murasoli thalayangam

தமிழகம் தாண்டி திசை காட்டும் தி.மு.க! - முரசொலி தலையங்கம்

இந்தியா ஒரு மதச்சார்பற்ற, சமதர்ம, ஜனநாயகக் குடியரசாகத் தொடரவேண்டும். அரசியல் சட்டம் சொல்லியிருக்கும் அடிப்படை உரிமைகளுக்கு எந்தப் பாதகமும் ஏற்பட்டுவிடக்கூடாது. மாநிலத்தில் இருந்து பறிக்கப்பட்ட உரிமைகளை மீண்டும் தந்துவிட வேண்டும். இப்படி தி.மு.க தீர்மானம் சொல்வது தமிழகத்துக்கு மட்டுமல்ல, பா.ஜ.க ஆளும் மாநிலங்களுக்கும் சேர்த்துதான்.

இன்றைய மத்திய அரசை இயக்கும் ஆர்.எஸ்.எஸ் தனது இந்து தேசத்தை அமைக்கும் வரை பல்வேறு பரிசோதனை முயற்சிகளைச் செய்துகொண்டே இருக்கும். இவர்கள் மாவட்டங்களையே கலைத்துவிட்டு 200 ஜன்பத்துகளாக மாற்றப் போகிறார்கள் என்ற அறிவிப்பு உள்நாட்டு ஒப்பந்தத்தையே ஏற்படுத்தப் போகிறது. இது எல்லா மாநிலத்தவருக்கும், இனத்தவருக்கும் , மொழி பேசுபவர்களுக்கும் மிகப்பெரிய சிக்கலை ஏற்படுத்தும். அதற்கு மிகச்சரியான தடை அரணை தி.மு.க எழுப்பத் தொடங்கியிருக்கிறது. இந்த தடை அரணுக்கு அகில இந்திய அரசியல் சக்திகள் துணை நிற்க வேண்டும் என முரசொலி தலையங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.