murasoli thalayangam
உண்மையை உடைத்த உலக வங்கி! - முரசொலி தலையங்கம்
2017-2018-ம் நிதி ஆண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 7.2 சதவிகிதமாக இருந்தது. 2018-2019-ம் நிதி ஆண்டில் அதுவே 6.8 சதவிகிதமாக குறைந்தது. இது மேலும் குறைந்து 6 சதவிகிதமாகும் என உலக வங்கியின் அறிக்கை கூறியுள்ளது.
பண மதிப்பிழப்பை இந்தியாவின் இரண்டாவது சுதந்திரப் போர் போல அறிவித்து, 1000,500 ரூபாய் நோட்டுகளை ஒழித்துவிட்டால் கறுப்புப்பணம் ஒழிந்துவிடும் என்றது பா.ஜ.க அரசு. நாடு முழுவதும் ஒரே வரி போட்டுவிட்டால் கஜானா நிரம்பிவிடும், நிதி மோசடி ஒழிந்துவிடும் என்றார்கள். உண்மையில் இவை இரண்டுமே இந்திய மக்கள் மீது ஒரு அரசாங்கம் நடத்திய நிதி பயங்கரவாதம் ஆகும்.
உலக வங்கியின் அறிக்கையை எச்சரிக்கையாக எடுத்துக்கொண்டு மத்திய அரசு இனியாவது செயல்பட்டாக வேண்டும். மத மயக்கம் காட்டி மக்களை வைத்திருந்தால் போதும் என்று நினைத்தால், பொருளாதாரம் விழும்போது பா.ஜ.க-வையும் சேர்த்து கவிழ்க்கும் என முரசொலி தலையங்கம் எச்சரித்துள்ளது.
Also Read
-
3 நாட்கள் நடைபெற்ற சர்வதேச இளையோர் பாய்மரப் படகு சாம்பியன்ஷிப்.. வீரர்களுக்கு பரிசளித்த துணை முதலமைச்சர்!
-
“ரூ.9,500 கோடியை விடுவிக்க வேண்டும்..” - ஒன்றிய அரசின் கூட்டத்தில் அமைச்சர் தங்கம் தென்னரசு பேசியது என்ன?
-
தேசிய மக்கள் தொகை, சாதிவாரி கணக்கெடுப்பு : பிரதமர் மோடிக்கு முக்கிய ஆலோசனை வழங்கிய முதல்வர் மு.க.ஸ்டாலின்
-
“தணிக்கை வாரியத்தை கூட்டணியில் சேர்த்து கொண்ட பா.ஜ.க” : அமைச்சர் ரகுபதி பேட்டி!
-
‘பராசக்தி’ திரைப்படம் - பேரறிஞர் அண்ணா வசனம் நீக்கம் : வாய் திறக்காத அ.தி.மு.க.!