Politics
ஆர்.பி. உதயகுமாரின் அறையில் எவ்வளவு பணம் சிக்கியது? - அமைதி காக்கும் வருமான வரித்துறை
தேர்தல் கண்காணிப்புக் குழு மற்றும் வருமான வரித்துறை சார்பில் இது வரை தமிழகத்தில் 139 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு தெரிவித்துள்ளார்.
139 கோடி ரூபாயில், வருமானவரித்துறை மட்டும் 55 கோடி ரூபாயை பறிமுதல் செய்துள்ளது. ஆளுங்கட்சியினர் வாக்காளர்களுக்கு தலா 2,000 ரூபாய் கொடுப்பதாக தி.மு.க தலைவர் ஸ்டாலின் குற்றம் சாட்டியிருந்தார். இந்நிலையில், நேற்று இரவு 10 மணிக்கு சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.எல்.ஏக்கள் விடுதியில் வருமான வரித்துறை மற்றும் தேர்தல் பறக்கும் படை இணைந்து சோதனை நடத்தினர்.
பிளாக் சி-யில் உள்ள அமைச்சர் ஆர்.பி.உதயகுமாரின் அறை உள்ளிட்டு, 3 அறைகளில் சோதனை நடந்தது. 2 மணி நேரத்துக்கும் மேல் நடந்த சோதனையில் எவ்வளவு பணம் பறிமுதல் செய்யப்பட்டது என்ற தகவலை வருமான வரித்துறை அதிகாரிகள் வெளியிடவில்லை.
இது பற்றி தங்களுக்கும் வருமான வரித்துறை அதிகாரப்பூர்வ தகவல் அளிக்கவில்லை என்று சத்ய பிரதா சாகு தெரிவித்துள்ளார். வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்ய பணம் பதுக்கப்பட்டிருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் சோதனை நடத்தப்பட்டது. ஆனால், சோதனை முடிவில் தகவல் ஏதும் வெளியிடப்படாததால், ஆளுங்கட்சிக்கு வருமான வரித்துறையும், தேர்தல் ஆணையமும் துணை போகிறதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
Also Read
-
90% நிறைவடைந்த முதல்வர் விஜய் அறை மாற்ற வேலை : புதிய டெண்டர் விட்ட அரசு... சர்ச்சையில் பொதுப்பணித்துறை!
-
“திருவொற்றியூரில் மாணவர் கொலை.. கோமாளி சர்க்கார் மீது பயமில்லை” : உதயநிதி ஸ்டாலின் காட்டம்!
-
‘தவெக-வால் கட்டமைக்கப்பட்ட பொய்.. அமைச்சர் மரிய வில்சனால் அம்பலப்படும் விஜய்’ : முரசொலி விமர்சனம்!
-
தவெக அரசின் முதலீட்டாளர்கள் கூட்டம்.. திமுக முன்னாள் தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜாவின் 5 கேள்விகள்!
-
‘தூய சக்தி ஆட்சியில் போதை சக்திகளின் நடமாட்டம்.. கொடூர ஆட்சிக்கு கோவையே சாட்சி’ : முரசொலி விமர்சனம்!