Politics
சாதி ஆணவப் படுகொலைகளுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் திருமாவளவன் ஆவேசம்!
தமிழகம் உள்பட நாடு முழுவதும் சாதி ஆணவப் படுகொலை அரங்கேறி வருகிறது. இதனை மாநில அரசுகள் தடுக்க நடவடிக்கை எதுவும் மேற்கொள்ளவில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது. கடந்த 2018ம் ஆண்டு வெளிவந்த ஒரு ஆய்வறிக்கை, ஓராண்டில் 80-க்கும் மேற்பட்ட ஆணவக் கொலைகள் நடந்திருப்பதாகவும், முந்தைய 3 ஆண்டுகளில் முந்நூறுக்கும் மேற்பட்ட சாதி ஆணவப் படுகொலைகள் நடந்திருப்பதாகவும் தெரிவிக்கிறது.
இதில் தமிழகத்தில் தருமபுரியில் இளவரசன், சேலத்தில் கோகுல்ராஜ், உடுமலைப்பேட்டையில் சங்கர், ஓசூரில் நந்தீஷ் - சுவாதி தம்பதியர், தற்போது கோவை மேட்டுப்பாளையம் ஸ்ரீரங்கராயன் - வர்ஷினி பிரியா என மற்ற மாநிலங்களைப் பின்தள்ளி தமிழகம் ஆணவப் படுகொலையில் முதலிடத்தில் உள்ளது.
இதனைக் கண்டித்து பல அமைப்புகள் குரல் கொடுத்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன. மேலும் இதுகுறித்து நாடாளுமன்றத்தில் சிதம்பரம் மக்களவை தொகுதி எம்.பி தொல்.திருமாவளவன் கோரிக்கை ஒன்றை வலியுறுத்தியுள்ளார்.
கோவை மேட்டுப்பாளையத்தில் லட்சுமி பிரியா மற்றும் கனகராஜ் ஆகியோர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். கலப்புத் திருமணம் செய்ததால் ஹேமாவதி என்ற பெண் அவரது குடும்பத்தினரால் கொலை செய்யப்பட்டுள்ளார். சூழலைப் புரிந்துகொண்டு ஆணவக் கொலைகளை தடுப்பது தொடர்பான மசோதாவை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்றும் தொல்.திருமாவளவன் கோரிக்கை விடுத்துள்ளார்.
Also Read
-
அப்போது தோனி, இப்போது KL ராகுல்: சர்ச்சையில் அணி உரிமையாளர்... வீரர்கள் மத்தியில் ஏற்படும் பாதிப்பு என்ன?
-
சர்வாதிகாரத்திற்கு சம்மட்டி அடி : அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜாமீன்... இந்தியா கூட்டணி தலைவர்கள் வரவேற்பு !
-
நட்சத்திரம் போல காட்சியளித்த விண்வெளி ஆய்வு மையம்... குஷியில் சென்னை மக்கள்!
-
கிரிக்கெட்டை அழிக்கும் IPL அதிரடி : ஒரே ஆண்டில் மாறிய டி20 கிரிக்கெட்டின் முகம் : ஒரு பகுப்பாய்வு !
-
நீட் முறைகேடு : “எள்ளி நகையாடியவர்கள் இப்போது மவுனம் காப்பதேன்?” - கனிமொழி NVN சோமு கேள்வி !