murasoli thalayangam
காஷ்மீரைக் காப்பாற்ற நாளும் துணை நிற்போம் நாட்டாரே வாரீர்! - முரசொலி தலையங்கம்
ஆகஸ்ட் 5ம் நாள் இருள் கவியத் தொடங்கிய காஷ்மீர், பெரியதொரு திறந்தவெளி சிறையைப் போல மாறியிருக்கிறது. செயல்பாட்டாளர்கள், தொழிலதிபர்கள், பேராசிரியர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் தடுப்புக் காவலில், தற்காலிகச் சிறையில் வைக்கப்பட்டுள்ளனர்.
கரித்துண்டாக மாறிவரும் காஷ்மீரைக் காப்பாற்ற வேண்டிய கடமை அனைவருக்கும் இருக்கிறது. எனவே, காஷ்மீர் பள்ளத்தாக்கில் மீண்டும் ஜனநாயகம் மலர்ந்திட மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று அனைத்துக்கட்சிக் கூட்டத்தை கூட்டி விரிவான தீர்மானம் ஒன்றை, தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் நிறைவேற்றியிருக்கிறார்.
அங்கே ஜனநாயத்தையும், மனித உரிமைகளையும் பாதுகாக்க வேண்டி, டெல்லியில் அனைத்துக்கட்சி எம்.பி-க்களின் கண்டன ஆர்ப்பாட்டம் ஆகஸ்ட் 22ம் தேதி நடைபெறும் என அறிவித்திருக்கிறார். அன்புத்தலைவர் மு.க.ஸ்டாலினின் இந்த ஆர்பாட்டத்திற்கு நாளும் நாம் துணை நிற்போம் என முரசொலி அழைப்பு விடுத்துள்ளது.
Also Read
-
”உயர்நீதிமன்றங்களிலும் இட ஒதுக்கீடு பின்பற்றப்பட வேண்டும்” : கி.வீரமணி வலியுறுத்தல்!
-
3 மாதத்தில் 767 விவசாயிகள் தற்கொலை : பா.ஜ.க கூட்டணி ஆட்சி நடக்கும் மகாராஷ்டிராவில் அதிர்ச்சி!
-
கால்நடை துறையில் கருணை அடிப்படையில் 208 நபர்களுக்கு பணி நியமன ஆணைகள்.. வழங்கினார் முதலமைச்சர்!
-
எளியோர் மீதான கருணையும் அக்கறையும்தான் கலைஞரின் எழுத்துகள்! : எழுத்தாளர் இமையமின் சிறப்பு கட்டுரை!
-
”ஜனநாயகத்தை அழிக்கும் தேர்தல் ஆணையம்”: வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் - எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு!