M K Stalin
“அ.தி.மு.க.விற்கு எஜமானர்களிடம் பேச நேரமோ, மானமோ இல்லை!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்!
நீட் தேர்வில் நடக்கும் குளறுபடிகள் ஒருபுறம், மாநில கல்வி நிலை, நீட் தேர்வினால் புறக்கணிக்கப்படுவது மறுபுறம் என ஒவ்வொரு மாநிலங்களிலும், நாளுக்கு நாள் நீட் தேர்விற்கு எதிர்ப்புகள் அதிகரித்து வருகின்றன.
இந்த எதிர்ப்புகள், நாடாளுமன்றத்திலும் இந்தியா கூட்டணி எம்.பி.க்களால் முன்வைக்கப்பட்ட நிலையில், தகுந்த விவாதம் மேற்கொள்ளாமல் சாதித்து வருகிறது ஒன்றிய பா.ஜ.க அரசு. இந்நடவடிக்கைகளால் மருத்துவக் கல்வியில் மாணவர்கள் அடையும் துயர், மீளா துயராக நீடித்து வருகிறது.
இந்நிலையில், எளிய மக்களின் மருத்துவக் கனவை சிதைக்கும் நீட் தேர்வில் வசதி படைத்தவர்கள் செய்யும் முறைகேடுகளுக்கு மற்றொரு எடுத்துக்காட்டாய், தற்போது பா.ஜ.க ஆளும் மகாராஷ்டிரத்தை சேர்ந்த மருத்துவர் சந்தீப் ஷா, நீட் முறைகேட்டில் ஈடுபட்டது வெளிச்சத்திற்கு வந்து, அவர் மீது சி.பி.ஐ வழக்குப்பதிவு செய்துள்ளது.
இதனை சுட்டிக்காட்டி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது X சமூக வலைதளப்பத்தில், “தரம், தரம் என்றார்கள்!
NEET தேர்வின் ஆதி முதல் அந்தம் வரை பணம், பணம்தான் விளையாடுகிறது.
நீட் எனும் தேர்வுமுறையே ஒரு moral ஊழல்! அது போதாதென்று, வினாத்தாள் தொடங்கி, தேர்வறை, முடிவுகள் வெளியீடு வரை ஒவ்வொரு நிலையிலும் நிறைந்திருப்பது குளறுபடிகளும் முறைகேடுகளும்தான்.
நீட் - முதல் கோணல் முற்றிலும் கோணல்! RSS - BJP மாநாடுகளில் showpiece-ஆக உட்கார நேரமிருக்கும் அ.தி.மு.க.வினருக்கு இவற்றை எதிர்த்து, தங்கள் எஜமானர்களிடம் பேச நேரமோ, மானமோ இல்லை!” என கண்டனம் தெரிவித்துள்ளார்.
Also Read
-
உயர்கல்வியின் எதிர்காலம் அரசியல் அதிகாரப் போட்டியில் அல்ல : த.வெ.க அரசுக்கு ஜவாஹிருல்லா கண்டனம்!
-
பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர் நியமனக் குழு : த.வெ.க அரசின் முடிவுக்கு தமிழச்சி தங்கபாண்டியன் எதிர்ப்பு!
-
கரூர் என்றால் யாருக்கு பயம்? - 1 : தலைமறைவாக இருந்த நிர்மல் குமாருக்கு முரசொலி தலையங்கம் கேள்வி!
-
எகிப்தின் 70 நிமிட ஆதிக்கம்.. 13 நிமிடங்களில் விஸ்வரூபம் எடுத்த அர்ஜென்டினா : தொடர்கிறது மெஸ்ஸி மேஜிக்!
-
குறைதீர் முகாமில் தவெக அமைச்சர் ரமேஷ் முன் அடாவடி.. கேள்வி கேட்டவர் ஃபோனை பிடிங்கி விரட்டியடிப்பு!