Politics
சிவசேனாவை சேர்ந்தவர் தான் அடுத்த முதல்வர் : பா.ஜ.க - சிவசேனா கூட்டணியில் புகைச்சல் !
மஹாராஷ்டிரா மாநிலத்தில் பா.ஜ.க கட்சி சிவசேனாவுடன் கூட்டணி அமைத்து ஆட்சி செய்து வருகிறது. அம்மாநில முதல்வராக பா.ஜ.கவை சேர்ந்த தேவேந்திர பட்னாவிஸ் உள்ளார். இந்நிலையில் நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் சிவசேனா கட்சி பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டது.
மகாராஷ்டிரா மாநிலத்தில் மொத்தம் உள்ள 48 மக்களவை தொகுதிகளில் பாஜக கட்சி 23 இடங்களையும், சிவசேனா கட்சி 18 இடங்களையும் கைப்பற்றியது. பா.ஜ.க கட்சி மீண்டும் மத்தியில் தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தது. பிரதமர் தலைமையிலான அமைச்சரவையில் கூட்டணி கட்சியான சிவசேனா கட்சிக்கு ஒரு அமைச்சர் பதவியை மட்டுமே வழங்கியது.
இந்நிலையில், சிவசேனா கட்சியின் அதிகாரபூர்வ நாளேடான சாமனாவில் அக்கட்சியின் 53வது ஆண்டு விழாவை முன்னிட்டு எழுதப்பட்ட தலையங்கத்தில், இவ்வாறு தெரிவிக்கப்பட்டு உள்ளது. சிவசேனா ஆண்டு விழாவை முன்னிட்டு மராட்டிய மாநில சட்டமன்ற கட்டிடத்திற்கு காவி வண்ண சாயம் பூசுமாறு அரசுக்கு சிவசேனா கோரிக்கை விடுத்துள்ளது. மேலும் கட்சியின் 54வது ஆண்டு விழாவின் போது, சிவசேனாவின் கட்சியைச் சேர்ந்தவர் ஒருவர் தான் மராட்டியத்தின் முதல்வராக இருப்பார் என்றும் தலையங்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிவசேனாவின் தலைவர் உத்தவ் தாக்ரே,தமது மகன் ஆதித்யா தாக்ரேவை அரசியலுக்கு கொண்டு வர முயற்சி செய்து வரும் நிலையில், இந்த தலையங்கம் அதனை உறுதி செய்யும் வகையில் உள்ளது. மராட்டிய மாநிலத்தின் அடுத்த முதல்வர் பதவி சிவசேனாவுக்கு தான் என்ற சாமானாவின் தலையங்கம் பாஜக - சிவசேனா கூட்டணியில் புகைச்சலை ஏற்படுத்தி உள்ளது.
Also Read
-
“வடசென்னையை வளர்ந்த சென்னையாக மாற்ற ரூ.8,000 கோடி ஒதுக்கீடு!” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உரை!
-
சென்னையில் ரூ.13.56 கோடியில் நவீன வசதிகளுடன் ‘முதல்வர் திருமண மாளிகை’ திறப்பு! : முழு விவரம் உள்ளே!
-
“இனி ‘கருணை’ இல்லை! ‘உரிமை’தான்!” : ஜாக்டோ-ஜியோ அமைப்பின் நன்றி மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை!
-
அசாம் பா.ஜ.க.வின் வெளிப்படையான வெறுப்பு! : இஸ்லாமியர்களை அச்சுறுத்துவதற்காக தண்டனை இல்லையா?
-
“தமிழ்நாட்டுக்கான இரயில்வே திட்டங்கள் : தலையிட்டு தீர்வு காணவேண்டும்” - பிரதமருக்கு முதல்வர் கடிதம்!