murasoli thalayangam
உண்மையை உடைத்த உலக வங்கி! - முரசொலி தலையங்கம்
2017-2018-ம் நிதி ஆண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 7.2 சதவிகிதமாக இருந்தது. 2018-2019-ம் நிதி ஆண்டில் அதுவே 6.8 சதவிகிதமாக குறைந்தது. இது மேலும் குறைந்து 6 சதவிகிதமாகும் என உலக வங்கியின் அறிக்கை கூறியுள்ளது.
பண மதிப்பிழப்பை இந்தியாவின் இரண்டாவது சுதந்திரப் போர் போல அறிவித்து, 1000,500 ரூபாய் நோட்டுகளை ஒழித்துவிட்டால் கறுப்புப்பணம் ஒழிந்துவிடும் என்றது பா.ஜ.க அரசு. நாடு முழுவதும் ஒரே வரி போட்டுவிட்டால் கஜானா நிரம்பிவிடும், நிதி மோசடி ஒழிந்துவிடும் என்றார்கள். உண்மையில் இவை இரண்டுமே இந்திய மக்கள் மீது ஒரு அரசாங்கம் நடத்திய நிதி பயங்கரவாதம் ஆகும்.
உலக வங்கியின் அறிக்கையை எச்சரிக்கையாக எடுத்துக்கொண்டு மத்திய அரசு இனியாவது செயல்பட்டாக வேண்டும். மத மயக்கம் காட்டி மக்களை வைத்திருந்தால் போதும் என்று நினைத்தால், பொருளாதாரம் விழும்போது பா.ஜ.க-வையும் சேர்த்து கவிழ்க்கும் என முரசொலி தலையங்கம் எச்சரித்துள்ளது.
Also Read
-
“நமக்கும் அவர்களுக்குமான வாக்கு வேறுபாடு என்பது 3.52% மட்டுமே!” : தி.மு.கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின்!
-
“பச்சைக் கொடிக்கும் பச்சைப்பூச்சிக்கும் வித்தியாசம் தெரியாமல்..!” : முரசொலி தலையங்கம்!
-
🔴LIVE : தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் 2026: வாக்கு எண்ணிக்கை - வெற்றி நிலவரம்!
-
“திராவிட முன்னேற்றக் கழகத்தின் அரசியல் பயணம் தொய்வில்லாமல் தொடரும்” : கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின்!
-
சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதி: உதயநிதி ஸ்டாலின் வெற்றி!