Politics
எடப்பாடி பழனிசாமியை சமூக விரோதி என்று சொன்னாலும் தவறில்லை : முத்தரசன் காட்டம் !
சூலூர் தொகுதியில் திமுக வேட்பாளர் பொங்கலூர் பழனிச்சாமிக்கு ஆதரவாக இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன் வாக்கு சேகரித்தார்.
அப்போது பேசிய அவர், ஹைட்ரோ கார்பன் திட்டத்தை புதுச்சேரியில் அனுமதிக்க மாட்டோம் என அம்மாநில முதலமைச்சர் கூறும்போது, எடப்பாடி பழனிசாமி மவுனம் காப்பதாக தெரிவித்துள்ளார். 8 வழிச்சாலை திட்டத்திற்கு தடை என்னால் தான் கிடைத்தது என்று கூறிக்கொள்ளும் அன்புமணி ராமதாஸ், 8 வழிச்சாலை திட்டம் நிறைவேற்றப்படும் என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி சொன்ன போது அமைதி காப்பது ஏன் என கேள்வி எழுப்பினார்.
பொள்ளாச்சி பாலியல் வழக்கில் குற்றவாளிகளை காப்பாற்ற அதிமுக அரசு முயல்வதாகவும், குற்றவாளிகளை காப்பாற்ற முயலும் எடப்பாடி பழனிசாமியை சமூக விரோதி என்று சொன்னாலும் தவறில்லை என கூறினார்.
Also Read
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!
-
பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை : டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!