murasoli thalayangam
“குடியுரிமை மசோதா மூலம் வெறுப்பு விதைகளை தூவும் பா.ஜ.க ” : – முரசொலி தலையங்கம்!
மத்தியில் ஆட்சி செய்யும் பா.ஜ.க அரசு, ஆளும் உரிமை தங்களுக்கு கிடைத்த பிறகு குடிமக்களின் உரிமைகளைப் படிப்படியாக பறிப்பதையே நோக்கமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது.
‘வேற்றுமையில் ஒற்றுமை’ கண்டதால் பல நூறு ஆண்டுகளாய் ஒற்றுமையாக வாழ்ந்து வரும் தேசத்தில் ‘ஒற்றுமையில் வேற்றுமை’ காணும் வெறுப்பு விதைகளைத் தூவிக் கொண்டிருக்கிறது பா.ஜ.க.
2014-ம் ஆண்டுக்கு முன்பு இந்தியாவுக்கு பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து வந்த இந்துக்கள், பவுத்தர்கள், சமணர்கள், சீக்கியர்கள், கிறித்துவர்கள், பார்சிக்கள் ஆகியோர் இந்த குடியுரிமை பெறுவதற்கு இந்த சட்டம் வழி செய்கிறது. மேலோட்டமாகப் பார்த்தால் நல்லதுதானே என்று நினைக்கத் தோன்றும்.
இந்த நாடுகளில் இருந்து இஸ்லாமியர்கள் அகதிகளாக வந்தால் ஏற்கமாட்டோம் என்பதுதான் மதவிரோதச் சிந்தனை. குறிப்பிட்ட மதத்தைச் சேர்ந்த அகதிகளை ஏற்கமாட்டோம் என்பது பா.ஜ.கவின் தேர்தல் அறிக்கையாக இருக்கலாம்.
ஆனால் அது எப்படி இந்திய நாட்டின் கொள்கையாகும்? இந்தியா என்ன இந்து நாடாக அறிவித்துக் கொண்ட நாடா? என முரசொலி தலையங்கம் கேள்வி எழுப்பியுள்ளது.
Also Read
-
“உண்மையை தெரிந்துகொள்ளுங்கள் அமைச்சரே” : த.வெ.க-வுக்கு பதிலடி கொடுத்த சக்கரபாணி!
-
“அறிவாலயத்தின் அறிவாயுதமான முரசொலியின் பயணம் நூறாண்டுகள் கடந்தும் தொடர்க!” : கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின்!
-
தமிழ்த்தாய் வாழ்த்து பாடலுக்கு முதலில் விதை போட்டது கலைஞர் : பேரவையில் கோவி.செழியன் எம்.எல்.ஏ பேச்சு!
-
“Delimitation-ன் தொடக்கத்தில் கோலம் போட்டு விளையாடிக் கொண்டு இருந்தவர்தான் விஜய்!” : முரசொலி விமர்சனம்!
-
“நீட் தேர்வு எனும் உயிர்க் கொல்லியை ரத்து செய்ய வேண்டும்!” : தி.மு.க மாணவர் அணிச் செயலாளர் வீரமணி!