Politics
முகத்தை மூடிச் செல்லக்கூடாது - இலங்கை அதிபர் அதிரடி
ஈஸ்டர் தினத்தன்று இலங்கைத் தலைநகர் கொழும்பில் உள்ள முக்கிய தேவாலயங்கள், நட்சத்திர விடுதிகளில் தற்கொலைப்படையினரை குறிவைத்துத் தாக்குதலை நடத்தினர். 8 இடங்களில் நடத்தப்பட்ட தொடர் வெடிகுண்டு தாக்குதல்களால் 250க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். தற்போது வரை நாடுமுழுவதும் பல இடங்களில் வெடிபொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இந்த சூழலில் இலங்கையில் இன்றளவும் பதற்றம் குறையவில்லை.
இதனை கருத்தில் கொண்டு இலங்கை அதிபர் சிறிசேனா உத்தரவு ஒன்றைப் பிறப்பித்துள்ளார். அதில் இலங்கையின் பொது இடங்களில் மக்கள் அடையாளத்தை மறைக்கும்படி புர்கா போன்ற ஆடைகள் அணிவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் பாதுகாப்பு நடவடிக்கைக்காக இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவு அவசர கால அதிகாரத்தைப் பயன்படுத்தி அமுல்படுத்தப்படுள்ளது. மேலும் நல்லிணக்கத்தை உருவாக்குவதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் அதிபர் மாளிகை விளக்கம் அளித்துள்ளது.
Also Read
-
TARGET செய்யும் தவெக அரசு? : “Mental Torture பண்ணாதீங்க..” - கண்ணீருடன் VIDEO வெளியிட்ட மாணவர் பாரதிதாசன்
-
“தி.மு.க படிக்க வைக்கும்” : மாணவர் பாரதிதாசனுக்காக குரல் கொடுத்த மு.க.ஸ்டாலின்!
-
சமூகநீதி நாளில் சமூக அநீதி : மாணவர் பாரதிதாசனுக்கு நெருக்கடி தருவது கேவலத்தின் உச்சம் - உதயநிதி ஆவேசம்!
-
லண்டன் பயணம் : செய்தியாளர்களைச் சந்திக்காமல் சென்ற முதலமைச்சர் விஜய்!
-
மும்மொழி திட்டத்தைக் கைவிட வேண்டும் : ஒன்றிய அரசுக்கு, உச்சநீதிமன்றம் வலியுறுத்தியது என்ன?