Politics
திருப்பரங்குன்றம் அதிமுக வேட்பாளரை தகுதி நீக்கம் செய்ய கோரி மனு!
திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி ,சூலூர், ஒட்டப்பிடாரம் ,ஆகிய நான்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கு வாக்குப்பதிவு மே19 நடைபெற உள்ளது .இந்த நான்கு தொகுதிகளில் ஏப்ரல் 22 ஆம் தேதி வேட்புமனு தாக்கல் நிறைவு பெற்றுள்ளது. வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை முடிவடைந்த நிலையில் ,திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் முனியாண்டி 2 இடங்களில் வாக்காளர் அடையாள அட்டை வைத்திருப்பது தெரிய வந்துள்ளது.
உண்மையை மறைத்து ஒரே இடத்தில் மட்டும் குறிப்பிட்டு வாக்காளர் அடையாள அட்டை நகலை இணைத்து வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். இது முற்றிலும் தேர்தல் விதிமுறை மீறல் ஆகும் ஆகவே வேட்பாளர் முனியாண்டியின் வேட்பு மனுவை நிராகரித்து அவரை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் .
வேட்பாளர்கள் தங்கள் வேட்புமனுவை தாக்கல் செய்யும் பொழுது தேர்தல் ஆணைய விதிமுறைகளை வேட்பாளர்கள் பின்பற்ற வேண்டியது கட்டாயம் ..அப்படி தேர்தல் விதிகளை மீறும் பட்சத்தில் அவர்களை தகுதி நீக்கம் செய்யும் அதிகாரம் தேர்தல் ஆணையத்திற்கு உண்டு . திருப்பரங்குன்றம் அதிமுக வேட்பாளரை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகுவிடம் மனு அளித்துள்ளார்.
Also Read
-
“குஜராத் மோடியா? இந்த லேடியா?” என்று சவால்விட்டவர் மீது மோடிக்கு திடீர் பாசம்! : முதலமைச்சர் விமர்சனம்!
-
நடிகர் விஜய்யிடம் விவாகரத்து கோரிய மனைவி சங்கீதா! : காரணத்தைக் கேட்டு ரசிகர்கள் அதிர்ச்சி!
-
கோவை : தந்தை பெரியார் நூலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு - பணிகளை விரைந்து முடிக்க உத்தரவு!
-
“குழந்தை வெண்பா நம் மனங்களில் நிறைந்து வாழ்வாள்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி!
-
அரையிறுதி வாய்ப்பை தக்கவைத்த இந்தியா… வெளியேறிய ஜிம்பாப்வே அணி… இந்தியாவுக்கு காத்திருக்கும் சவால்!