Politics
28ம் தேதி கூடுகிறது தமிழக சட்டசபை : எடப்பாடிக்கு தலைவலி கொடுக்க காத்திருக்கும் தி.மு.க !
தமிழக சட்டசபை வருகிற 28ம் தேதி காலை 10 மணிக்கு கூடும் என்று சட்டசபை செயலாளர் சீனிவாசன் அதிகார பூர்வமாக அறிவித்துள்ளார். சட்டசபை 28ம் தேதி கூடியதும் மறைந்த உறுப்பினர்களுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டு ஒத்தி வைக்கப்படும். ஜூலை 1ம் தேதி முதல் சட்டசபை நிகழ்ச்சிகள் தொடங்கும்.
இந்த கூட்டத்தொடர் சுமார் ஒரு மாதம் நடைபெறும். குடிநீர் பிரச்சினை, உள்ளாட்சி தேர்தல் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை எழுப்ப தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தயாராகி வருகின்றன. சபாநாயகர் தனபால் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவர தி.மு.க கடிதம் கொடுத்துள்ளது. இதனால், சட்டசபை கூடியதும் முதல் நிகழ்வாக சபாநாயகர் மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் எடுத்து கொள்ளப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.
இதனிடையே, 24ம் தேதி காலை 11 மணியளவில், தமிழக அமைச்சரவை கூட்டம் கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. முதல்வர் பழனிசாமி தலைமையில் நடைபெறும் இக்கூட்டத்தில், முக்கிய அம்சங்கள் குறித்து விவாதிக்கப்படுகிறது.
Also Read
-
"ஓ.பன்னீர்செல்வம் வரவு நல்வரவாகட்டும்! தமிழ்நாடு வெல்லட்டும்!" : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க-வில் இணைந்தார் ஓ.பன்னீர்செல்வம்!
-
"தியாகத்தின் அடையாளமாய்... கொள்கையில் இமயமாய்..." விடைபெற்றுள்ளார் தோழர் நல்லகண்ணு! - முரசொலி!
-
உயிர்நீத்த 22 தியாகிகளுக்கு நினைவுத் தூண் : தமிழில் முதல் நாவல் எழுதிய மாயூரம் முன்சீப் வேதநாயகம் சிலை!
-
இதுதான் நீங்கள் எனக்கு கொடுக்கும் பிறந்தநாள் பரிசு : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்!