Politics
எடப்பாடி பழனிசாமியை சமூக விரோதி என்று சொன்னாலும் தவறில்லை : முத்தரசன் காட்டம் !
சூலூர் தொகுதியில் திமுக வேட்பாளர் பொங்கலூர் பழனிச்சாமிக்கு ஆதரவாக இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன் வாக்கு சேகரித்தார்.
அப்போது பேசிய அவர், ஹைட்ரோ கார்பன் திட்டத்தை புதுச்சேரியில் அனுமதிக்க மாட்டோம் என அம்மாநில முதலமைச்சர் கூறும்போது, எடப்பாடி பழனிசாமி மவுனம் காப்பதாக தெரிவித்துள்ளார். 8 வழிச்சாலை திட்டத்திற்கு தடை என்னால் தான் கிடைத்தது என்று கூறிக்கொள்ளும் அன்புமணி ராமதாஸ், 8 வழிச்சாலை திட்டம் நிறைவேற்றப்படும் என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி சொன்ன போது அமைதி காப்பது ஏன் என கேள்வி எழுப்பினார்.
பொள்ளாச்சி பாலியல் வழக்கில் குற்றவாளிகளை காப்பாற்ற அதிமுக அரசு முயல்வதாகவும், குற்றவாளிகளை காப்பாற்ற முயலும் எடப்பாடி பழனிசாமியை சமூக விரோதி என்று சொன்னாலும் தவறில்லை என கூறினார்.
Also Read
-
ஆவின் பச்சை நிற பால் விலை உயர்வா?.. : அவதூறு பரப்பும் தவெக.. - உண்மையை விளக்கிய TN Fact Check!
-
விறுவிறுப்பாக தயாராகும் தி.மு.க தேர்தல் அறிக்கை! : 4 நாட்களில் 52,080 பரிந்துரைகள் தெரிவித்த பொதுமக்கள்!
-
உலகம் உங்கள் கையில் : “அனைத்து வகையிலும் வெற்றிமிகு மாநிலமாக இருக்கிறது தமிழ்நாடு!” - முரசொலி புகழாரம்!
-
100-வது நாளை நெருங்கும் பிக்பாஸ் வீடு; கராசார பொங்கல் விருந்துக்கு தயாராகும் போட்டியாளர்கள்!
-
90 அணைகளை கண்காணிக்க : ஒருங்கிணைந்த மேலாண்மை மைய கட்டடத்தை திறந்து வைத்தார் துணை முதலமைச்சர் உதயநிதி!