம்!
-
பட்ஜெட்டில் தமிழ்நாட்டை வஞ்சித்துள்ள ஒன்றிய அரசு : மெட்ரோ முதல் நிதிப்பகிர்வு வரை பெரும் ஏமாற்றம்!