M K Stalin

கோவை செம்மொழிப் பூங்கா : கடந்து வந்த பாதையும்... பூங்காவின் சிறப்பம்சங்களும்...

முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் கோரிக்கையை ஏற்று நம் அன்னை மொழியாம் செந்தமிழ் மொழிக்குச் சிறப்புச் சேர்க்கும் வகையில் செம்மொழி எனும் பெருமை வழங்கி 2005 நவம்பரில் ஒன்றிய அரசு ஆணை பிறப்பித்தது. அதைக் கொண்டாடும் வகையில் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் கோவை மாநகரில் உலகின் தமிழ் அறிஞர்களை எல்லாம் அழைத்து 2010 சூன் திங்களில் கொண்டாடிய உலகத் தமிழ்ச் செமமொழி மாநாட்டின்போது கோவை மாநகரில் செம்மொழிப் பூங்கா அமைக்கப்படும் என்று அறிவித்தார்கள். அந்த அறிவிப்பு 2011 இல் ஆட்சிக்கு வந்தவர்களால் பத்துஆண்டு காலம் செயல்படுத்தப்படாமல் கிடந்தது.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், தமிழ்நாட்டின் முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பின் 22.11.2021 அன்று கோவைக்கு வருகை தந்தபோது வ.உசி. மைதானத்தில் நடைபெற்ற அரசு விழாவில், காந்திபுரத்தில் பொதுமக்கள் பயன்படுத்தக்கூடிய நடைபாதை உள்ளிட்ட அனைத்து வசதிகளுடனும் உலகத் தரத்தில் செம்மொழிப் பூங்கா இரண்டு கட்டங்களாக அமைக்கப்படும் என்று அறிவித்தார்கள்.

உலகத்தரத்தில் உருவாக்கப்பட்டுள்ள செம்மொழிப் பூங்கா திறப்புவிழா கடந்த 18.12.2023 அன்று கோவை மாநகருக்கு வருகை தந்த தமிழ்நாடு முதலமைச்சர் திரு மு.கஸ்டாலின் அவர்கள் செம்மொழிப் பூங்கா அமைக்கும் பணிக்கு அடிக்கல் நாட்டிப் பணிகளைத் தொடங்கி வைத்தார்கள். கோவை மாநகராட்சி, காந்திபுரம் மத்திய சிறைச்சாலை வளாகப் பகுதியில் 165 ஏக்கர் நிலப்பரப்பில் அமைத்திட, முதற்கட்டமாக 45 ஏக்கர் நிலப்பரப்பில், உலகத் தரத்திலான செம்மொழிப் பூங்கா அமைப்பதற்கு 208.50 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து அனுமதி வழங்கினார்கள்.

அதனைத்தொடர்ந்து, செம்மொழிப் பூங்காவில் தாவரவியல் பூங்கா, சூரியதகடு. சிற்பங்கள், பேட்டரியில் இயங்கும் வாகனங்கள், உக்கடம் கழிவுநீர் சுத்திகரிப்பு மையத்திலிருந்து சுத்திகரிக்கப்பட்ட நீரை குழாய் மூலம் செம்மொழி பூங்காவிற்கு எடுத்து வருதல் உள்ளிட்ட உலகத்தரத்தில் அமைக்கப்பட்டுள்ள செம்மொழிப் பூங்காவினை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் 25.11.2025 அன்று கோவை மாநகருக்கு வருகை தந்துள்ள முதலமைச்சர் அவர்கள் செம்மொழிப் பூங்காவினை திறந்து வைக்கிறார்கள்.

செம்மொழிப் பூங்காவின் சிறப்பம்சங்கள் :

உலகத்தரம் வாய்ந்த இப்பூங்காவில், செம்மொழி வனம், மூலிகை தோட்டம், மகரந்த தோட்டம். நீர்த் தோட்டம். மணம்கமிழ் தோட்டம். பாலைவனத் தோட்டம், மலர்த் தோட்டம், மூங்கில் தோட்டம், நட்சத்திர தோட்டம். ரோஜா தோட்டம், பசுமை வனம் போன்ற 23 வகையான தோட்டங்கள் அமைக்கப்பட்டுள்ளன. சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ள செண்பக மரம், கல் இலவு, மிளகு மரம், கடல் திராட்சை,திருவோட்டு மரம், கலிபுடா, வரிகமுகு, மலைபூவரசு எலிச்சுழி, குங்குமம் மரம் உள்ளிட்டவை உள்ளன.

மேலும், செம்மொழி வனத்தில் சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ள மரங்கள் மற்றும் செடிகள் நடப்பட்டு உள்ளதோடு, 2000-க்கும் மேற்பட்ட ரோஜா வகைகள் ரோஜா தோட்டத்தில் அமைக்கப்பட்டுள்ளது. அத்துடன் இப்பூங்கா வளாகத்தில் கடையேழு வள்ளல்களின் கற்சிலைகளும் நிறுவப்பட்டுள்ளன.

செம்மொழிப் பூங்கா வளாகத்தில், நுழைவுச்சீட்டு வழங்குமிடம் மற்றும் அனுபவ மையக் கட்டடம், 500 பார்வையாளர்கள் அமரக்கூடிய வகையில் திறந்தவெளி அரங்கம், பூங்காவில் பணியாற்றும் தோட்டத் தொழிலாளர்களுக்கு அறை, உணவகம், ஒப்பனை அறை, சில்லறை விற்பனை நிலையம், செயற்கை நீர்வீழ்ச்சியுடன் கூடிய நுழைவு வாயில் போன்ற பல்வேறு சிறப்பம்சங்களுடன் அமைக்கப்பட்டுள்ளது.

செம்மொழிப் பூங்கா வளாகத்தில் தரைத் தள வாகன நிறுத்துமிடத்தில் மொத்தம் 453 கார்கள், 10 பேருந்துகள் மற்றும் 1000 இருசக்கர வாகனங்கள் நிறுத்தும் அளவிற்குக் கட்டமைப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. மேலும், செம்மொழிப் பூங்கா வளாகத்தினுள் ஜெர்மன் தொழில்நுட்பத்தில் மழைநீர் சேகரிப்பு வடிகால் அமைப்பு 2 கிலோ மீட்டர் நீளத்திற்கு அமைக்கப்பட்டுள்ளது.

இப்பூங்கா வளாகத்தில் பொதுமக்கள் நடைப்பயிற்சி மேற்கொள்வதற்கு நடைபாதைகளுடன் சாலை வசதியும் அமைக்கப்பட்டுள்ளதோடு, மகளிர் சுயஉதவி குழுக்களால் தயாரிக்கப்பட்ட பொருள்களை விற்பனை செய்வதற்கு ஏதுவாக மதி அங்காடியும் நிறுவப்பட்டுள்ளது.

செம்மொழிப் பூங்கா வளாகத்தினுள், உலகத் தரத்தில் உயர்தர உடற்பயிற்சிக் கருவிகளுடன் கூடிய திறந்தவெளி உடற்பயிற்சி கூடம், 4,000 சதுர அடி பரப்பளவில் உள்வன மாதிரி காட்சியமைப்பு (Terrarium), குழந்தைகள் விளையாடுவதற்கு 14,000 அடி பரப்பளவில் சதுர விளையாட்டுத்திடல், சிறுவர்களுக்கான உள்விளையாட்டு அறை, மாற்றுத்திறனாளிகள் விளையாடுவதற்கு ஏதுவாக தனித்தன்மையான விளையாட்டுத்திடல் போன்ற பல்வேறு பொழுதுபோக்கு வசதிகளும் அமைக்கப்பட்டுள்ளன.

இவ்வளாகத்தில் உள்ள நுழைவுச்சீட்டு மற்றும் அனுபவ மையக் கட்டடத்தில் பழங்காலத் தமிழர்கள் பயன்படுத்திய பொருள்களுடன் கூடிய அருங்காட்சியகம் மற்றும் தாவரவியல் அருங்காட்சியகம். இளம்வயதினர் படிப்பதற்கு ஏதுவாகப் படிப்பகம் முதியோர்களும் மாற்றுத்திறனாளிகளும் பயணிக்கும் வகையில் சக்கர நாற்காலிகள், பேட்டரி வாகனங்கள் போன்ற வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

செம்மொழிப் பூங்கா வளாகத்தில் உள்ள மரங்கள் மற்றும் தாவரங்கள் குறித்த தகவல்கள் அடங்கிய பெயர்ப் பலகைகள் அமைக்கப்பட்டுள்ளதோடு, அதில் QR குறியீடுகள் மற்றும் Barcode போன்ற தொழில்நுட்ப வசதிகளும் நிறுவப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தச் செம்மொழிப் பூங்கா கோவை சுற்றுச்சூழலைப் பராமரிக்கிறது. இயற்கை ஆர்வலர்களுக்குப் புத்துணர்ச்சி தருகிறது. அடுத்த தலைமுறை இளைஞர்களுக்கும் மாணவர்களுக்கும் ஆய்வுப் பணிகளுக்கு உதவுகிறது. மொத்தத்தில் தமிழ்நாட்டின் தாவர உயிரினங்களைப் பாதுகாக்கும் களமாகத் திகழ்கிறது.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், கோவை மாவட்ட மக்களுக்கு நான்கரை ஆண்டுகளில் வழங்கியுள்ள நலத்திட்ட உதவிகள் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், கோயம்புத்தூர் மாவட்டத்தில் கடந்த நான்கரை ஆண்டுகளில்,

* ரூ.1,164 கோடியில் 243 முடிவுற்றத் திட்டப் பணிகளை தொடங்கிவைத்து,

* ரூ.1,042 கோடியில் 504 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி,

* ரூ.1,400 கோடியில் 1,33,883 பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கியுள்ளார்கள்.

முதலீட்டாளர்கள் மாநாடுகள் :

முதலீட்டாளர்கள் முதல் முகவரி தமிழ்நாடு - மாநாடு 23.11.2021 கொடிசியா வளாகத்தில் முதலீட்டாளர்கள் முதல் முகவரி தமிழ்நாடு மாநாட்டில் 34,723 கோடி ரூபாய் முதலீட்டில் 74,835 நபர்களுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்கிடும் வகையில் 52 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் முதலமைச்சர் அவர்கள் முன்னிலையில் மேற்கொள்ளளப்பட்டன.

முதலீட்டாளர்கள் மாநாடு - 2025 கோவை :

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் சீரிய தலைமையில் 25.11.2025 செவ்வாய்க்கிழமை மாலை 5 மணிக்கு கோவை லீ மெரிடியன் ஓட்டலில் நடைபெறும் முதலீட்டாளர்கள் மாநாட்டின்போது; ரூ.43,844 கோடி முதலீட்டில் 1,00,709 இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகள் வழங்கும் புதிய தொழில்களுக்கான 158 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்படுகிறது.

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் பல்வேறு நடவடிக்கைகளின் காரணமாக கொங்கு மண்டலம் தமிழ்நாட்டின் பெருமைக்குரிய மாவட்டமாக வளர்ந்து மிளிர்கிறது.

Also Read: அதிமுக MLA கொலை வழக்கு : பவாரியா கொள்ளையர்கள் 3 பேருக்கு ஆயுள் தண்டனை !