Politics
சமூக நீதிக்கு எதிரான இடஒதுக்கீட்டை தமிழகம் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது : வைகோ பேட்டி
திண்டுக்கலில் இருந்து சென்னை எழும்பூர் ரயில் நிலையம் வந்த ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், 10% இட ஒதுக்கீடு விவகாரம் குறித்துப் பேசினார்.
செய்தியாளர்களைச் சந்தித்த வைகோ பேசியதாவது, “சூழலியலாளர் முகிலன் உடல்நலம் மிக மோசமாக உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. அவரது உடல் நலம் குறித்தும், ஏதாவது துன்புறுத்தல் கொடுக்கப்பட்டதா என்பது குறித்தும் ஆராய வேண்டும். அவருக்கு தகுந்த சிகிச்சை அளித்து அவரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்.” என்றார்.
மேலும், பொருளாதார ரீதியில் நலிவடைந்த முன்னேறிய பிரிவினருக்கான 10% இட ஒதுக்கீடு விவகாரத்தில் காங்கிரஸின் நிலைப்பாடு குறித்த கேள்விக்கு பதில் அளித்த வைகோ, “இது ஒரு சமூகநீதிக்கு எதிரான ஒரு செயல். தமிழகம் என்றும் அதை ஏற்றுக்கொள்ளாது; தமிழக அரசும் என்றும் ஏற்றுக் கொள்ளக்கூடாது” எனத் தெரிவித்தார்.
Also Read
-
SIR : “அதிமுக - பாஜக களத்துக்கு வராதபோதுதான் சந்தேகமாக இருக்கிறது...“ - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
235-க்கும் மேற்பட்ட உணவு வகைகள்... 4 நாட்களுக்கு... களைகட்டும் பெசன்ட் நகரில் உணவுத் திருவிழா!
-
இறந்த 4 மாதக் குழந்தையை 20 ரூ. பிளாஸ்டிக் பையில் கொண்டு சென்ற அவலம்.. ஜார்கண்ட் சோகத்தின் பின்னணி என்ன?
-
SIR மூலம் சுமார் 1 கோடி வாக்காளர்கள் நீக்கம்: “தமிழ்நாட்டை குறிவைத்துள்ள பாஜக” - திருமாவளவன் MP கண்டனம்!
-
மனித விலங்கு மோதல்களை கட்டுப்படுத்த நடவடிக்கை.. அதிநவீன கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையம் திறப்பு!