Politics
சமூகத்துக்கு ஒன்று என்ற வீதம் 5 துணை முதலமைச்சர்கள்- அசத்தும் ஜெகன்மோகன் ரெட்டி!
பெரும் வெற்றியுடன் ஆந்திராவில் ஆட்சியை பிடித்துள்ள ஜெகன்மோகன் ரெட்டி, பதவியேற்றதில் இருந்து பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.
அதன் தொடர்ச்சியாக ஆந்திரமாநிலத்துக்கு 5 துணை முதலமைச்சர்கள் நியமிக்கப்படுவார்கள் என அறிவித்துள்ளார். ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸின் அனைத்து எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் இந்த முடிவை அறிவித்தார் ஜெகன்.
எஸ்.சி, எஸ்.டி, பி.சி, சிறுபான்மையினர் மற்றும் காப்பு சமூகம், என 5 சமூகத்தின் பிரதிநிதிகளாக 5 துணை முதல்வர்கள் நியமிக்கப்பட இருக்கின்றனர்.
மேலும், தனது அமைச்சரவையில் புதியவர்களுக்கு வாய்ப்பளிக்கப்பட இருப்பதாகவும் முதலமைச்சர் ஜெகன் தெரிவித்துள்ளார். மக்களின் விருப்பத்தின் அடிப்படையில் அமைச்சர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.
வரும் சனிக்கிழமை ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான 25 பேர் கொண்ட அமைச்சரவை பதவியேற்கிறது.
Also Read
-
“மக்களைத் திரட்டி வீதியில் இறங்கி போராடவும் தி.மு.க தயங்காது!” : த.வெ.க அரசுக்கு உதயநிதி எச்சரிக்கை!
-
தமிழகத்தை உலுக்கிய கும்மிடிப்பூண்டி 3 வயது வடமாநில சிறுமி வன்கொடுமை.. வேடிக்கை பார்க்கும் சிங்கப்பெண் படை
-
“நாடாளுமன்றத் தேர்தலின்போது மட்டும் ஆதரவைத் தேடுவதற்கு வெட்கமாக இல்லையா?” : காங்கிரசை சாடிய முரசொலி!
-
“இருளகற்றும் ஒளி சூரியனிடம்தான் உண்டு!” : திராவிட முன்னேற்றக் கழகம் சூளுரை!
-
“மின்வெட்டு.. ரீல்ஸ் போடாமல்.. போர்க்கால நடவடிக்கை எடுங்கள்” : முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி விளாசல்!