Politics
9 மணி நிலவரம் ; தமிழகத்தில் தி.மு.க வேட்பாளர்கள் தொடர்ந்து முன்னிலை !
17-வது மக்களவை தேர்தல் ஏப்ரல் மாதம் 11-ந் தேதி தொடங்கி கடந்த 19-ந் தேதி வரை 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. நாடு முழுவதும் மொத்தம் உள்ள 543 மக்களவை தொகுதிகளில் வேலூர் தவிர்த்து 542 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடந்தது. தமிழகத்தில் காலியாக இருந்த 22 சட்டசபை தொகுதிகளுக்கும் தேர்தல் நடந்தது. அத்துடன் ஆந்திரா, ஒடிசா, அருணாசலபிரதேசம், சிக்கிம் ஆகிய 4 மாநில சட்டசபைகளுக்கும் தேர்தல் நடத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் நாடு முழுவதும் அனைத்து ஓட்டு எண்ணும் மையங்களிலும் பலத்த பாதுகாப்புடன் இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. தமிழகத்தில் 45 மையங்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. பாராளுமன்ற தேர்தலில் பதிவான வாக்குகளுடன், 22 சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் பதிவான வாக்குகளும் எண்ணப்படுகின்றன.
இந்நிலையில், காலை 9 மணி நிலவரப்படி இந்தியா முழுவதும் பாஜக கூட்டணி 145 இடங்களிலும், காங்கிரஸ் கூட்டணி 84 இடங்களிலும், மற்றவை 65 இடங்களிலும் முன்னிலை வகிக்கிறது. தமிழகத்தை பொறுத்தவரை திமுக கூட்டணி 27 இடங்களிலும் அதிமுக கூட்டணி 1 இடத்திலும் முன்னிலை வகிக்கிறது. 22 சட்டமன்ற இடைத்தேர்தலை பொறுத்த வரை திமுக கூட்டணி 9 இடங்களிலும் அதிமுக கூட்டணி 1 இடத்திலும் முன்னிலை வகிக்கிறது.
திமுக வேட்பாளர்கள் தயாநிதி மாறன், கனிமொழி, அ.ராசா, தமிழச்சி தங்கபாண்டியன், டி.ஆர்.பாலு ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.
Also Read
-
தென் ஆப்பிரிக்காவிற்கு எதிரான தோல்வி: இந்திய அணியில் மாற்றம் நிகழுமா? அரையிறுதிக்கு செல்லுமா இந்தியா?
-
“உங்கள் தூக்கத்தை கெடுத்த surgical strike” - பழனிசாமிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலடி!
-
முதல் நாளே 120 தொகுதிகள்... வீடு வீடாக பரப்புரை... களத்தில் இறங்கியது ஸ்டாலினின் மகளிர் படை!
-
“மாணவர் நலனில் அக்கறை இருப்பதுபோல், நீலிக்கண்ணீர் வடிக்கும் அன்புமணி” : அமைச்சர் கோவி.செழியன் பதிலடி!
-
கொளத்தூர் : 2007 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனைப் பாட்டாக்கள் வழங்கி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!