Politics
ஆட்சி பற்றி பேசாமல் புல்வாமா பற்றி மோடி பேசுகிறார்: புதுவை முதல்வர் குற்றச்சாட்டு!
நேற்றைய தினம் திருச்செந்தூரில் செய்தியாளர்கள் சந்தித்த புதுச்சேரி முதல்வர் நாராயண சாமி,
மோடி தலைமையிலான ஆட்சியில் தலித் மற்றும் சிறுபான்மை மக்கள் பாதுகாப்பின்றி வாழ்கின்றனர். அதுமட்டுமின்றி மோடி தனது ஆட்சி 5 ஆண்டுகள் செய்த சாதனை பற்றி பேசாமல், தேர்தல் நேரத்தில் புல்வாமா தாக்குதல் குறித்து பேசுகிறார். 10 கோடி பேருக்கு வேலை வாய்ப்பு வழங்குவதாக கூறினார். ஆனால் அதனை அவர் நிறைவேற்றவில்லை.
மோடி ஆட்சியில் தமிழகம் மிகவும் வஞ்சிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக விவசாயிகளை பாதிக்கும் எட்டு வழிச்சாலை திட்டம், ஹைட்ரோகார்பன் திட்டம் மற்றும் தமிழக மாணவர்களை பாதிக்கும் நீட் தேர்வு போன்ற மோசமான திட்டங்களால் தமிழக மக்களை பாதிப்புள்ளாகியுள்ளார்.
இதனை மனதில் வைத்துக்கொண்டு மக்களவை தேர்தலில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கும் மத்தியில் காங்கிரஸ்க்கும் மக்கள் வாக்களித்திருப்பர்கள். எனவே தமிழகம் மற்றும் புதுவையில் 39 தொகுதிகளிலும், 22 சட்டமன்ற இடைத்தேர்தலில் எங்கள் கூட்டணி நிச்சயம் வெற்றி பெரும். இதனால் மத்தியிலும் மாநிலத்திலும் ஆட்சி மாற்றம் எற்படும். என அவர் தெரிவித்தார்.
Also Read
-
“திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில்.. பிரம்மாண்ட விழா.. கழகத்தில் இணைந்த 5,000 மாற்றுக் கட்சியினர்”
-
“ஓய்வை அறிவித்த இங்கிலாந்து வீரர் பென் ஸ்டோக்ஸ்.. கட்டாயப் படுத்தப்பட்டாரா?” - முழு விவரம் அறிய!
-
“எப்போது வேண்டுமானாலும் தேர்தல் வரலாம்.. உடன்பிறப்புக்களே தயாராகுங்கள்” - கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின்!
-
தவெக அமைச்சர்களுக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பிய சபரீசன்... 15 நாட்கள் மட்டுமே கெடு... விவரம் உள்ளே!
-
போதை பொருள் பயன்படுத்தியது போல் வீடியோ : தவெக அமைச்சருக்கு எதிராக களமிறங்கும் திமுக மாணவர் அணி !