Politics
சாத்வி பிராக்யா சிங் தாக்கூர் பிரச்சாரம் செய்ய தேர்தல் ஆணையம் தடை!
மகாராஷ்டிரா மாநிலம் மலேகானில் கடந்த 2008-ஆம் ஆண்டு முஸ்லீம்கள் மீது குறிவைத்து வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலில் 7 பேர் கொல்லப்பட்டனர். 100-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.
இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்களில் ஒருவரான சாத்வி பிராக்யா சிங் தாக்கூர் என்ற பெண்ணுக்கு நீதிமன்றம் 7 ஆண்டு சிறை தண்டனை விதித்தது. பின்னர், இந்த வழக்கு தேசிய புலனாய்வு முகமைக்கு மாற்றப்பட்ட போது சாத்வி பிராக்யா சிங் விடுதலை செய்யப்பட்டார்.
மத்தியப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள போபால் பாராளுமன்ற தொகுதி பாஜக வேட்பாளராக சாத்வி பிரக்யா சிங் தாக்கூர் அறிவிக்கப்பட்டுள்ளார்.
தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வரும் சாத்வி பிராக்யா சிங் தாக்கூர் அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்ட சம்பவத்தில் நானும் ஒரு அங்கமாக இருந்ததை எண்ணி பெருமைப்படுவதாக தெரிவித்தார். அவரின் இந்த கருத்து தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறிய வகையில் அமைந்திருந்ததாக தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
இந்த புகார் மீது விா ரணை நடத்திய தேர்தல் ஆணையம், இன்று (2-ம் தேதி) காலை 6 மணியில் 72 மணி நேரத்துக்கு சாத்வி பிராக்யா சிங் தாக்கூர் பிரசாரம் செய்ய கூடாது என தடை விதித்துள்ளது. பா.ஜ.க தலைவர்கள் இது போல் சர்ச்சைக்குரிய வகையில் பேசுவது தொடர்கதையாக உள்ளது.
Also Read
-
கையை கட்டிக்கொண்டு இருக்க முடியுமா? : ஆளுநர் வழக்கில் உச்சநீதிமன்றம் சரமாரிக் கேள்வி!
-
”தமிழ்நாட்டில் இரு மடங்கு அதிகரித்த பட்டு உற்பத்தி” : பெருமையுடன் சொன்ன அமைச்சர் தா.மோ.அன்பரசன்!
-
கருப்பு சட்ட மசோதா : “எதிர்க்கட்சிகளை அழிக்க நினைக்கும் மட்ட ரகமான உத்தி இது” - ஜவாஹிருல்லா கண்டனம்!
-
குலசேகரப்பட்டினம் ஏவுதளத்துக்காக ரூ.985.96 கோடி நிதி ஒதுக்கீடு! : கனிமொழி எம்.பி.க்கு ஒன்றிய அரசு பதில்!
-
”அப்பட்டமான கருப்புச் சட்டம்” : அரசியல் சட்டத் திருத்த மசோதாவுக்கு கி.வீரமணி கண்டனம்!