Politics
28ம் தேதி கூடுகிறது தமிழக சட்டசபை : எடப்பாடிக்கு தலைவலி கொடுக்க காத்திருக்கும் தி.மு.க !
தமிழக சட்டசபை வருகிற 28ம் தேதி காலை 10 மணிக்கு கூடும் என்று சட்டசபை செயலாளர் சீனிவாசன் அதிகார பூர்வமாக அறிவித்துள்ளார். சட்டசபை 28ம் தேதி கூடியதும் மறைந்த உறுப்பினர்களுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டு ஒத்தி வைக்கப்படும். ஜூலை 1ம் தேதி முதல் சட்டசபை நிகழ்ச்சிகள் தொடங்கும்.
இந்த கூட்டத்தொடர் சுமார் ஒரு மாதம் நடைபெறும். குடிநீர் பிரச்சினை, உள்ளாட்சி தேர்தல் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை எழுப்ப தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தயாராகி வருகின்றன. சபாநாயகர் தனபால் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவர தி.மு.க கடிதம் கொடுத்துள்ளது. இதனால், சட்டசபை கூடியதும் முதல் நிகழ்வாக சபாநாயகர் மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் எடுத்து கொள்ளப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.
இதனிடையே, 24ம் தேதி காலை 11 மணியளவில், தமிழக அமைச்சரவை கூட்டம் கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. முதல்வர் பழனிசாமி தலைமையில் நடைபெறும் இக்கூட்டத்தில், முக்கிய அம்சங்கள் குறித்து விவாதிக்கப்படுகிறது.
Also Read
-
“தொகுதி மறுவரையறைக்கு எதிராக நாளை (ஏப்.16) கருப்புக்கொடிப் போராட்டம்!” : முதல்வர் மு.க.ஸ்டாலின் அழைப்பு!
-
தொகுதி மறுவரையறை : வடக்கிற்கு ஆதாயம்... தெற்கிற்கு இழப்பு... தமிழ்நாடு சந்திக்கவிருக்கும் பேராபத்து என்ன?
-
“வேளாண்மையில் தாக்குதல் நடத்துவது பா.ஜ.க.வுக்கு புதிதல்ல!” : முரசொலி தலையங்கம் கண்டனம்!
-
“தி.மு.க.வின் இன்னொரு முகத்தை நீங்கள் பார்க்க வேண்டி இருக்கும்!“: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை!
-
“தமிழர்களைப் படிப்பறிவற்றவர்கள் என்பதா? பியூஷ்கோயல் நாவை அடக்கிப் பேச வேண்டும்!” : முதலமைச்சர் கண்டனம்!