M K Stalin
மதத்தை வைத்து அரசியல் செய்வோருக்கு தமிழகத்தில் இடமில்லை - முக.ஸ்டாலின் !
ரமலான் திருநாளையொட்டி ஏழை, எளிய இஸ்லாமியர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா சென்னை பெரவள்ளூரில் நடைபெற்றது. அதில் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு இஸ்லாமியர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.
பின்னர் பேசிய அவர் , "ஒவ்வொரு ஆண்டும் கொளத்தூர் பகுதியில் இஸ்லாமியர்களுக்கு நலத்திட்ட உதவிகள் செய்யப்பட்டு வருகிறது. இந்த முறை உங்களுக்கு புனித ரமலான் வாழ்த்தோடு, நடந்து முடிந்து தேர்தலில் வாக்களித்து வெற்றிபெறச் செய்த உங்களுக்கு நன்றி கூறவும் வந்துள்ளேன்.நேற்றைக்கு தமிழகம் முழுவதும் உள்ள வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் கூட்டம் நடைபெற்றது. நடந்து முடிந்த தேர்தலில் தமிழ்நாட்டைப் பொறுத்தவரை மதவெறி பிடித்தவர்களுக்கும், மதத்தை வைத்து அரசியல் செய்வோருக்கும் தமிழகத்தில் இடமில்லை என்பதை தமிழக மக்கள் நிரூபித்துள்ளார்கள். உங்கள் அனைவருக்கும் புனித ரமலான் நல்வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன்." என்றார்.
Also Read
-
சாலை விபத்தில் உயிரிழந்த தூய்மை பணியாளர் : இரங்கல் தெரிவித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிதியுதவி!
-
”இந்திய விளையாட்டின் தலைநகரம் தமிழ்நாடு” : டெல்லியில் பெருமையுடன் சொன்ன துணை முதலமைச்சர் உதயநிதி!
-
அருவருக்கத்தக்க ஆணாதிக்க மொழி : நடிகை கெளரி கிஷனிடம் சர்ச்சை கேள்வி கேட்ட YouTuberக்கு வலுக்கும் கண்டனம்!
-
“ஜனநாயகத்தை கொலை செய்யக்கூடிய முயற்சிதான் S.I.R!” : கனிமொழி எம்.பி குற்றச்சாட்டு!
-
“வாக்குத் திருட்டு என்ற நிலையை தமிழ்நாட்டில் நடக்க விடக்கூடாது!”: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்!