Politics
சமூக நீதிக்கு எதிரான இடஒதுக்கீட்டை தமிழகம் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது : வைகோ பேட்டி
திண்டுக்கலில் இருந்து சென்னை எழும்பூர் ரயில் நிலையம் வந்த ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், 10% இட ஒதுக்கீடு விவகாரம் குறித்துப் பேசினார்.
செய்தியாளர்களைச் சந்தித்த வைகோ பேசியதாவது, “சூழலியலாளர் முகிலன் உடல்நலம் மிக மோசமாக உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. அவரது உடல் நலம் குறித்தும், ஏதாவது துன்புறுத்தல் கொடுக்கப்பட்டதா என்பது குறித்தும் ஆராய வேண்டும். அவருக்கு தகுந்த சிகிச்சை அளித்து அவரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்.” என்றார்.
மேலும், பொருளாதார ரீதியில் நலிவடைந்த முன்னேறிய பிரிவினருக்கான 10% இட ஒதுக்கீடு விவகாரத்தில் காங்கிரஸின் நிலைப்பாடு குறித்த கேள்விக்கு பதில் அளித்த வைகோ, “இது ஒரு சமூகநீதிக்கு எதிரான ஒரு செயல். தமிழகம் என்றும் அதை ஏற்றுக்கொள்ளாது; தமிழக அரசும் என்றும் ஏற்றுக் கொள்ளக்கூடாது” எனத் தெரிவித்தார்.
Also Read
-
🔴|2026 சட்டமன்றத் தேர்தல்: உடனுக்குடன் வாக்குப்பதிவு நிலவரம்!
-
”பரபரக்கும் களம்.. தி.மு.க மற்றும் கூட்டணிக் கட்சியினருடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இறுதிக்கட்ட ஆலோசனை”!
-
”வெற்றி மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக்கே! விழிப்புணர்வு அவசியம்”: கழகத்தினருக்கு முதலமைச்சர் மடல்!
-
அண்ணா மேம்பாலம் தொடங்கி கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் வரை.. சென்னையை வளப்படுத்திய திமுக!
-
மீண்டும் கழக ஆட்சி - மக்களின் எழுச்சியே சாட்சி : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிக்கை!