Politics
எப்போ ராஜினாமா செய்ய போறீங்க விஜயபாஸ்கர்? - செந்தில்பாலாஜி கேள்வி !
தமிழகத்தில் நாடாளுமன்ற மற்றும் இடைத்தேர்தலுக்கான முடிவுகள் நேற்று வெளிவந்தன. இதில், 38 மக்களவைத் தொகுதிகளில் தி.மு.க. கூட்டணியும், 13 சட்டமன்றத் தொகுதிகளில் தி.மு.க.வும் வெற்றி பெற்று அமோக வரவேற்பை பெற்றுள்ளனர்.
அரவக்குறிச்சி இடைத்தேர்தல் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றிருக்கிறார் திமுக வேட்பாளரான செந்தில்பாலாஜி. 37,957 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக வேட்பாளர் செந்தில்நாதனை தோற்கடித்துள்ளார் செந்தில் பாலாஜி.
முன்னதாக, செந்தில் பாலாஜிக்கு அரவக்குறிச்சி தொகுதியில் டெபாசிட் கிடைத்துவிட்டால் எனது பதவியை ராஜினாமா செய்ய தயார் என போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் பேசியிருந்தார். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக செந்தில் பாலாஜி தற்போது வெற்றிவாகையை சூடியிருக்கிறார்.
இந்த நிலையில், அமைச்சர் பதவியை எப்போது ராஜினாமா செய்ய இருக்கிறீர்கள் என எம்.ஆர். விஜயபாஸ்கருக்கு செந்தில்பாலாஜி கேள்வி எழுப்பியுள்ளார். அவ்வாறு விஜயபாஸ்கர் ராஜினாமா செய்தால் தி.மு.க சார்பில் கரூர் தொகுதி இடைத்தேர்தலுக்கு நிறுத்தப்படும் வேட்பாளர் நிச்சயம் வெற்றிபெறுவார் என உறுதிபட பேசியுள்ளார்.
Also Read
-
துணைவேந்தர் தேடல் குழுவில் ஆளுநரின் பிரதிநிதி… பாஜக-வுக்கு பணியும் தவெக : திமுக எம்.பி. வில்சன் கண்டனம்!
-
மக்களை மட்டுமல்ல யானைகளின் உயிரிழப்பை தடுத்தள்ள தி.மு.க- வின் தொலைநோக்கு திட்டம் : நடந்தது என்ன?
-
‘உரிமைத்தொகை’யால் உருவான மிகப்பெரிய பொருளாதார மாற்றம்! : பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழு தகவல்!
-
அமைச்சர் கீர்த்தனா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் : குழந்தை உரிமைகள் தேசிய ஆணையத்திற்கு சல்மா MP கடிதம்!
-
கரூர் விவகாரம் : ஆதவ் அர்ஜுனா மீது வழக்குப்பதிவு செய்து விசாரிக்க வேண்டும் - சிபிஐக்கு திமுக புகார் மனு!