M K Stalin
தோல்வி பயத்தால் தமிழிசை பொய் பேசத் தொடங்கிவிட்டார் - மு.க.ஸ்டாலின் பரப்புரை !
திமுக தலைவர் முக ஸ்டாலின் திருப்பரங்குன்றம் தொகுதி திமுக வேட்பாளர் சரவணணை ஆதரித்து விரகனூரில் வாக்கு சேகரித்தார். அப்போது அவர் கூறியதாவது:
பிரதமராவதற்கு முன்பு பொய் சொன்ன மோடி பிரதமரான பிறகும் பொய் கூறிக்கொண்டிருக்கிறார். 2 கோடி பேருக்கு வேலை கொடுப்பேன் என்று மோடி அளித்த வாக்குறுதியும் பொய், ஒவ்வொருவரது வாங்கிக் கணக்கிலும் பாஜக ஆட்சிக்கு வந்ததும் தலா ரூ.15 லட்சம் போடுவோம் என கூறியதும் பொய் தான். பொய் பேசுவதில் பிரதமர் நரேந்திர மோடிக்கு ஈடு இணை யாரும் கிடையாது.
1987-ல் டிஜிட்டல் கேமராவில் அத்வானியை புகைப்படம் எடுத்து இமெயில் அனுப்பியதாக மோடி கூறியிருக்கிறார். 1990-ல் தான் டிஜிட்டல் கேமராவே உலகத்தில் புழக்கத்துக்கு வந்தது என்பதால் மோடி கூறியது அப்பட்டமான பொய் என்பது இதன் மூலம் நிரூபணம் ஆகியிருக்கிறது. தற்போது தமிழகத்தில் தோல்வி பயத்தால் தமிழிசை பொய் பேசத் தொடங்கிவிட்டார். எடப்பாடி ஆட்சிக்கு முடிவுகட்ட திமுக வேட்பாளர் சரவணனுக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்க ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்தார்.
Also Read
-
சென்னையில் நடைபெற்ற தேசிய சீனியர் தடகள சாம்பியன்ஷிப் : சாம்பியன் பட்டம் வென்ற தமிழ்நாடு !
-
“அரசியலமைப்புச் சட்டத்தைக் காப்பாற்ற முழு மூச்சுடன் பாடுபடுவேன்!” : சென்னையில் நீதியரசர் சுதர்சன் உறுதி!
-
எடப்பாடி பழனிசாமியின் மிரட்டல் எதிரொலி... ஆம்புலன்ஸ் ஓட்டுநரை தாக்க முயன்ற அதிமுகவினர் !
-
"தமிழுக்கு துரோகம் செய்யும் பாஜகவுக்கு கொத்தடிமையாகக் கிடப்பது அதிமுகவின் பழக்கம்" - முரசொலி காட்டம் !
-
"தமிழ்நாட்டில் ஹைட்ரோகார்பன் திட்டத்தை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்" - அமைச்சர் தங்கம் தென்னரசு !