Politics
திருப்பரங்குன்றம் அதிமுக வேட்பாளரை தகுதி நீக்கம் செய்ய கோரி மனு!
திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி ,சூலூர், ஒட்டப்பிடாரம் ,ஆகிய நான்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கு வாக்குப்பதிவு மே19 நடைபெற உள்ளது .இந்த நான்கு தொகுதிகளில் ஏப்ரல் 22 ஆம் தேதி வேட்புமனு தாக்கல் நிறைவு பெற்றுள்ளது. வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை முடிவடைந்த நிலையில் ,திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் முனியாண்டி 2 இடங்களில் வாக்காளர் அடையாள அட்டை வைத்திருப்பது தெரிய வந்துள்ளது.
உண்மையை மறைத்து ஒரே இடத்தில் மட்டும் குறிப்பிட்டு வாக்காளர் அடையாள அட்டை நகலை இணைத்து வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். இது முற்றிலும் தேர்தல் விதிமுறை மீறல் ஆகும் ஆகவே வேட்பாளர் முனியாண்டியின் வேட்பு மனுவை நிராகரித்து அவரை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் .
வேட்பாளர்கள் தங்கள் வேட்புமனுவை தாக்கல் செய்யும் பொழுது தேர்தல் ஆணைய விதிமுறைகளை வேட்பாளர்கள் பின்பற்ற வேண்டியது கட்டாயம் ..அப்படி தேர்தல் விதிகளை மீறும் பட்சத்தில் அவர்களை தகுதி நீக்கம் செய்யும் அதிகாரம் தேர்தல் ஆணையத்திற்கு உண்டு . திருப்பரங்குன்றம் அதிமுக வேட்பாளரை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகுவிடம் மனு அளித்துள்ளார்.
Also Read
-
“கலைஞரின் வழக்கத்தை நானும் தொடர்ந்து கடைப்பிடித்து வருகிறேன்!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
-
“நீங்கள் ஒவ்வொருவரும் ஒரு பெரிய ‘Sports Star’-ஆக நிச்சயம் வருவீர்கள்!” : துணை முதலமைச்சர் உதயநிதி பேச்சு!
-
‘தலைவர்’ இல்லாமல் இயங்கும் தேசிய சிறுபான்மையினர் ஆணையம்! : திருச்சி சிவா எம்.பி கண்டனம்!
-
“மெட்ரோ திட்டத்தில் தமிழ்நாட்டிற்கு எதிராக செயல்படும் ஒன்றிய பாஜக அரசு!”: திமுக எம்.பி கிரிராஜன் கண்டனம்!
-
‘பொருநை’ அருங்காட்சியகப் பணிகள் 97% நிறைவு! : டிச.21 அன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்!