Politics
சமூக நீதிக்கு எதிரான இடஒதுக்கீட்டை தமிழகம் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது : வைகோ பேட்டி
திண்டுக்கலில் இருந்து சென்னை எழும்பூர் ரயில் நிலையம் வந்த ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், 10% இட ஒதுக்கீடு விவகாரம் குறித்துப் பேசினார்.
செய்தியாளர்களைச் சந்தித்த வைகோ பேசியதாவது, “சூழலியலாளர் முகிலன் உடல்நலம் மிக மோசமாக உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. அவரது உடல் நலம் குறித்தும், ஏதாவது துன்புறுத்தல் கொடுக்கப்பட்டதா என்பது குறித்தும் ஆராய வேண்டும். அவருக்கு தகுந்த சிகிச்சை அளித்து அவரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்.” என்றார்.
மேலும், பொருளாதார ரீதியில் நலிவடைந்த முன்னேறிய பிரிவினருக்கான 10% இட ஒதுக்கீடு விவகாரத்தில் காங்கிரஸின் நிலைப்பாடு குறித்த கேள்விக்கு பதில் அளித்த வைகோ, “இது ஒரு சமூகநீதிக்கு எதிரான ஒரு செயல். தமிழகம் என்றும் அதை ஏற்றுக்கொள்ளாது; தமிழக அரசும் என்றும் ஏற்றுக் கொள்ளக்கூடாது” எனத் தெரிவித்தார்.
Also Read
-
தமிழ் வளர்ச்சிக் கழகத்தின் பணிகள் தொய்வின்றி நடைபெற வேண்டும்... ரூ.2.15 கோடி வழங்கிய முதலமைச்சர் !
-
”இந்தியா வந்துள்ள மோடி, மணிப்பூர் செல்வாரா?” : பிரதமருக்கு 4 கேள்விகளை எழுப்பிய ஜெய்ராம் ரமேஷ்!
-
”ஊழலில் திளைக்கும் குஜராத் மாடல் ஆட்சி” : ஜிக்னேஷ் மேவானி குற்றச்சாட்டு!
-
”கீழடி விவகாரத்தில் ஒன்றிய அரசின் உள்நோக்கம் வெட்ட வெளிச்சமாக்கி உள்ளது” : அமைச்சர் தங்கம் தென்னரசு!
-
பா.ஜ.க.வுடன் கூட்டணி வைக்கவில்லை; முழு சங்கியாக மாறிவிட்டார் பழனிசாமி : முரசொலி தலையங்கம் கடும் தாக்கு!