M K Stalin
மின் விநியோகம் சீரமைக்கும் பணியில் மின் ஊழியர் உயிரிழப்பு : முதலமைச்சர் இரங்கல் & நிதியுதவி!
நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய 4 தென்மாவட்டங்களில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் அதி கனமழை பெய்தது. இதனால் தூத்துக்குடி, நெல்லை மாவட்ட மக்கள் பெருமளவில் பாதிப்புக்குள்ளானர். அதோடு வெள்ளம் ஏற்பட்ட காரணத்தினால் பொதுமக்கள் நலன் கருதி மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
தொடர்ந்து அரசு ஊழியர்கள், எம்.எல்.ஏ-க்கள், எம்.பி-க்கள், அமைச்சர்கள், திமுகவினர் என பலரும் களத்தில் இறங்கி மக்களுக்கு தேவையான உதவிகளை செய்து வருகின்றனர். தொடர்ந்து மக்களுக்கு தேவையான நிவாரண உதவிகளும் செய்து வரும் நிலையில், தண்ணீர் பாதிப்பினால் இருக்கும் சில கிராமங்களில் மின் விநியோகம் மெதுவாக வழங்கப்பட்டு வருகிறது.
இந்த சூழலில் மின் ஊழியர்கள் பல்வேறு பகுதிகளில் மின் விநியோகத்தை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் தூத்துக்குடி பகுதி-1 கிராமம், அம்பேத்கர் நகர் மூன்றாவது தெருவைச் சேர்ந்த மின் ஒப்பந்த பணியாளரான முருகன் (45) என்பவர், நேற்று (24.12.2023) கனமழையினால் சேதமடைந்த கிருஷ்ணராஜபுரம், ஐந்தாவது தெருவில் உள்ள மின்கம்பத்தை பழுதுபார்த்துக்கொண்டிருந்தார். அந்த சமயத்தில் எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
மின் ஊழியர் முருகன் உயிரிழப்புக்கு தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் இரங்கல் தெரிவித்ததோடு, அவரது வீட்டிற்கு நேரடியாக சென்று குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார். தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்து, நிதியுதவியும் அறிவித்துள்ளார். இதுகுறித்து வெளியான செய்திக்குறிப்பு பின்வருமாறு :
"தூத்துக்குடி மாவட்டம் மற்றும் வட்டம், தூத்துக்குடி பகுதி-1 கிராமம், அம்பேத்கர் நகர் மூன்றாவது தெருவைச் சேர்ந்த ஆ.முருகன் (வயது 45) என்பவர் (24.12.2023) அன்று கனமழையினால் சேதமடைந்த கிருஷ்ணராஜபுரம், ஐந்தாவது தெருவில் உள்ள மின்கம்பத்தினை பழுதுபார்த்துக் கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் என்ற துயரமான செய்தியினைக் கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன்.
இவ்விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்திற்கும் அவரது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு ரூ.5 இலட்சம் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கவும் உத்தரவிட்டுள்ளேன்."
Also Read
-
"நாக்பூர் குருபீட அடிமைச் சேவகர் பழனிசாமி இது பற்றி பேசலாமா?- CPI மாநிலச் செயலாளர் முத்தரசன் விமர்சனம்!
-
”அறியாமை இருளில் மூழ்கியுள்ளார் பழனிசாமி” : அமைச்சர் சேகர்பாபு பதிலடி!
-
பி.எட். மாணாக்கர் சேர்க்கைக்கான விண்ணப்பப் பதிவு தேதி நீட்டிப்பு... அமைச்சர் கோவி.செழியன் அறிவிப்பு !
-
”திட்டங்களை உரிய காலத்தில் நிறைவேற்ற வேண்டும்” : அதிகாரிகளுக்கு துணை முதலமைச்சர் உதயநிதி அறிவுறுத்தல்!
-
பா.ஜ.கவின் கொத்தடிமையாக செயல்படும் எடப்பாடி பழனிசாமி : இரா.முத்தரசன் கடும் தாக்கு!