Politics
சமூகத்துக்கு ஒன்று என்ற வீதம் 5 துணை முதலமைச்சர்கள்- அசத்தும் ஜெகன்மோகன் ரெட்டி!
பெரும் வெற்றியுடன் ஆந்திராவில் ஆட்சியை பிடித்துள்ள ஜெகன்மோகன் ரெட்டி, பதவியேற்றதில் இருந்து பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.
அதன் தொடர்ச்சியாக ஆந்திரமாநிலத்துக்கு 5 துணை முதலமைச்சர்கள் நியமிக்கப்படுவார்கள் என அறிவித்துள்ளார். ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸின் அனைத்து எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் இந்த முடிவை அறிவித்தார் ஜெகன்.
எஸ்.சி, எஸ்.டி, பி.சி, சிறுபான்மையினர் மற்றும் காப்பு சமூகம், என 5 சமூகத்தின் பிரதிநிதிகளாக 5 துணை முதல்வர்கள் நியமிக்கப்பட இருக்கின்றனர்.
மேலும், தனது அமைச்சரவையில் புதியவர்களுக்கு வாய்ப்பளிக்கப்பட இருப்பதாகவும் முதலமைச்சர் ஜெகன் தெரிவித்துள்ளார். மக்களின் விருப்பத்தின் அடிப்படையில் அமைச்சர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.
வரும் சனிக்கிழமை ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான 25 பேர் கொண்ட அமைச்சரவை பதவியேற்கிறது.
Also Read
-
கருப்புக்கொடி போராட்டம் டிரெயிலர்தான் மெயின் பிக்சரை பார்க்க ஆசைப்பட கூடாது - CM MK Stalin எச்சரிக்கை!
-
தமிழ்நாட்டு மண் ஒருநாளும் பாஜகவின் ஆணவத் திமிருக்கு அடிபணியாது: துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அதிரடி!
-
#Delimitation : தமிழ்நாடெங்கும் எதிர்ப்புத் தீ பரவட்டும் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
‘ரெஸ்ட்’ இல்லாமல் உழைக்கும் பெண்களுக்கு தரும் ‘ரெஸ்பெக்ட்’ உரிமைத்தொகை : சேலத்தில் முதலமைச்சர் பேச்சு!
-
”தொகுதி மறுவரையறை மசோதா.. வடக்கில் வென்று ஆட்சியை பிடிக்கலாம் என்ற நினைப்பு” : முரசொலி விமர்சனம்!