Politics
பா.ஜ.க மீண்டும் ஆட்சி அமைத்திருப்பது துரதிருஷ்ட வசமானது - சோனியா காந்தி சாடல்!
லோக் சபா தேர்தலில் உத்தர பிரதேசத்தில் உள்ள ரேபரேலி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார் காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி.
அதன் பின்னர், காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்றக் குழு தலைவராக ஒருமனதாகவும் சோனியா காந்தி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
இதனையடுத்து, தேர்தலில் தனக்கு வாக்களித்து வெற்றி பெறச்செய்த ரேபரேலி தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக அங்கு மூன்று நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.
அப்போது மக்கள் மத்தியில் பேசிய அவர், ”ஆட்சி அமைப்பதற்காக மக்களை கவர்ந்து சூழ்ச்சிகளை மேற்கொண்டது பா.ஜ.க. அதேபோல், மீண்டும் பா.ஜ.க. ஆட்சியமைத்திருப்பது நாட்டுக்கே துரதிருஷ்டமானது” எனவும் சாடியுள்ளார். மேலும், இந்திய தேர்தல் நடைமுறைகள் மீது பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ளது எனவும் சோனியா காந்தி கூறினார்.
Also Read
-
“தமிழ்நாடு இரத்ததானத்தில் முன்னோடி மாநிலமாக திகழ்கிறது!” : தேசிய இரத்த தான நாளில் அமைச்சர் மா.சு பேச்சு!
-
“10,000 கிராமங்களைச் சேர்ந்த மக்களுடன் உரையாடுகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!” : ககன்தீப் சிங் தகவல்!
-
நமக்காக தேர்தல் பிரச்சாரம் செய்து வரும் ஆளுநர் ஆர்.என்.ரவி : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கிண்டல்!
-
சென்னை மெட்ரோ ரயில் 2 ஆம் கட்ட திட்டம் - நவீன வசதிகளுடன் ரயில் நிலையங்கள் : ரூ.250.47 கோடி ஒப்பந்தம்!
-
அமைச்சர் பதவியை பறிக்கும் மசோதா : ஒன்றிய அரசின் திட்டத்திற்கு செக் வைத்த இந்தியா கூட்டணி!