Politics
ஜோலார்பேட்டையிலிருந்து தண்ணீர் கொண்டுவர 3 வாரமாகும் என்பது வேடிக்கை : கே.எஸ்.அழகிரி
தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி நேற்றையதினம் மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அந்த சந்திப்பின் போது அவர் கூறியதாவது, "வருகிற சட்டமன்ற கூட்டத்தொடரில் தி.மு.க கொண்டுவரும் தீர்மானங்களை காங்கிரஸ் கட்சி வரவேற்று ஆதரிக்கும். தி.மு.க - காங்கிரஸ் கட்சிக்கான கூட்டணி உள்ளாட்சி தேர்தலிலும் தொடரும். தமிழகத்தில் உள்ள மதச்சார்பற்ற கூட்டணி கொள்கை அடிப்படையில் உருவாக்கப்பட்ட கூட்டணி என அவர் தெரிவித்தார்.
மேலும் தமிழகத்தில் தண்ணீர் பஞ்சத்தைத் தடுக்க அரசு எந்த வித தீவிர முயற்சியும் மேற்கொள்ளவில்லை. பூமியில் இருந்து நிலவிற்கு செல்வதற்கு கூட 3 வாரங்கள் ஆகாது, அனால் ஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்கு ரயிலில் தண்ணீர் கொண்டுவருவதற்கு மூன்று வாரங்கள் ஆகும் என எடப்பாடி அரசு கூறுவது வேடிக்கையானது.
தற்போது கடுமையான பஞ்சம் ஏற்பட்டுள்ளது. மழைக்கு வாய்ப்பு இல்லை என முன்பே வானிலை மையம் அறிவித்திருக்கிறது. இதனை கருத்தில் கொண்டு அ.தி.மு.க அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்டிருக்க வேண்டும் ஆனால் அதனைச் செய்ய அரசு தவறியுள்ளது. இது ஆளும் அ.தி.மு.க-வின் தோல்வியையே காட்டுகிறது.
மேலும் கர்நாடக அரசு காவிரி மேலாண்மை வாரியத்தின் விதிமுறைகளை மதிக்கவேண்டும், தற்போது வழங்கவேண்டிய தண்ணீரை கர்நாடகா வழங்கவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
Also Read
-
தமிழ்நாட்டில் மீட்கப்பட்ட சிறுமி.. சிறையில் அடைத்து பாலியல் வன்கொடுமை செய்த உ.பி. போலீஸ்.. நீதிபதி ஷாக்!
-
“அநீதிக்கு எதிராக அனைவரையும் ஓரணியில் திரட்டுவதற்கான முயற்சி - இது மண்ணைக் காக்கும் பரப்புரை” : முரசொலி!
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!