murasoli thalayangam

சட்டப்பேரவையில் மு.க.ஸ்டாலின் பிரகடனம்! : முரசொலி தலையங்கம்

இடஒதுக்கீடு, மாநில சுயாட்சி, இந்திக்கு நிரந்தரத் தடை என தமிழக மக்களுக்கான உரிமைகளை நிலைநாட்டிய பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர், பெருந்தலைவர் காமராசர் ஆண்ட தமிழகம் இது. அவர்கள் காலத்தைவிட இன்றைய பிரச்னைகள் நூறு மடங்கு கூடிவிட்டன.

தமிழ்நாடு அரசு இப்படிப்பட்ட சூழ்நிலையில் சவமாய்க் கிடந்தது என்பது வரலாற்று அவமானம். இந்த நேரத்தில், தூங்குவது போல் நடிக்கும் கூட்டத்தைத் தட்டி எழுப்பும் வகையில் அமைந்துள்ளது தி.மு.க தலைவரின் சட்டப்பேரவை பிரகடன உரை என முரசொலி தலையங்கம் கூறியுள்ளது.