Politics
“மின்னணு இயந்திரம் குறித்து மக்களுக்கு இன்னும் சந்தேகம் தீரவில்லை” : நாராயணசாமி கருத்து!
புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி மற்றும் புதுச்சேரி நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியலிங்கம் ஆகியோர் அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க தலைவர் ஸ்டாலினைச் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.
பின்னா் செய்தியாளர்களை சந்தித்த நராயணசாமி, தமிழகம் கண்டிராத வகையில் தி.மு.க மற்றும் அதன் கூட்டணி கட்சியினர் வெற்றி பெற்றுள்ளனர் எனவும் இந்த வெற்றி தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட முன்னோடியாக உள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும் பேசிய அவர் “மத்தியில் காங்கிரஸ் கட்சி தோல்வியடைந்தது மிகப்பெரிய வருத்தமும் அதிர்ச்சியும் அடையும் வகையில் அமைந்துள்ளது. இந்தத் தேர்தல் தோல்வியையடுத்து மாற்று யூகம் அமைக்க வேண்டியது குறித்து சிந்திக்க வேண்டியுள்ளது” எனத் தெரிவித்தார்.
மேலும், பா.ஜ.க மதத்தை வைத்து தேர்தல் யூகத்தை அமைத்து வெற்றி பெற்றுள்ளது எனவும் மக்கள் தீர்ப்பை ஏற்றுக்கொள்வதாகவும், மின்னணு இயந்திரம் குறித்து மக்களுக்கு இன்னும் சந்தேகம் தீரவில்லை எனவும் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
Also Read
-
“என்னை நீங்கள் எந்த நேரத்தில் வேண்டுமானாலும் சந்திக்கலாம்” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!
-
50 ஆரம்ப சுகாதார நிலையங்களில் டயாலிசிஸ் சிகிச்சை வசதி அமைக்கப்படும் : அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்!
-
ஜிம்னாஸ்டிக்ஸ் உள்ளிட்ட 20 விளையாட்டுகளுக்கு பயிற்சியாளர்கள் : பணி நியமன ஆணைகளை வழங்கிய துணை முதலமைச்சர்!
-
“வேளாண்மையில் ஒரு முன்னோடி மாநிலமாக தமிழ்நாடு!” : முரசொலி தலையங்கம் புகழாரம்!
-
“முதலீடுகள் வேலைவாய்ப்புகளாக மாறுவது தமிழ்நாட்டில்தான்” : பேரவையில் பெருமையுடன் சொன்ன அமைச்சர் TRB ராஜா!