Politics
ஜோலார்பேட்டையிலிருந்து தண்ணீர் கொண்டுவர 3 வாரமாகும் என்பது வேடிக்கை : கே.எஸ்.அழகிரி
தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி நேற்றையதினம் மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அந்த சந்திப்பின் போது அவர் கூறியதாவது, "வருகிற சட்டமன்ற கூட்டத்தொடரில் தி.மு.க கொண்டுவரும் தீர்மானங்களை காங்கிரஸ் கட்சி வரவேற்று ஆதரிக்கும். தி.மு.க - காங்கிரஸ் கட்சிக்கான கூட்டணி உள்ளாட்சி தேர்தலிலும் தொடரும். தமிழகத்தில் உள்ள மதச்சார்பற்ற கூட்டணி கொள்கை அடிப்படையில் உருவாக்கப்பட்ட கூட்டணி என அவர் தெரிவித்தார்.
மேலும் தமிழகத்தில் தண்ணீர் பஞ்சத்தைத் தடுக்க அரசு எந்த வித தீவிர முயற்சியும் மேற்கொள்ளவில்லை. பூமியில் இருந்து நிலவிற்கு செல்வதற்கு கூட 3 வாரங்கள் ஆகாது, அனால் ஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்கு ரயிலில் தண்ணீர் கொண்டுவருவதற்கு மூன்று வாரங்கள் ஆகும் என எடப்பாடி அரசு கூறுவது வேடிக்கையானது.
தற்போது கடுமையான பஞ்சம் ஏற்பட்டுள்ளது. மழைக்கு வாய்ப்பு இல்லை என முன்பே வானிலை மையம் அறிவித்திருக்கிறது. இதனை கருத்தில் கொண்டு அ.தி.மு.க அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்டிருக்க வேண்டும் ஆனால் அதனைச் செய்ய அரசு தவறியுள்ளது. இது ஆளும் அ.தி.மு.க-வின் தோல்வியையே காட்டுகிறது.
மேலும் கர்நாடக அரசு காவிரி மேலாண்மை வாரியத்தின் விதிமுறைகளை மதிக்கவேண்டும், தற்போது வழங்கவேண்டிய தண்ணீரை கர்நாடகா வழங்கவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
Also Read
-
விதிமீறல்களுக்கு பெயர்போன பா.ஜ.க! : நடவடிக்கை எடுக்காத தேர்தல் ஆணையம்!
-
பாகிஸ்தான் உதவியை நாடும் பா.ஜ.க! : தேர்தல் விதிமுறைகளை தகர்க்கும் மோடி அரசு!
-
குற்றவாளிகளுக்கு தரப்படும் ஜாமீன், முதல்வர்களுக்கு மறுக்கப்படுகிறது : பா.ஜ.க.வின் அடக்குமுறை அரசியல்!
-
”திராவிட மாடல் ஆட்சியில் மக்கள் மனங்களில் தாண்டவமாடும் மகிழ்ச்சி” : கி.வீரமணி வாழ்த்து!
-
”அரசியல் சாசனம் இல்லாமல் நாட்டை ஆட்சி செய்ய நினைக்கும் மோடி” : ராகுல் காந்தி தாக்கு!