Politics
“மின்னணு இயந்திரம் குறித்து மக்களுக்கு இன்னும் சந்தேகம் தீரவில்லை” : நாராயணசாமி கருத்து!
புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி மற்றும் புதுச்சேரி நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியலிங்கம் ஆகியோர் அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க தலைவர் ஸ்டாலினைச் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.
பின்னா் செய்தியாளர்களை சந்தித்த நராயணசாமி, தமிழகம் கண்டிராத வகையில் தி.மு.க மற்றும் அதன் கூட்டணி கட்சியினர் வெற்றி பெற்றுள்ளனர் எனவும் இந்த வெற்றி தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட முன்னோடியாக உள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும் பேசிய அவர் “மத்தியில் காங்கிரஸ் கட்சி தோல்வியடைந்தது மிகப்பெரிய வருத்தமும் அதிர்ச்சியும் அடையும் வகையில் அமைந்துள்ளது. இந்தத் தேர்தல் தோல்வியையடுத்து மாற்று யூகம் அமைக்க வேண்டியது குறித்து சிந்திக்க வேண்டியுள்ளது” எனத் தெரிவித்தார்.
மேலும், பா.ஜ.க மதத்தை வைத்து தேர்தல் யூகத்தை அமைத்து வெற்றி பெற்றுள்ளது எனவும் மக்கள் தீர்ப்பை ஏற்றுக்கொள்வதாகவும், மின்னணு இயந்திரம் குறித்து மக்களுக்கு இன்னும் சந்தேகம் தீரவில்லை எனவும் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
Also Read
-
இளம்பெண்களின் கவனத்திற்கு... விலையில்லா கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் தடுப்பூசி.. எப்போது செலுத்தப்படும்?
-
“அங்கன்வாடிகளை மாநில அரசிடம் ஒப்படைக்க வேண்டும்...” - திமுக எம்.பி. கிரிராஜன் வலியுறுத்தல்!
-
GSDP வளர்ச்சியில் 16% -தமிழ்நாடு Number One; அதுதான் திராவிட மாடல் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்!
-
விவசாயிகளின் நிவாரணம் - தமிழ்நாடு அரசின் கோரிக்கைக்கு பதில் என்ன? : வில்சன் MP கேள்வி!
-
மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணிகள் எப்போது முடியும்? : நாடாளுமன்றத்தில் கதிர் ஆனந்த் எம்.பி கேள்வி!