murasoli thalayangam
கீழடி நாகரிகம் : பெருமிதம் கொள்ளும் மு.க.ஸ்டாலின்; மெளனம் சாதிக்கும் அ.தி.மு.க - முரசொலி தலையங்கம்!
அமித்ஷாவின் இந்தி மொழியைத் திணிக்கும் முடிவுக்கு அ.தி.மு.க அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் நேரடியாக எந்தக் கருத்தும் தெரிவிக்கவில்லை. பா.ஜ.க-வை ஆதரிப்பது போலவே பேசினார். கீழடி நாகரிகத்தை தமிழ் நாகரிகம் என்று மட்டும் எடுத்துக்கொள்ளக் கூடாது, பாரதிய நாகரிகம் என்று எடுத்துக்கொள்ள வேண்டும் எனவும் கூறியிருக்கிறார். இதற்கு பதிலளித்த தி.மு.க எம்.பி கனிமொழி, தமிழ் நாகரிகம் என்பது பாரதிய நாகரிகத்திற்கே அடிப்படை நாகரிகம் என்பதுதான் நாங்கள் முன்வைக்கும் கருத்து என பதிலளித்ததை முரசொலி சுட்டிக்காட்டியுள்ளது. இது நம் வரலாற்று ஆய்வின் வெளிப்பாடாகும்.
ஓர் இன அடிப்படையில் அனைத்து இனங்களின் நாகரிக, பண்பாடாக எப்படி மாறிவிட முடியும்? ஆகவேதான் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் அருங்காட்சியகம் அமைக்க, நமது பழம்பெரும் வரலாற்றை உறுதிசெய்ய கடிதம் எழுதியிருக்கிறார், தி.மு.க நாடாளுமன்ற உறுப்பினர்களும் இந்தக் கோரிக்கைக் கடிதத்தை தக்க இடத்தில் கொண்டு சேர்த்துள்ளனர் . மாநில அமைச்சர் பாண்டியராஜனோ, அவரது கட்சியோ எந்த உறுதியிலும் இல்லை, எப்போதும் ஊசலாட்டம் தான். ஆனால் அவர்கள் வேலையில் மட்டும் கண்ணும் கருத்துமாக இருப்பார்கள் என முரசொலி தலையங்கம் சாடியுள்ளது.
Also Read
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!
-
பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை : டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!