Politics
எப்போ ராஜினாமா செய்ய போறீங்க விஜயபாஸ்கர்? - செந்தில்பாலாஜி கேள்வி !
தமிழகத்தில் நாடாளுமன்ற மற்றும் இடைத்தேர்தலுக்கான முடிவுகள் நேற்று வெளிவந்தன. இதில், 38 மக்களவைத் தொகுதிகளில் தி.மு.க. கூட்டணியும், 13 சட்டமன்றத் தொகுதிகளில் தி.மு.க.வும் வெற்றி பெற்று அமோக வரவேற்பை பெற்றுள்ளனர்.
அரவக்குறிச்சி இடைத்தேர்தல் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றிருக்கிறார் திமுக வேட்பாளரான செந்தில்பாலாஜி. 37,957 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக வேட்பாளர் செந்தில்நாதனை தோற்கடித்துள்ளார் செந்தில் பாலாஜி.
முன்னதாக, செந்தில் பாலாஜிக்கு அரவக்குறிச்சி தொகுதியில் டெபாசிட் கிடைத்துவிட்டால் எனது பதவியை ராஜினாமா செய்ய தயார் என போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் பேசியிருந்தார். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக செந்தில் பாலாஜி தற்போது வெற்றிவாகையை சூடியிருக்கிறார்.
இந்த நிலையில், அமைச்சர் பதவியை எப்போது ராஜினாமா செய்ய இருக்கிறீர்கள் என எம்.ஆர். விஜயபாஸ்கருக்கு செந்தில்பாலாஜி கேள்வி எழுப்பியுள்ளார். அவ்வாறு விஜயபாஸ்கர் ராஜினாமா செய்தால் தி.மு.க சார்பில் கரூர் தொகுதி இடைத்தேர்தலுக்கு நிறுத்தப்படும் வேட்பாளர் நிச்சயம் வெற்றிபெறுவார் என உறுதிபட பேசியுள்ளார்.
Also Read
-
“எங்களை விமர்சனம் செய்தவர்களுக்கான பதில்தான் இது!” : ‘செயலாக்க’ மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை!
-
“திராவிட மாடல் ஆட்சியில் 1,179 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்” : பெருமையுடன் சொன்ன அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா!
-
2 சூப்பர் ஓவர்கள்… இறுதியில் நடந்த சுவாரசியம்!: ரசிகர்களை இருக்கையின் நுனியில் அமரவைத்த போட்டி!
-
“பா.ஜ.க. அரசு கார்ப்பரேட்டுகளுக்காக கார்ப்பரேட்டுகளால் ஆளப்படும் கார்ப்பரேட் அரசாங்கம்” - முரசொலி!
-
“பாஜக டப்பா எஞ்சின் முன், திராவிட மாடல் Superfast Engine தலைகுனியாது!”: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சூளுரை!