M K Stalin
“சாதி, மத பேதமின்றி கொண்டாடப்படும் ஓணம் திருநாள்...” - மு.க.ஸ்டாலின் வாழ்த்து!
ஓணம் திருநாள் நாளை கொண்டாடப்படுவதையொட்டி, கேரள மக்களுக்கும், மலையாள மொழி பேசும் மக்களுக்கும் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.
திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின், ஓணம் பண்டிகையையொட்டி இன்று (10-09-2019) வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், “உற்சாகத்துடனும் மன மகிழ்ச்சியுடனும் 'ஓணம் திருநாள்' கொண்டாடும் கேரள மாநில மக்கள் அனைவருக்கும் எனது இதயப்பூர்வமான ‘ஓணம் திருநாள்’ வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
அறுவடைத் திருநாளான 'ஓணம் திருநாள்' கேரள மக்களின் பாரம்பரியப் பண்பாட்டுத் திருவிழா. சாதி மத பேதமின்றி கேரள மக்கள் அனைவரும் இணைந்து கொண்டாடிடும் இந்த விழா, அனைவரின் வாழ்விலும் எல்லா விதமான இன்பத்தையும், மகிழ்ச்சியையும் அளிக்கும் திருவிழா ஆகும்.
ஓணம் பண்டிகையைச் சிறப்பாக கொண்டாடிட வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக, தலைவர் கலைஞர் அவர்கள் முதலமைச்சராக இருந்தபோது, நாகர்கோவில், கோவை, நீலகிரி, சென்னை ஆகிய பகுதிகளில் வாழும் கேரள மக்களுக்கு 'சிறப்பு அரசு விடுமுறை' அளித்ததை இந்த நேரத்தில் நினைவூட்டி, மலையாள மொழி பேசும் மக்கள் அனைவருக்கும் இனிய ‘ஓணம் திருநாள்’ வாழ்த்துகளை மீண்டும் தெரிவித்துக் கொள்கிறேன்.” எனத் தெரிவித்துள்ளார்.
Also Read
-
“கலைஞரின் வழக்கத்தை நானும் தொடர்ந்து கடைப்பிடித்து வருகிறேன்!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
-
“நீங்கள் ஒவ்வொருவரும் ஒரு பெரிய ‘Sports Star’-ஆக நிச்சயம் வருவீர்கள்!” : துணை முதலமைச்சர் உதயநிதி பேச்சு!
-
‘தலைவர்’ இல்லாமல் இயங்கும் தேசிய சிறுபான்மையினர் ஆணையம்! : திருச்சி சிவா எம்.பி கண்டனம்!
-
“மெட்ரோ திட்டத்தில் தமிழ்நாட்டிற்கு எதிராக செயல்படும் ஒன்றிய பாஜக அரசு!”: திமுக எம்.பி கிரிராஜன் கண்டனம்!
-
‘பொருநை’ அருங்காட்சியகப் பணிகள் 97% நிறைவு! : டிச.21 அன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்!