Politics
மேற்கு வங்கத்தில் பா.ஜ.க கை ஓங்குகிறதா ? : வருத்தத்தில் மம்தா பானர்ஜி !
மக்களவை தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு, முடிவுகள் தற்போது வெளியாகி வருகிறது. இந்திய அளவில் பா.ஜ.க கூட்டணி பெரிய அளவில் பெரும்பான்மையை நோக்கி சென்று கொண்டுள்ளது. பா.ஜ.க.,வின் தேசிய ஜனநாயக கூட்டணி 300 இடங்களுக்கு மேல் வெல்ல வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
யாரும் எதிர்பாரா வகையில் மேற்கு வங்கத்தில் பா.ஜ.க கட்சி அதிக இடங்களில் முன்னிலை வகிக்கிறது. அங்கு இருக்கும் 42 இடங்களில் 19 இடங்களில் பா.ஜ.க முன்னிலை வகிக்கிறது. 20 இடங்களில்தான் திரிணாமுல் காங்கிரஸ் முன்னிலை வகிக்கிறது.
ஆரம்பத்தில் இருந்தே, மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் - கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு இடையில்தான் கடுமையான போட்டி நிலவி வந்தது. ஆனால், தேர்தலுக்கு சில தினங்களுக்கு முன் அங்கு காட்சி மாறியது. திரிணாமுல் - பா.ஜ.க கட்சிகளிடையே நேரடியாக மோதல் ஏற்பட்டது. தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் திரிணாமுல் கட்சித் தலைவர் மம்தா பானர்ஜியும், பா.ஜ.க முன்னணித் தலைவர்களும் நேரடியாக மோதிக்கொண்டனர்.
அதேபோல வாக்குப்பதிவின் போதும் திரிணாமுல் - பா.ஜ.க தொண்டர்களிடையே மோதல் வெடித்தது. இந்நிலையில், பா.ஜ.க பெற்றிருக்கும் வெற்றி அம்மாநிலத்தில் பா.ஜ.க.,வின் கை ஓங்கி இருப்பதைக் காட்டுகிறது. தற்போது அங்கு தற்போது கம்யூனிஸ்ட் கட்சி ஒரு இடத்தில் கூட முன்னிலை பெறவில்லை. அதேபோல், காங்கிரஸ் கட்சியும் அங்கு முன்னிலை பெறவில்லை.
மேற்கு வங்கத்தில் பா.ஜ.க 20 இடங்களுக்கு மேல் வெல்ல வாய்ப்புள்ளது. 2014 தேர்தலில் பா.ஜ.க 2 இடங்களை மற்றுமே வென்றது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
சர்வதேச அளவில் வைபவ் சூர்யவன்ஷியின் ஆட்டம் தொடக்கம்.. சச்சினை முந்திய வரலாற்று நிகழ்வு : முழு தகவல் அறிய!
-
கோவில் குடமுழுக்கில் பிரச்சனை.. தட்டிக்கேட்ட பெண்ணை கொடூரமாக தாக்கிய தவெக நிர்வாகி -கொந்தளிக்கும் மக்கள்!
-
தவெக அரசின் அட்டூழியம்.. புகாரை அடுக்கிய திமுக.. அதிர்ந்து போன ஆளுநர் மாளிகை! - முழு பட்டியல் இதோ!
-
FIFA 2026: திணறிய அர்ஜென்டினா.. உலகையே திரும்பிப் பார்க்க வைத்த கேப் வெர்டே அணி!
-
"ஆள் பிடிப்பதற்காகவே த.வெ.க ஆட்சி நடக்கிறது!" - ஆளுநரிடம் ஆர்.எஸ்.பாரதி அடுக்கடுக்கான குற்றச்சாட்டு!