Politics
தி.மு.க ஆட்சியில் மக்களின் அடிப்படைத் தேவைகள் நிறைவேற்றப்படும்: மு.க.ஸ்டாலின் !
தூத்துக்குடியில் ஒட்டப்பிடாரம் கோரம்பள்ளம் பகுதியில் போட்டியிடும் வேட்பாளர் சண்முகத்தை ஆதரித்து திறந்த வேனில் தி.மு.க.தலைவர் மு.க.ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொண்டார்.இந்த பிரச்சாரத்தின் போது தி.மு.க.தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:
“இன்று காலை தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பெண் ஒருவர் கோரிக்கையை முன்வைத்துள்ளார். அவர் எங்கள் பகுதியில் உள்ள நீர் நிலையங்களைத் தூர்வாரி விவசாயத்திற்கு வழிவகை செய்யவேண்டும் என்று அவர் தெரிவித்தார். மேலும் அடிப்படை வசதிகளை இந்த அரசங்கம் செய்துதரவில்லை எனக் குற்றம் சாட்டினர். நீர் நிலைகளை பாதுகாக்கவும், அடிப்படைத் தேவைகளுக்கும் உள்ளாட்சி செயல்படுத்தினால் போதும். நிச்சயமாக தி.மு.க. ஆட்சியில் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படும்.
கேபிள் டிவி கட்டணத்தைக் குறைப்போம். தூத்துக்குடி பகுதியில் தீங்கு விளைவிக்காத வகையில் நிறுவனங்கள் தொடங்கி வேலையை உறுதிப்படுத்துவோம். உப்பளங்களில் வேலை செய்யும் தொழிலாளர்கள் உரிமை பாதுகாக்கப்படும் என அவர் தெரிவித்தார்.
இந்த பிரச்சாரத்தின் போது தேர்தல் அறிக்கையில் அளித்த வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றுவேன். என நம்பிக்கை அளித்தார். எனவே இந்த ஆட்சியின் கொடுமைகளை அகற்ற தி.மு.க வேட்பாளரை ஆதரித்து பெருவாரியான வாக்குவித்தியாத்தில் வெற்றிபெறச் செய்யுங்கள்” என கேட்டுக்கொண்டார். இதை தொடர்ந்து ஒட்டப்பிடாரம் பகுதியில் வீதி விதியாக சென்று வணிகர்கள் மற்றும் தொழிலாளர்களிடம் வாக்குசேகரித்தார்.
Also Read
-
துணைவேந்தர் தேடல் குழுவில் ஆளுநரின் பிரதிநிதி… பாஜக-வுக்கு பணியும் தவெக : திமுக எம்.பி. வில்சன் கண்டனம்!
-
மக்களை மட்டுமல்ல யானைகளின் உயிரிழப்பை தடுத்தள்ள தி.மு.க- வின் தொலைநோக்கு திட்டம் : நடந்தது என்ன?
-
‘உரிமைத்தொகை’யால் உருவான மிகப்பெரிய பொருளாதார மாற்றம்! : பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழு தகவல்!
-
அமைச்சர் கீர்த்தனா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் : குழந்தை உரிமைகள் தேசிய ஆணையத்திற்கு சல்மா MP கடிதம்!
-
கரூர் விவகாரம் : ஆதவ் அர்ஜுனா மீது வழக்குப்பதிவு செய்து விசாரிக்க வேண்டும் - சிபிஐக்கு திமுக புகார் மனு!