Politics
பா.ஜ.க மீண்டும் ஆட்சி அமைத்திருப்பது துரதிருஷ்ட வசமானது - சோனியா காந்தி சாடல்!
லோக் சபா தேர்தலில் உத்தர பிரதேசத்தில் உள்ள ரேபரேலி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார் காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி.
அதன் பின்னர், காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்றக் குழு தலைவராக ஒருமனதாகவும் சோனியா காந்தி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
இதனையடுத்து, தேர்தலில் தனக்கு வாக்களித்து வெற்றி பெறச்செய்த ரேபரேலி தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக அங்கு மூன்று நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.
அப்போது மக்கள் மத்தியில் பேசிய அவர், ”ஆட்சி அமைப்பதற்காக மக்களை கவர்ந்து சூழ்ச்சிகளை மேற்கொண்டது பா.ஜ.க. அதேபோல், மீண்டும் பா.ஜ.க. ஆட்சியமைத்திருப்பது நாட்டுக்கே துரதிருஷ்டமானது” எனவும் சாடியுள்ளார். மேலும், இந்திய தேர்தல் நடைமுறைகள் மீது பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ளது எனவும் சோனியா காந்தி கூறினார்.
Also Read
-
“‘முடிந்துவிட்டது’ என்றுதான் சொன்னேன், அது இன்றைக்கு பெரிய வைரலாகிவிட்டது!” : முதலமைச்சர் மு.க்.ஸ்டாலின்!
-
ரூ.6 கோடி மதிப்பீட்டில் ‘மதுரை ஒலிம்பிக் அகாடமி’ திறப்பு! : முழு விவரம் உள்ளே!
-
“தமிழ்நாட்டிற்குத் தமிழ்த்தாய் வாழ்த்தை உறுதி செய்த கரந்தை தமிழ்ச் சங்கம்!” : துணை முதல்வர் உதயநிதி உரை!
-
மாநிலங்களவை தேர்தல் : தி.மு.க மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் மனுத்தாக்கல்!
-
திருச்சியில் திரள்வோம்! திராவிட மாடல் 2.0 ஆட்சியை அமைப்போம்! : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மடல்!