murasoli thalayangam
உண்மையை உடைத்த உலக வங்கி! - முரசொலி தலையங்கம்
2017-2018-ம் நிதி ஆண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 7.2 சதவிகிதமாக இருந்தது. 2018-2019-ம் நிதி ஆண்டில் அதுவே 6.8 சதவிகிதமாக குறைந்தது. இது மேலும் குறைந்து 6 சதவிகிதமாகும் என உலக வங்கியின் அறிக்கை கூறியுள்ளது.
பண மதிப்பிழப்பை இந்தியாவின் இரண்டாவது சுதந்திரப் போர் போல அறிவித்து, 1000,500 ரூபாய் நோட்டுகளை ஒழித்துவிட்டால் கறுப்புப்பணம் ஒழிந்துவிடும் என்றது பா.ஜ.க அரசு. நாடு முழுவதும் ஒரே வரி போட்டுவிட்டால் கஜானா நிரம்பிவிடும், நிதி மோசடி ஒழிந்துவிடும் என்றார்கள். உண்மையில் இவை இரண்டுமே இந்திய மக்கள் மீது ஒரு அரசாங்கம் நடத்திய நிதி பயங்கரவாதம் ஆகும்.
உலக வங்கியின் அறிக்கையை எச்சரிக்கையாக எடுத்துக்கொண்டு மத்திய அரசு இனியாவது செயல்பட்டாக வேண்டும். மத மயக்கம் காட்டி மக்களை வைத்திருந்தால் போதும் என்று நினைத்தால், பொருளாதாரம் விழும்போது பா.ஜ.க-வையும் சேர்த்து கவிழ்க்கும் என முரசொலி தலையங்கம் எச்சரித்துள்ளது.
Also Read
-
“மாற்றம் என சொன்னது பெயர் மாற்றம் தானா?.. இதற்கு எதற்கு முதலமைச்சர்?”: வெளுத்து வாங்கிய உதயநிதி ஸ்டாலின்!
-
“Blast இல்லை Waste .. முக்கிய வாக்குறுதிகள் பற்றி மூச்சே விடாத பட்ஜெட்” : திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்!
-
த.வெ.க அரசின் நிதிநிலை அறிக்கை: இதிலும் திராவிட மாடல் அரசின் திட்டங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டிய விஜய்!
-
முதுகெலும்பு இல்லாத த.வெ.க அரசு : காவிரிக்காக பொங்கிய தி.மு.க - முரசொலி தலையங்கம்!
-
“புறமுதுகு காட்டி ஓடுகிறவர்கள் நாங்கள் இல்லை; மக்களோடு மக்களாக இருந்து எதையும் எதிர்கொள்வோம்!” : உதயநிதி!