M K Stalin
தோல்வி பயத்தால் தமிழிசை பொய் பேசத் தொடங்கிவிட்டார் - மு.க.ஸ்டாலின் பரப்புரை !
திமுக தலைவர் முக ஸ்டாலின் திருப்பரங்குன்றம் தொகுதி திமுக வேட்பாளர் சரவணணை ஆதரித்து விரகனூரில் வாக்கு சேகரித்தார். அப்போது அவர் கூறியதாவது:
பிரதமராவதற்கு முன்பு பொய் சொன்ன மோடி பிரதமரான பிறகும் பொய் கூறிக்கொண்டிருக்கிறார். 2 கோடி பேருக்கு வேலை கொடுப்பேன் என்று மோடி அளித்த வாக்குறுதியும் பொய், ஒவ்வொருவரது வாங்கிக் கணக்கிலும் பாஜக ஆட்சிக்கு வந்ததும் தலா ரூ.15 லட்சம் போடுவோம் என கூறியதும் பொய் தான். பொய் பேசுவதில் பிரதமர் நரேந்திர மோடிக்கு ஈடு இணை யாரும் கிடையாது.
1987-ல் டிஜிட்டல் கேமராவில் அத்வானியை புகைப்படம் எடுத்து இமெயில் அனுப்பியதாக மோடி கூறியிருக்கிறார். 1990-ல் தான் டிஜிட்டல் கேமராவே உலகத்தில் புழக்கத்துக்கு வந்தது என்பதால் மோடி கூறியது அப்பட்டமான பொய் என்பது இதன் மூலம் நிரூபணம் ஆகியிருக்கிறது. தற்போது தமிழகத்தில் தோல்வி பயத்தால் தமிழிசை பொய் பேசத் தொடங்கிவிட்டார். எடப்பாடி ஆட்சிக்கு முடிவுகட்ட திமுக வேட்பாளர் சரவணனுக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்க ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்தார்.
Also Read
-
”கோவை சிறுமி கொலை.. கேள்விக்குறியான மாநில சட்டம் ஒழுங்கு.. நீதி வேண்டும்”: எதிர்க்கட்சித் தலைவர் கண்டனம்!
-
”தமிழ்நாட்டை உலுக்கிய கோவை சிறுமி கொலை.. சந்தி சிரிக்கும் சட்டம் ஒழுங்கு.. மவுனத்தில் முதல்வர் விஜய்!”
-
”இந்தியப் பொருளாதாரத்தில் மந்தநிலை.. ஐ.நா.வின் கணிப்பு.. பொய் கூறுகிறாரா பிரதமர்?” - முரசொலி தலையங்கம்!
-
வேலியே பயிரை மேய்வதா? : விசாரணை என்ற பெயரில் இளம் பெண்ணிடம் அநாகரிகமாக நடந்துகொண்ட காவல் உதவி ஆய்வாளர்!
-
மாமூல் கேட்டு கொலை மிரட்டல் விடுத்த த.வெ.க நிர்வாகி : தமிழ்நாடு முழுவதும் தொடரும் அராஜகம்!