murasoli thalayangam

சி.பி.ஐ-யின் செயல்பாடுகளை வெளிப்படையாக விமர்சித்த தலைமை நீதிபதி! : முரசொலி தலையங்கம் 

ஆகஸ்ட் மாதம் சி.பி.ஐ சார்பாக நடத்தப்பட்ட நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், மனம் திறந்து சில கருத்துகளை வெளியிட்டார். அரசியல் சம்பந்தப்பட்ட பெரிய மனிதர்கள் தொடர்பான வழக்கு விசாரணைகளில், நீதிமன்றம் பின்பற்றும் ஆய்வு அளவுமுறைகளை, சி.பி.ஐ நிறைவு செய்வதில்லை.

ஆனால் அரசியல் விவகாரமற்ற விசாரணைகளில் சி.பி.ஐ-யின் பணி பாரட்டத்தக்கதாக இருக்கிறது என தலைமை நீதிபதி வெளிப்படையாகப் பேசியுள்ளார். மும்பை நீதிபதி ரஞ்சன் கோகாயின் இந்தப் பேச்சுரையில் இடம்பெற்ற கருத்துகள் நெஞ்சை நெருடும் வகையில் இருப்பதாக முரசொலி தலையங்கம் தெரிவித்துள்ளது.