Politics
கர்நாடகா,கோவாவைத் தொடர்ந்து மேற்கு வங்கத்திலும் குறுக்கு வழியில் நுழையும் பா.ஜ.க: மம்தாவின் திட்டம் என்ன?
ஆபரேஷன் கமலா - கர்நாடக மாநிலத்தில் செயல்படுத்தத் தொடங்கியது போல், மேற்கு வங்கத்திலும் தனது வித்தையை தீவிரமாக காட்ட தொடங்கியுள்ளது பா.ஜ.க.
நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் மேற்கு வங்கத்தில் 18 சீட்டுகளை கைப்பற்றியதை அடுத்து, ஆளுங்கட்சியான மம்தாவின் திரிணாமுல் காங்கிரஸை எப்படியாவது கவிழ்க்க வேண்டும் என்கிற முனைப்புடன் பல்வேறு திட்டங்களை வகுத்து வருகிறது பா.ஜ.க.
இந்நிலையில், கொல்கத்தாவில் செய்தியாளர்களிடம் பேசிய பா.ஜ.க மூத்த தலைவர் முகுல் ராய், மேற்கு வங்கத்தில் உள்ள திரிணாமுல் காங்கிரஸ், கம்யூனிஸ்ட், காங்கிரஸ் கட்சிகளில் இருந்து 107 எம்.எல்.ஏக்கள் பா.ஜ.கவில் இணைய உள்ளனர் என கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
ஏற்கெனவே, கர்நாடகா, கோவா மாநிலங்களில் பல்வேறு அரசியல் குழப்பங்களை ஏற்படுத்தி மாற்று கட்சி சட்டப்பேரவை உறுப்பினர்களை குதிரை பேரத்தின் மூலம் விலை பேசி வரும் பா.ஜ.க மேற்கு வங்கத்திலும் முழு வீச்சில் இறங்கியுள்ளது.
நாடாளுமன்றத் தேர்தல் வரை மம்தாவின் எஃகு கோட்டையாக கருதப்பட்டு வந்த மேற்கு வங்கத்தை அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு அம்மாநில அரசை வீழ்த்துவதில் முனைப்புடன் பா.ஜ.க செயல்படுவது அதன் மேலிட பேச்சின் மூலம் உறுதியாகியுள்ளதாக தெரிகிறது.
Also Read
-
“குஜராத் மோடியா? இந்த லேடியா?” என்று சவால்விட்டவர் மீது மோடிக்கு திடீர் பாசம்! : முதலமைச்சர் விமர்சனம்!
-
நடிகர் விஜய்யிடம் விவாகரத்து கோரிய மனைவி சங்கீதா! : காரணத்தைக் கேட்டு ரசிகர்கள் அதிர்ச்சி!
-
கோவை : தந்தை பெரியார் நூலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு - பணிகளை விரைந்து முடிக்க உத்தரவு!
-
“குழந்தை வெண்பா நம் மனங்களில் நிறைந்து வாழ்வாள்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி!
-
அரையிறுதி வாய்ப்பை தக்கவைத்த இந்தியா… வெளியேறிய ஜிம்பாப்வே அணி… இந்தியாவுக்கு காத்திருக்கும் சவால்!