M K Stalin
“சாதி, மத பேதமின்றி கொண்டாடப்படும் ஓணம் திருநாள்...” - மு.க.ஸ்டாலின் வாழ்த்து!
ஓணம் திருநாள் நாளை கொண்டாடப்படுவதையொட்டி, கேரள மக்களுக்கும், மலையாள மொழி பேசும் மக்களுக்கும் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.
திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின், ஓணம் பண்டிகையையொட்டி இன்று (10-09-2019) வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், “உற்சாகத்துடனும் மன மகிழ்ச்சியுடனும் 'ஓணம் திருநாள்' கொண்டாடும் கேரள மாநில மக்கள் அனைவருக்கும் எனது இதயப்பூர்வமான ‘ஓணம் திருநாள்’ வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
அறுவடைத் திருநாளான 'ஓணம் திருநாள்' கேரள மக்களின் பாரம்பரியப் பண்பாட்டுத் திருவிழா. சாதி மத பேதமின்றி கேரள மக்கள் அனைவரும் இணைந்து கொண்டாடிடும் இந்த விழா, அனைவரின் வாழ்விலும் எல்லா விதமான இன்பத்தையும், மகிழ்ச்சியையும் அளிக்கும் திருவிழா ஆகும்.
ஓணம் பண்டிகையைச் சிறப்பாக கொண்டாடிட வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக, தலைவர் கலைஞர் அவர்கள் முதலமைச்சராக இருந்தபோது, நாகர்கோவில், கோவை, நீலகிரி, சென்னை ஆகிய பகுதிகளில் வாழும் கேரள மக்களுக்கு 'சிறப்பு அரசு விடுமுறை' அளித்ததை இந்த நேரத்தில் நினைவூட்டி, மலையாள மொழி பேசும் மக்கள் அனைவருக்கும் இனிய ‘ஓணம் திருநாள்’ வாழ்த்துகளை மீண்டும் தெரிவித்துக் கொள்கிறேன்.” எனத் தெரிவித்துள்ளார்.
Also Read
-
”ஆட்டம் காணும் பிரதமர் மோடி” : அதானி, அம்பானி குறித்த பேச்சுக்கு மல்லிகார்ஜுன கார்கே பதிலடி!
-
அதிகரிக்கும் இஸ்லாமிய வெறுப்பு : பா.ஜ.க.விற்கு குவியும் கண்டனங்கள்!
-
“பாஜக அரசின் பாரபட்சத்துக்கு இடையே மகத்தான சாதனை படைக்கும் திமுக ஆட்சி” - செல்வப்பெருந்தகை புகழாரம் !
-
வாக்குப்பதிவு இயந்திரங்களை கையில் எடுத்துச் சென்ற அதிகாரிகள் - பாஜக ஆளும் உ.பி-யில் ஷாக் !
-
ஹரியானாவில் கவிழும் பா.ஜ.க அரசு : அங்கு நடப்பது என்ன?