Politics
பா.ஜ.க மீண்டும் ஆட்சி அமைத்திருப்பது துரதிருஷ்ட வசமானது - சோனியா காந்தி சாடல்!
லோக் சபா தேர்தலில் உத்தர பிரதேசத்தில் உள்ள ரேபரேலி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார் காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி.
அதன் பின்னர், காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்றக் குழு தலைவராக ஒருமனதாகவும் சோனியா காந்தி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
இதனையடுத்து, தேர்தலில் தனக்கு வாக்களித்து வெற்றி பெறச்செய்த ரேபரேலி தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக அங்கு மூன்று நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.
அப்போது மக்கள் மத்தியில் பேசிய அவர், ”ஆட்சி அமைப்பதற்காக மக்களை கவர்ந்து சூழ்ச்சிகளை மேற்கொண்டது பா.ஜ.க. அதேபோல், மீண்டும் பா.ஜ.க. ஆட்சியமைத்திருப்பது நாட்டுக்கே துரதிருஷ்டமானது” எனவும் சாடியுள்ளார். மேலும், இந்திய தேர்தல் நடைமுறைகள் மீது பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ளது எனவும் சோனியா காந்தி கூறினார்.
Also Read
-
“வெளியானது வெள்ளை அறிக்கை அல்ல, வெற்று அறிக்கை.. விரைவில் பதில் கூறுகிறேன்” : தங்கம் தென்னரசு!
-
குளத்தில் வாத்து பிடிக்கச் சென்ற அண்ணன், தம்பி : திடீரென நடந்த சோகம்!
-
“விவசாயத்தை அழிக்கும்.. ஹைட்ரோ கார்பன் திட்டங்களுக்கு அனுமதியளிக்கக் கூடாது” : CPI(M) வலியுறுத்தல்!
-
“தமிழ்நாட்டை பீகார், உத்தரப்பிரதேசமாக மாற்றிய த.வெ.க அரசு” : தி.மு.க அயலக அணி விமர்சனம்!
-
“ஈவு இரக்கமற்ற காட்டாட்சி...!" - த.வெ.க அரசை கடுமையாகச் சாடிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின்!