murasoli thalayangam

"இந்திய பொருளாதாரத்தை மீட்க மன்மோகன் சிங் சொல்வதை செவிமடுப்பீர்!" - முரசொலி தலையங்கம்

பிரதமர் மோடியின் பணமதிப்பிழப்பு நடவடிக்கை குறித்து 2016-ம் ஆண்டு, நவம்பர் மாதம் மாநிலங்களவையில் பேசிய டாக்டர் மன்மோகன் சிங், அதை மிகப்பெரிய மேலாண்மைத் தோல்வி, திட்டமிட்டு நடத்தப்பட்ட கொள்ளை எனக் கூறினார். சட்டத்தை பிரயோகித்துச் செய்யப்பட்ட இந்த சூறையாடலால் மொத்த உள்நாட்டு உற்பத்தியும் 2% குறைந்துவிடும் என அப்போதே எச்சரிக்கை செய்தார்.

மன்மோகன் சிங், ஆழ்ந்த பொருளாதாரக் கல்வி பெற்றிருப்பவரும், பல்வேறு துறைகளில் பணியாற்றிய வாய்ப்பும் பெருமையும் பெற்றவரும் ஆவார். இவரது கருத்துகள் உலக நாடுகளால் உற்று கவனிக்கப்படுபவை ஆகும். டாக்டர் மன்மோகன் சிங்கின் அறிவுரை, வீழ்த்தப்பட்டிருக்கும் பொருளாதாரத்தை வேகமாக மீட்டெடுப்பதற்குரிய ஒரு வழி என்பதை உணர்ந்து, விழித்துக்கொள்வரா மத்திய ஆட்சியாளர்கள்? என முரசொலி தலையங்கம் கேள்வி எழுப்பியுள்ளது.