Politics
அசோக் லவாசா புகார் மீது தக்க நடவடிக்கை தேவை : காங்கிரஸ் வேண்டுகோள்!
மோடி, அமித்ஷா மீதான தேர்தல் நடத்தை விதிமீறல் புகார் தொடர்பாக தனது தரப்பு எதிர்ப்பை பதிவு செய்யாத தலைமை தேர்தல் ஆணையருக்கு எதிராக இரண்டாவது தேர்தல் ஆணையர் அசோக் லவாசா கடிதம் எழுதியிருந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், அசோக் லவாசா முன்வைத்த குற்றச்சாட்டு மீது நியாயமான, நேர்மையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என காங்கிரஸ் சார்பில் அக்கட்சியின் தலைமைச் செய்தித் தொடர்பாளர் ரன்தீப் சிங் சுர்ஜிவாலா அறிக்கை மூலம் தெரிவித்துள்ளார்.
அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, தலைமை தேர்தல் ஆணையருக்கு மோடி அளித்த அழுத்தத்தின் காரணமாகவே அவர் மீதான, அசோக் லவாசாவின் எதிர்ப்பு கருத்துகள் பதிவு செய்யப்படாமல் இருந்தது.
அசோக் லவாசாவின் கருத்துகளை பதிவு செய்யாமல், மோடி மீதும், அமித்ஷா மீதும் வைக்கப்பட்ட புகார்களை நிராகரித்து அவர்களுக்கு நன்மதிப்பை வழங்கும் செயலில் தேர்தல் ஆணையம் மூழ்கிவிட்டது என்றும் ரன்தீப் கூறியுள்ளார்.
மோடியின் அதிகார துஷ்பிரயோகத்தால் நாட்டின் அரசியலமைப்புச் சட்டத்தின் மாண்பும், மரபும் கொல்லப்பட்டிருப்பது தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகளின் மூலம் தெளிவாகத் தெரியவருகிறது. தேர்தல் ஆணையம் எப்போதும் ஒருமித்துச் செயல்பட வேண்டுமே தவிர, பாரபட்சமாக செயல்படக் கூடாது. இது, மோடியையும், அமித்ஷாவையும் காப்பாற்றுவதற்கான முயற்சியாகும் என தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், அசோக் லவாசா புகார் கடிதம் குறித்து விளக்கம் அளித்த சுனில் அரோரா, மூவர் குழுவில் ஒருமித்த கருத்து எட்டப்படாத காரணத்தால், பெரும்பான்மை முடிவு இறுதியானது என்றார். மேலும், என் மீதான புகாரில் பொது விவாதம் செய்ய தான் எப்போதும் தயார் என்று கூறிவிட்டு, தேர்தல் சமயத்தில் விவாதிக்க நேரம் இல்லை என மழுப்பலாக பதிலளித்திருக்கிறார் சுனில் அரோரா.
Also Read
-
100 நாள் வேலை திட்டத்தை குழிதோண்டி புதைக்கும் பா.ஜ.க அரசு : அமைச்சர் ஐ.பெரியசாமி கண்டனம்!
-
தனியார்மயமாக்கப்பட்ட ஏர் இந்தியா இதுதானா? : தனது அனுபவத்தை பகிர்ந்து குற்றம்சாடிய தயாநிதி மாறன் MP!
-
வாகை சூடிய வடக்கு மண்டல சந்திப்பு; கலைஞைரின் கொள்கைப் பேரன் என்பதை செயலால் நிரூபித்து வரும் உதயநிதி!
-
“கலைஞரின் வழக்கத்தை நானும் தொடர்ந்து கடைப்பிடித்து வருகிறேன்!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
-
“நீங்கள் ஒவ்வொருவரும் ஒரு பெரிய ‘Sports Star’-ஆக நிச்சயம் வருவீர்கள்!” : துணை முதலமைச்சர் உதயநிதி பேச்சு!