Politics
9 மணி நிலவரம் ; தமிழகத்தில் தி.மு.க வேட்பாளர்கள் தொடர்ந்து முன்னிலை !
17-வது மக்களவை தேர்தல் ஏப்ரல் மாதம் 11-ந் தேதி தொடங்கி கடந்த 19-ந் தேதி வரை 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. நாடு முழுவதும் மொத்தம் உள்ள 543 மக்களவை தொகுதிகளில் வேலூர் தவிர்த்து 542 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடந்தது. தமிழகத்தில் காலியாக இருந்த 22 சட்டசபை தொகுதிகளுக்கும் தேர்தல் நடந்தது. அத்துடன் ஆந்திரா, ஒடிசா, அருணாசலபிரதேசம், சிக்கிம் ஆகிய 4 மாநில சட்டசபைகளுக்கும் தேர்தல் நடத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் நாடு முழுவதும் அனைத்து ஓட்டு எண்ணும் மையங்களிலும் பலத்த பாதுகாப்புடன் இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. தமிழகத்தில் 45 மையங்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. பாராளுமன்ற தேர்தலில் பதிவான வாக்குகளுடன், 22 சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் பதிவான வாக்குகளும் எண்ணப்படுகின்றன.
இந்நிலையில், காலை 9 மணி நிலவரப்படி இந்தியா முழுவதும் பாஜக கூட்டணி 145 இடங்களிலும், காங்கிரஸ் கூட்டணி 84 இடங்களிலும், மற்றவை 65 இடங்களிலும் முன்னிலை வகிக்கிறது. தமிழகத்தை பொறுத்தவரை திமுக கூட்டணி 27 இடங்களிலும் அதிமுக கூட்டணி 1 இடத்திலும் முன்னிலை வகிக்கிறது. 22 சட்டமன்ற இடைத்தேர்தலை பொறுத்த வரை திமுக கூட்டணி 9 இடங்களிலும் அதிமுக கூட்டணி 1 இடத்திலும் முன்னிலை வகிக்கிறது.
திமுக வேட்பாளர்கள் தயாநிதி மாறன், கனிமொழி, அ.ராசா, தமிழச்சி தங்கபாண்டியன், டி.ஆர்.பாலு ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.
Also Read
-
ரூ.3 ஆயிரத்துடன் கூடிய தமிழர் திருநாள் ‘பொங்கல்’ பரிசுத் தொகுப்பு! : திட்டத்தை தொடங்கி வைத்த முதலமைச்சர்!
-
“‘தான் திருடி, பிறரை நம்பார்’ என்பதைப் போன்றவர்தான் எடப்பாடி பழனிசாமி!” : முரசொலி தலையங்கம் விமர்சனம்!
-
'உங்கள் கனவைச் சொல்லுங்கள்' திட்டத்தை கண்டு ஒப்பாரி ஓலமிடும் பழனிசாமி : அமைச்சர் ரகுபதிக்கு பதிலடி!
-
திண்டுக்கல் மாவட்டத்தில் 2,62,864 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்: 212 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல்!
-
“நீங்கள் மற்றவர்களுக்கு Inspire ஆக இருக்க வேண்டும்”: மாணவர்களுக்கு துணை முதலமைச்சர் உதயநிதி அறிவுறுத்தல்!