Politics
கர்நாடகா,கோவாவைத் தொடர்ந்து மேற்கு வங்கத்திலும் குறுக்கு வழியில் நுழையும் பா.ஜ.க: மம்தாவின் திட்டம் என்ன?
ஆபரேஷன் கமலா - கர்நாடக மாநிலத்தில் செயல்படுத்தத் தொடங்கியது போல், மேற்கு வங்கத்திலும் தனது வித்தையை தீவிரமாக காட்ட தொடங்கியுள்ளது பா.ஜ.க.
நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் மேற்கு வங்கத்தில் 18 சீட்டுகளை கைப்பற்றியதை அடுத்து, ஆளுங்கட்சியான மம்தாவின் திரிணாமுல் காங்கிரஸை எப்படியாவது கவிழ்க்க வேண்டும் என்கிற முனைப்புடன் பல்வேறு திட்டங்களை வகுத்து வருகிறது பா.ஜ.க.
இந்நிலையில், கொல்கத்தாவில் செய்தியாளர்களிடம் பேசிய பா.ஜ.க மூத்த தலைவர் முகுல் ராய், மேற்கு வங்கத்தில் உள்ள திரிணாமுல் காங்கிரஸ், கம்யூனிஸ்ட், காங்கிரஸ் கட்சிகளில் இருந்து 107 எம்.எல்.ஏக்கள் பா.ஜ.கவில் இணைய உள்ளனர் என கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
ஏற்கெனவே, கர்நாடகா, கோவா மாநிலங்களில் பல்வேறு அரசியல் குழப்பங்களை ஏற்படுத்தி மாற்று கட்சி சட்டப்பேரவை உறுப்பினர்களை குதிரை பேரத்தின் மூலம் விலை பேசி வரும் பா.ஜ.க மேற்கு வங்கத்திலும் முழு வீச்சில் இறங்கியுள்ளது.
நாடாளுமன்றத் தேர்தல் வரை மம்தாவின் எஃகு கோட்டையாக கருதப்பட்டு வந்த மேற்கு வங்கத்தை அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு அம்மாநில அரசை வீழ்த்துவதில் முனைப்புடன் பா.ஜ.க செயல்படுவது அதன் மேலிட பேச்சின் மூலம் உறுதியாகியுள்ளதாக தெரிகிறது.
Also Read
- 
	    
	      
SIR : பீகாரில் நடந்தது இங்கும் நடக்காது என்று உத்தரவாதம் தர தேர்தல் ஆணையம் தயாரா? - முரசொலி கேள்வி !
 - 
	    
	      
“ரூ.1,000 கோடி தொட்டது நம்ம ஸ்கூல் நம்ம ஊரு பள்ளி நிதி!” : நன்றி தெரிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
 - 
	    
	      
“4 ஆண்டுகளில் 19 லட்சம் பேருக்கு வீட்டு மனை பட்டாக்களை வழங்கியுள்ளோம்!” : துணை முதலமைச்சர் பெருமிதம்!
 - 
	    
	      
”இவர்கள் குறை சொல்வது ஒன்றும் ஆச்சரியமில்லை” : ஜெயக்குமார் கருத்துக்கு அமைச்சர் சேகர்பாபு பதிலடி!
 - 
	    
	      
பீகார் மாநிலத்தை 20 ஆண்டாக வறுமையில் வைத்து இருக்கும் நிதிஷ்குமார் : மல்லிகார்ஜுன கார்கே தாக்கு!