Politics
வாக்கு எண்ணிக்கையின்போது முனைப்பாக இருக்கவேண்டும் : நாராயணசாமி வேண்டுகோள்!
தேர்தல் கருத்துக்கணிப்புகளை நம்ப வேண்டியதில்லை எனவும், வாக்கு எண்ணிக்கை மையத்தில் அனைவரும் முனைப்பாக இருக்கவேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளார் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி நினைவு நாளையொட்டி, புதுச்சேரி காங்கிரஸ் கட்சி அலுவககத்தில் ராஜீவ் காந்தியின் திருவுருவப் படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.
இந்த நிகழ்வில் பேசிய புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி, “மக்களவைத் தேர்தல் அனைவரையுமே குழப்பி இருக்கிறது. தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகள் பொய்யாகும். ஆஸ்திரேலிய பொதுத்தேர்தலில் கருத்துக்கணிப்புக்கு எதிராக தேர்தல் முடிவுகள் வந்துள்ளன.
புதுச்சேரி மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் வைத்தியலிங்கமும், தட்டாஞ்சாவடி இடைத்தேர்தலில் தி.மு.க வேட்பாளர் வெங்கடேசனும் வெற்றி பெறுவார்கள். காங்கிரஸ் கூட்டணி அமோக வெற்றிபெற்று ராகுல் காந்தி பிரதமராக பதவியேற்பார்.
வாக்கு எண்ணிக்கை மையத்தில் அனைவரும் முனைப்பாக இருக்கவேண்டும். நமது வெற்றி வேட்பாளர்கள் வெற்றிக்கான சான்றிதழ் பெறும்வரை நாம் வாக்கு எண்ணிக்கை மையத்தில் இருக்கவேண்டும்.” என தொண்டர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
Also Read
-
நீட் தேர்வுக்கு தயாராகி வந்த மாணவர் தற்கொலை : ராஜஸ்தானில் தொடரும் அதிர்ச்சி சம்பவங்கள் !
-
”பா.ஜ.கவுக்கு 150 இடங்கள்கூட கிடைக்காது” : தேர்தல் பிரச்சாரத்தில் ராகுல் காந்தி திட்டவட்டம்!
-
”தமிழ்நாடு முழுவதும் தடையில்லா சீரான மும்முனை மின்சாரம்” : தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா தகவல்!
-
தமிழ்நாட்டுக்கு வந்த பீகார் கல்வித்துறை அதிகாரிகள் : தமிழக கல்வி முறையை பீகாரில் அமல்படுத்த திட்டம் !
-
“பிரதமர் மோடியின் பேச்சு தரங்கெட்டு இருக்கிறது” - வைகோ கடும் விமர்சனம் !