M K Stalin
அரவக்குறிச்சியில் தேர்தல் பரப்புரையை தொடங்கினார் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின்!
இடைத்தேர்தல் நடைபெற உள்ள அரவக்குறிச்சி சட்டமன்றத் தொகுதியில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று தீவிர பிரசாரத்தை தொடங்கினார்.
கழக வேட்பாளர் செந்தில் பாலாஜியை ஆதரித்து, அரவக்குறிச்சி தொகுதிக்கு உட்பட்ட பள்ளப்பட்டி பகுதியில் இன்று காலை நடைபயணமாகச் சென்று மக்களிடம் ஆதரவு திரட்டினார்.
இதேபோன்று, இஸ்லாமிய மக்கள் அதிகம் வசிக்கும் சந்தை பகுதிக்குச் சென்ற தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு ஏராளமானோர் கை குலுக்கியும், செல்ஃபி எடுத்தும் தங்களது மகிழ்ச்சியை தெரிவித்தனர்.
நடைபயணத்தின் போது, அப்பகுதியில் வசிக்கும் இஸ்லாமிய பெண்கள் தளபதி ஸ்டாலினிடம் தங்கள் பகுதியில் உள்ள குறைகள் எடுத்துரைத்தனர். பின்னர், மக்களோடு அமர்ந்து, பழச்சாறையும் பருகினார்.
மேலும், ரமலான் நோன்பு தொடங்கியுள்ளதை முன்னிட்டு, இஸ்லாமிய மக்களுக்கு தனது வாழ்த்தையும் தெரிவித்தார் மு.க.ஸ்டாலின்.
இதனையடுத்து திண்ணைப்பிரசாரத்தில் ஈடுபட்ட மு.க.ஸ்டாலினிடம் அ.தி.மு.க ஆட்சியில் சிறுபான்மையினருக்கு ஏற்பட்ட அவலங்கள் குறித்து இஸ்லாமிய பெண்கள் எடுத்துரைத்தனர். அவர்களின் குறைகளை தலைவர் ஸ்டாலின் கனிவுடன் கேட்டறிந்தார்.
பின்னர், தி.மு.க. ஆட்சி அமைத்ததும் மக்களின் அனைத்து பிரச்னைகளுக்கும் தீர்வு காணப்படும் என கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் உறுதியளித்தார்.
Also Read
-
“எங்களை விமர்சனம் செய்தவர்களுக்கான பதில்தான் இது!” : ‘செயலாக்க’ மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை!
-
“திராவிட மாடல் ஆட்சியில் 1,179 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்” : பெருமையுடன் சொன்ன அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா!
-
2 சூப்பர் ஓவர்கள்… இறுதியில் நடந்த சுவாரசியம்!: ரசிகர்களை இருக்கையின் நுனியில் அமரவைத்த போட்டி!
-
“பா.ஜ.க. அரசு கார்ப்பரேட்டுகளுக்காக கார்ப்பரேட்டுகளால் ஆளப்படும் கார்ப்பரேட் அரசாங்கம்” - முரசொலி!
-
“பாஜக டப்பா எஞ்சின் முன், திராவிட மாடல் Superfast Engine தலைகுனியாது!”: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சூளுரை!