murasoli thalayangam
ஜனநாயகத்தை சர்வாதிகாரமாக, ஏகாதிபத்தியமாக மாற்றத் துணியும் ‘மோடி - ஷா’ ! - முரசொலி தலையங்கம்!
மத்திய பா.ஜ.க அரசால் நிறைவேற்றப்பட்ட குடியுரிமைச் சட்டம், பெரும்பான்மை இருப்பதால் அரசியல் சட்டத்திற்கும் ஜனநாயகத்திற்கும் எதிரான முறையில் நிறைவேற்றப்பட்டிருக்கிறது என்பதாலேயே கேரள, மேற்கு வங்க, பஞ்சாப் முதல்வர்கள், ‘இந்த சட்டத்தை நாங்கள் ஏற்கமாட்டோம்’ என்கிறார்கள்.
பா.ஜ.கவின் தனித்த விருப்பமாக ஒரு சட்டத்தை இயற்றிவிட, முடியாது. அது அரசியல் சட்டப்படி பொருந்தக்கூடியதாக இருக்கவேண்டும். மேலும் இந்த குடியுரிமை சட்டத்தின் ஆபத்து உணரப்படுவதால் தான் நாடெங்கும் கிளர்ச்சிகள் நடைபெறத் தொடங்கி இருக்கின்றன.
மேலும் பல சிக்கல்கள் நிரம்பியுள்ள இந்தச் சட்டத்தை எப்படி மாநிலங்கள் வரவேற்கும்? உச்சநீதிமன்றம் இதை எப்படி பார்க்கிறது என்பதனையும், நாட்டு மக்கள் கவனிக்காமல் இருக்க மாட்டார்கள். குடியுரிமை சட்டத்தின் மூலம் பா.ஜ.க அரசு தனது ‘இந்து ராஷ்டிரத்தை’ நோக்கி முன் நகர்கிறது.
இதனால் ஜனநாயகத்தை சர்வாதிகாரமாக, ஏகாதிபத்தியமாக மாற்ற மோடி – அமித் ஷா இரட்டையர்கள் துணிந்து இருக்கிறார்கள். அந்த நிலைக்கு அவர்களை இந்திய ஜனநாயகம் விட்டுவிடாது என முரசொலி தலையங்கம் குறிப்பிட்டுள்ளது.
Also Read
-
விதிமீறல்களுக்கு பெயர்போன பா.ஜ.க! : நடவடிக்கை எடுக்காத தேர்தல் ஆணையம்!
-
பாகிஸ்தான் உதவியை நாடும் பா.ஜ.க! : தேர்தல் விதிமுறைகளை தகர்க்கும் மோடி அரசு!
-
குற்றவாளிகளுக்கு தரப்படும் ஜாமீன், முதல்வர்களுக்கு மறுக்கப்படுகிறது : பா.ஜ.க.வின் அடக்குமுறை அரசியல்!
-
”திராவிட மாடல் ஆட்சியில் மக்கள் மனங்களில் தாண்டவமாடும் மகிழ்ச்சி” : கி.வீரமணி வாழ்த்து!
-
”அரசியல் சாசனம் இல்லாமல் நாட்டை ஆட்சி செய்ய நினைக்கும் மோடி” : ராகுல் காந்தி தாக்கு!