Politics
மேற்கு வங்கத்தில் பா.ஜ.க கை ஓங்குகிறதா ? : வருத்தத்தில் மம்தா பானர்ஜி !
மக்களவை தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு, முடிவுகள் தற்போது வெளியாகி வருகிறது. இந்திய அளவில் பா.ஜ.க கூட்டணி பெரிய அளவில் பெரும்பான்மையை நோக்கி சென்று கொண்டுள்ளது. பா.ஜ.க.,வின் தேசிய ஜனநாயக கூட்டணி 300 இடங்களுக்கு மேல் வெல்ல வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
யாரும் எதிர்பாரா வகையில் மேற்கு வங்கத்தில் பா.ஜ.க கட்சி அதிக இடங்களில் முன்னிலை வகிக்கிறது. அங்கு இருக்கும் 42 இடங்களில் 19 இடங்களில் பா.ஜ.க முன்னிலை வகிக்கிறது. 20 இடங்களில்தான் திரிணாமுல் காங்கிரஸ் முன்னிலை வகிக்கிறது.
ஆரம்பத்தில் இருந்தே, மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் - கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு இடையில்தான் கடுமையான போட்டி நிலவி வந்தது. ஆனால், தேர்தலுக்கு சில தினங்களுக்கு முன் அங்கு காட்சி மாறியது. திரிணாமுல் - பா.ஜ.க கட்சிகளிடையே நேரடியாக மோதல் ஏற்பட்டது. தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் திரிணாமுல் கட்சித் தலைவர் மம்தா பானர்ஜியும், பா.ஜ.க முன்னணித் தலைவர்களும் நேரடியாக மோதிக்கொண்டனர்.
அதேபோல வாக்குப்பதிவின் போதும் திரிணாமுல் - பா.ஜ.க தொண்டர்களிடையே மோதல் வெடித்தது. இந்நிலையில், பா.ஜ.க பெற்றிருக்கும் வெற்றி அம்மாநிலத்தில் பா.ஜ.க.,வின் கை ஓங்கி இருப்பதைக் காட்டுகிறது. தற்போது அங்கு தற்போது கம்யூனிஸ்ட் கட்சி ஒரு இடத்தில் கூட முன்னிலை பெறவில்லை. அதேபோல், காங்கிரஸ் கட்சியும் அங்கு முன்னிலை பெறவில்லை.
மேற்கு வங்கத்தில் பா.ஜ.க 20 இடங்களுக்கு மேல் வெல்ல வாய்ப்புள்ளது. 2014 தேர்தலில் பா.ஜ.க 2 இடங்களை மற்றுமே வென்றது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
ஜூம்லா விடும் மோடி அரசு : “மக்களை என்றைக்காவது மகிழச் செய்தது உண்டா?” - கி.வீரமணி சரமாரி கேள்வி!
-
“ஆனைமங்கலம் சோழர் செப்பேடுகளின் உண்மையான இருப்பிடம் தமிழ்மண்ணே!” : முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு!
-
“இல்லாத கல்வித் தகுதியை பெற்றதாக சொல்லும் கல்வி அமைச்சர் ராஜ்மோகன்!” : சரவணன் அண்ணாதுரை விமர்சனம்!
-
“சங்கரன்கோவில் டூ சுவீடன் - பட்டத்தை சமர்ப்பிக்கிறேன்...” : தென்காசி இளைஞருக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து!
-
பணியாளரை காலணியால் தாக்கிய DIG.. காவல்துறையினரின் அதிகார துஷ்பிரயோகம் : தவெக அரசு மீது சீறும் சண்முகம்!