Politics
மக்கள் ஆட்சி மாற்றத்தை எதிர்பார்க்கிறார்கள் - புதுவை முதல்வர் நாராயணசாமி பேட்டி !
சென்னை விமான நிலையத்தில் புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது அவர் பேசியதாவது:-
மோடி கொடுத்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை. சரக்கு மற்றும் சேவை வரி கொண்டுவந்ததால் விலைவாசி அதிகமானது, பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை அதிகமானது, வேலையில்லாத் திண்டாட்டம் அதிகமாக உள்ளது. இந்த நிலையில் நரேந்திர மோடி மீண்டும் வாய்ப்பு கேட்டு வருகிறார். மக்கள் வாய்ப்பு கொடுக்க கூடாது என்று முடிவு செய்து உள்ளனர். காங்கிரஸ் இந்த தேர்தலில் வெற்றி பெறும்.
நரேந்திர மோடி அரசு முடக்கிய திட்டங்கள் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததும் நிறைவேற்றப்படும்.வட மாநில மக்களை பொறுத்தவரையில் ஆட்சி மாற்றத்தை எதிர்பார்க்கிறார்கள். வட மாநில காங்கிரஸ் தலைவர்களிடம் கலந்து பேசும்போது வியாபாரிகள், விவசாயிகள், அரசு ஊழியர்கள், சிறுபான்மையினர், பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர், மீனவ சமுதாயம் உள்ளிட்டோர் நரேந்திர மோடி மீண்டும் ஆட்சி அமைக்க வரக்கூடாது என்று மாற்றத்தை எதிர்பார்த்து வருவதாகவும் தெரிவித்தனர்.
நீட் தேர்வால் மிகப்பெரிய குழப்பம் ஏற்பட்டுள்ளது. மதிப்பெண் அடிப்படையில் மருத்துவ இடங்களை நிரப்பும், வாய்ப்பை மாணவர்களுக்கு உருவாக்குவோம். தமிழகம் புதுச்சேரியில் மாணவர்களின் மருத்துவ கனவை தகர்த்து எறிந்து இருக்கிறார் மோடி. மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்படும்போது நீட் தேர்வு முழுமையாக ரத்து செய்யப்படும்.
புதுச்சேரியில் தண்ணீர் பற்றாக்குறை இல்லை. புதிதாக போர் போடுவதற்கு தேர்தல் ஆணையத்திடம் கலந்தாலோசிக்கப்பட்டது. தேர்தல் விதிமுறைகள் நடைமுறையில் இருப்பதால் மக்கள் நலத்திட்டங்களை நிறைவேற்ற தாமதம் ஆகிறது என்றார்.
மேலும், துணைநிலை ஆளுநர் கிரண்பேடி சென்னை உயர் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய, அரசு அனுமதி வேண்டும். கிரண்பேடி அவரது சொந்த பெயரால் தன் சொந்த செலவில் மட்டும் மேல்முறையீடு செய்ய அதிகாரம் உண்டு. துணைநிலை ஆளுநர் அரசின் அனுமதியில்லாமல் மேல்முறையீடு செய்ய முடியாது. அதற்கான நிதியை அமைச்சரவை ஒதுக்காது என்றார்.
Also Read
-
தனியார் பல்கலைக்கழகங்கள் (திருத்தச்) சட்டமுன்வடிவு மறு ஆய்வு செய்யப்படும்: அமைச்சர் கோவி. செழியன் அறிக்கை
-
நண்பரின் பைகளை நிரப்புவதில் மோடி மும்முரமாக இருப்பது ஏன்? : மல்லிகார்ஜுன கார்கே கேள்வி!
-
SIR - தமிழ்நாடு சட்டப் பேரவைத் தேர்தலை சீர்குலைக்கும் முயற்சி : தொல்.திருமாவளவன் MP கண்டனம்!
-
வடகிழக்கு பருவமழை : நோய் பரவலை தடுக்க தமிழ்நாட்டில் தயார் நிலையில் மருத்துவ முகாம்கள்!
-
“நலம் காக்கும் ஸ்டாலின்” திட்ட முகாம் - 6,37,089 பேர் பயன் : அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்!