murasoli thalayangam
காஷ்மீரைக் காப்பாற்ற நாளும் துணை நிற்போம் நாட்டாரே வாரீர்! - முரசொலி தலையங்கம்
ஆகஸ்ட் 5ம் நாள் இருள் கவியத் தொடங்கிய காஷ்மீர், பெரியதொரு திறந்தவெளி சிறையைப் போல மாறியிருக்கிறது. செயல்பாட்டாளர்கள், தொழிலதிபர்கள், பேராசிரியர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் தடுப்புக் காவலில், தற்காலிகச் சிறையில் வைக்கப்பட்டுள்ளனர்.
கரித்துண்டாக மாறிவரும் காஷ்மீரைக் காப்பாற்ற வேண்டிய கடமை அனைவருக்கும் இருக்கிறது. எனவே, காஷ்மீர் பள்ளத்தாக்கில் மீண்டும் ஜனநாயகம் மலர்ந்திட மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று அனைத்துக்கட்சிக் கூட்டத்தை கூட்டி விரிவான தீர்மானம் ஒன்றை, தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் நிறைவேற்றியிருக்கிறார்.
அங்கே ஜனநாயத்தையும், மனித உரிமைகளையும் பாதுகாக்க வேண்டி, டெல்லியில் அனைத்துக்கட்சி எம்.பி-க்களின் கண்டன ஆர்ப்பாட்டம் ஆகஸ்ட் 22ம் தேதி நடைபெறும் என அறிவித்திருக்கிறார். அன்புத்தலைவர் மு.க.ஸ்டாலினின் இந்த ஆர்பாட்டத்திற்கு நாளும் நாம் துணை நிற்போம் என முரசொலி அழைப்பு விடுத்துள்ளது.
Also Read
-
வாக்குப்பதிவு சதவீதத்தில் திடீரென அசாதாரணமான 6 % மாறுபாடு ஏற்பட்டது ஏன்? - சீதாராம் யெச்சூரி கேள்வி !
-
பா.ஜ.க.வினரால் அதிகரிக்கும் பாலியல் வன்முறைகள் : கண்டுகொள்ளாத ஒன்றிய பா.ஜ.க அரசு!
-
நிலவின் துருவங்களில் உறைந்திருக்கும் தண்ணீர் : இஸ்ரோவின் ஆய்வில் கிடைத்த உலகை அதிரவைத்த தகவல் !
-
ஜனநாயகத்தன்மையை இழக்கும் இந்தியா : RSF வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!
-
உலகப் பத்திரிகை சுதந்திர நாள் ; ஊடகவியலாளருக்கு திராவிட மாடல் அரசு அளித்த உதவிகள் என்னென்ன ?