Politics
எப்போ ராஜினாமா செய்ய போறீங்க விஜயபாஸ்கர்? - செந்தில்பாலாஜி கேள்வி !
தமிழகத்தில் நாடாளுமன்ற மற்றும் இடைத்தேர்தலுக்கான முடிவுகள் நேற்று வெளிவந்தன. இதில், 38 மக்களவைத் தொகுதிகளில் தி.மு.க. கூட்டணியும், 13 சட்டமன்றத் தொகுதிகளில் தி.மு.க.வும் வெற்றி பெற்று அமோக வரவேற்பை பெற்றுள்ளனர்.
அரவக்குறிச்சி இடைத்தேர்தல் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றிருக்கிறார் திமுக வேட்பாளரான செந்தில்பாலாஜி. 37,957 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக வேட்பாளர் செந்தில்நாதனை தோற்கடித்துள்ளார் செந்தில் பாலாஜி.
முன்னதாக, செந்தில் பாலாஜிக்கு அரவக்குறிச்சி தொகுதியில் டெபாசிட் கிடைத்துவிட்டால் எனது பதவியை ராஜினாமா செய்ய தயார் என போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் பேசியிருந்தார். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக செந்தில் பாலாஜி தற்போது வெற்றிவாகையை சூடியிருக்கிறார்.
இந்த நிலையில், அமைச்சர் பதவியை எப்போது ராஜினாமா செய்ய இருக்கிறீர்கள் என எம்.ஆர். விஜயபாஸ்கருக்கு செந்தில்பாலாஜி கேள்வி எழுப்பியுள்ளார். அவ்வாறு விஜயபாஸ்கர் ராஜினாமா செய்தால் தி.மு.க சார்பில் கரூர் தொகுதி இடைத்தேர்தலுக்கு நிறுத்தப்படும் வேட்பாளர் நிச்சயம் வெற்றிபெறுவார் என உறுதிபட பேசியுள்ளார்.
Also Read
-
“அணி அணியாய் பங்கெடுப்போம் - மக்கள் மனங்களை வெல்வோம்!” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!
-
கோரிக்கை வைத்த கல்லூரி மாணவி : வீட்டிற்கே சென்று நிறைவேற்றிய துணை முதலமைச்சர் உதயநிதி!
-
“ தமிழ்நாட்டில் நிச்சயமாக தி.மு.க கூட்டணிக்குதான் வெற்றி!” : தி.மு.க எம்.பி கனிமொழி திட்டவட்டம்!
-
3 நாள் மின்சார வாகன (EV) தொழில்நுட்பம் மற்றும் தொழில்முனைவோர் பயிற்சி! : எங்கு? எப்போது?
-
துப்பாக்கியை காட்டி 11 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை : பாஜக ஆட்சி செய்யும் உ.பி-யில் கொடூரம்!