M K Stalin
அரவக்குறிச்சியில் தேர்தல் பரப்புரையை தொடங்கினார் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின்!
இடைத்தேர்தல் நடைபெற உள்ள அரவக்குறிச்சி சட்டமன்றத் தொகுதியில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று தீவிர பிரசாரத்தை தொடங்கினார்.
கழக வேட்பாளர் செந்தில் பாலாஜியை ஆதரித்து, அரவக்குறிச்சி தொகுதிக்கு உட்பட்ட பள்ளப்பட்டி பகுதியில் இன்று காலை நடைபயணமாகச் சென்று மக்களிடம் ஆதரவு திரட்டினார்.
இதேபோன்று, இஸ்லாமிய மக்கள் அதிகம் வசிக்கும் சந்தை பகுதிக்குச் சென்ற தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு ஏராளமானோர் கை குலுக்கியும், செல்ஃபி எடுத்தும் தங்களது மகிழ்ச்சியை தெரிவித்தனர்.
நடைபயணத்தின் போது, அப்பகுதியில் வசிக்கும் இஸ்லாமிய பெண்கள் தளபதி ஸ்டாலினிடம் தங்கள் பகுதியில் உள்ள குறைகள் எடுத்துரைத்தனர். பின்னர், மக்களோடு அமர்ந்து, பழச்சாறையும் பருகினார்.
மேலும், ரமலான் நோன்பு தொடங்கியுள்ளதை முன்னிட்டு, இஸ்லாமிய மக்களுக்கு தனது வாழ்த்தையும் தெரிவித்தார் மு.க.ஸ்டாலின்.
இதனையடுத்து திண்ணைப்பிரசாரத்தில் ஈடுபட்ட மு.க.ஸ்டாலினிடம் அ.தி.மு.க ஆட்சியில் சிறுபான்மையினருக்கு ஏற்பட்ட அவலங்கள் குறித்து இஸ்லாமிய பெண்கள் எடுத்துரைத்தனர். அவர்களின் குறைகளை தலைவர் ஸ்டாலின் கனிவுடன் கேட்டறிந்தார்.
பின்னர், தி.மு.க. ஆட்சி அமைத்ததும் மக்களின் அனைத்து பிரச்னைகளுக்கும் தீர்வு காணப்படும் என கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் உறுதியளித்தார்.
Also Read
-
”வெளியான கருத்துக்கணிப்பு முடிவுகள்... வடக்கு முதல் மேற்கு வரை முந்தி நிற்கும் திமுக” : முழு விவரம் அறிய!
-
தமிழ்நாட்டின் வளர்ச்சிப் பயணத்தை சூப்பர் ஃபாஸ்டாகத் தொடரபோகும் திமுக 2.0 : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
NDA-வை புறக்கணிக்க வேண்டும்! அதுதான் தமிழ்நாட்டின் எதிர்காலத்திற்கு நல்லது : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
இன்று முதல் அமலாகும் புதிய விதிகள்… எத்தனை துறைகள்… என்னென்ன மாற்றங்கள்? முழு விவரம் அறிய!
-
பழனிசாமியின் அரசியல் அனுபவம் இதுதான் : தேர்தல் பரப்புரையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பதிலடி!