murasoli thalayangam
உண்மையை உடைத்த உலக வங்கி! - முரசொலி தலையங்கம்
2017-2018-ம் நிதி ஆண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 7.2 சதவிகிதமாக இருந்தது. 2018-2019-ம் நிதி ஆண்டில் அதுவே 6.8 சதவிகிதமாக குறைந்தது. இது மேலும் குறைந்து 6 சதவிகிதமாகும் என உலக வங்கியின் அறிக்கை கூறியுள்ளது.
பண மதிப்பிழப்பை இந்தியாவின் இரண்டாவது சுதந்திரப் போர் போல அறிவித்து, 1000,500 ரூபாய் நோட்டுகளை ஒழித்துவிட்டால் கறுப்புப்பணம் ஒழிந்துவிடும் என்றது பா.ஜ.க அரசு. நாடு முழுவதும் ஒரே வரி போட்டுவிட்டால் கஜானா நிரம்பிவிடும், நிதி மோசடி ஒழிந்துவிடும் என்றார்கள். உண்மையில் இவை இரண்டுமே இந்திய மக்கள் மீது ஒரு அரசாங்கம் நடத்திய நிதி பயங்கரவாதம் ஆகும்.
உலக வங்கியின் அறிக்கையை எச்சரிக்கையாக எடுத்துக்கொண்டு மத்திய அரசு இனியாவது செயல்பட்டாக வேண்டும். மத மயக்கம் காட்டி மக்களை வைத்திருந்தால் போதும் என்று நினைத்தால், பொருளாதாரம் விழும்போது பா.ஜ.க-வையும் சேர்த்து கவிழ்க்கும் என முரசொலி தலையங்கம் எச்சரித்துள்ளது.
Also Read
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!
-
பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை : டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!