murasoli thalayangam
“உள்ளாட்சிப் பதவிகள் ஏலம் : ஜனநாயகத்தின் வேர்களில் வெந்நீர் ஊற்றும் தேர்தல் ஆணையம்” - முரசொலி தலையங்கம்
“சட்ட விதிமுறைகளின் படி முறையாக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற வேண்டும் என்ற நோக்கில் நீதிமன்றத்தை அணுகிய தி.மு.க-வின் மீது பழி போட்டு, மூன்றாண்டுகளாக நடைபெறாமல் இருந்த தேர்தலை மேலும் தாமதம் செய்து விடலாம் என்ற அ.தி.மு.க அரசின் சூழ்ச்சி தோற்றுப்போய் விட்டது.
அ.தி.மு.க ஆட்சியில் எந்த அளவுக்கு நிர்வாக அமைப்புகள் தரம்தாழ்ந்து வருகின்றனர் என்பதற்கு மாநில தேர்தல் ஆணையம் அண்மைக்கால உதாரணம். தேர்தல் ஆணையர், அ.தி.மு.க ஆட்சியாளர்களுடன் இறுகக் கை கோர்த்துக்கொண்டு தனித்தன்மையைக் கரைத்து அவர்களுடன் இரண்டறக் கலந்து எல்லா செயல்களிலும் ஈடுபடுவது மாநில நிர்வாகத்திற்கு நேர்ந்திருக்கும் மற்றொரு கேடு.
பல கிராமங்களில் ஊராட்சித் தலைவர், துணைத் தலைவர், வார்டு உறுப்பினர் பதவிகள் பகிரங்க ஏலத்தில் விடப்படுவதைப் பார்க்கும்போது அரசும், தேர்தல் ஆணையமும் இணைந்து உள்ளாட்சி ஜனநாயகத்தின் வேர்களில் வெந்நீர் ஊற்றுவது தெளிவாகிறது.” என முரசொலி நாளேடு தலையங்கம் தீட்டியுள்ளது.
Also Read
-
90% நிறைவடைந்த முதல்வர் விஜய் அறை மாற்ற வேலை : புதிய டெண்டர் விட்ட அரசு... சர்ச்சையில் பொதுப்பணித்துறை!
-
“திருவொற்றியூரில் மாணவர் கொலை.. கோமாளி சர்க்கார் மீது பயமில்லை” : உதயநிதி ஸ்டாலின் காட்டம்!
-
‘தவெக-வால் கட்டமைக்கப்பட்ட பொய்.. அமைச்சர் மரிய வில்சனால் அம்பலப்படும் விஜய்’ : முரசொலி விமர்சனம்!
-
தவெக அரசின் முதலீட்டாளர்கள் கூட்டம்.. திமுக முன்னாள் தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜாவின் 5 கேள்விகள்!
-
‘தூய சக்தி ஆட்சியில் போதை சக்திகளின் நடமாட்டம்.. கொடூர ஆட்சிக்கு கோவையே சாட்சி’ : முரசொலி விமர்சனம்!