Politics
திருப்பரங்குன்றம் அதிமுக வேட்பாளரை தகுதி நீக்கம் செய்ய கோரி மனு!
திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி ,சூலூர், ஒட்டப்பிடாரம் ,ஆகிய நான்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கு வாக்குப்பதிவு மே19 நடைபெற உள்ளது .இந்த நான்கு தொகுதிகளில் ஏப்ரல் 22 ஆம் தேதி வேட்புமனு தாக்கல் நிறைவு பெற்றுள்ளது. வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை முடிவடைந்த நிலையில் ,திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் முனியாண்டி 2 இடங்களில் வாக்காளர் அடையாள அட்டை வைத்திருப்பது தெரிய வந்துள்ளது.
உண்மையை மறைத்து ஒரே இடத்தில் மட்டும் குறிப்பிட்டு வாக்காளர் அடையாள அட்டை நகலை இணைத்து வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். இது முற்றிலும் தேர்தல் விதிமுறை மீறல் ஆகும் ஆகவே வேட்பாளர் முனியாண்டியின் வேட்பு மனுவை நிராகரித்து அவரை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் .
வேட்பாளர்கள் தங்கள் வேட்புமனுவை தாக்கல் செய்யும் பொழுது தேர்தல் ஆணைய விதிமுறைகளை வேட்பாளர்கள் பின்பற்ற வேண்டியது கட்டாயம் ..அப்படி தேர்தல் விதிகளை மீறும் பட்சத்தில் அவர்களை தகுதி நீக்கம் செய்யும் அதிகாரம் தேர்தல் ஆணையத்திற்கு உண்டு . திருப்பரங்குன்றம் அதிமுக வேட்பாளரை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகுவிடம் மனு அளித்துள்ளார்.
Also Read
-
MLA தொடங்கி அரசு ஆலோசகர் வரை.. ஜோதிடத்துக்கு முக்கியத்துவம்.. மூட நம்பிக்கைக்கு செவிசாய்க்கும் விஜய்!
-
நீட் தேர்வு ரத்து - “நீட்ல Scam இல்ல, நீட்டே ஒரு Scam-தான்” : தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு!
-
”நம்பிக்கை வாக்கெடுப்பில் தவெக-விற்கு சிக்கல்... தவெக எம்.எல்.ஏ-வுக்கு உயர் நீதிமன்றம் அதிரடி தடை!”
-
“பேரவையின் மாண்புகளையும் காத்திட வேண்டும்” : பேரவை தலைவர், துணைத் தலைவருக்கு தி.மு.க தலைவைர் வாழ்த்து!
-
“திமுக என்றுமே ஒரு ஆக்க சக்தியாகவே திகழும்”: சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!