M K Stalin
தூத்துக்குடியில் மே தின பேரணி: மு.க. ஸ்டாலின் பங்கேற்பு
ஓட்டப்பிடாரம் சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தல் பிரசாரத்தை தொடங்குவதற்காக நேற்று (ஏப். 30 ஆம் தேதி) தூத்துக்குடி வருகை தந்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு, தூத்துக்குடி விமான நிலையத்தில் தொண்டர்கள் உற்றாக வரவேற்பு அளித்தனர்.
அதனைத்தொடர்ந்து இன்று (மே 1 ஆம் தேதி) தூத்துக்குடியில் நடைபெற்ற மே தின பேரணிக்கு திமுக தலைவர் ஸ்டாலின் தலைமை தாங்கினார். காலை 8.30 மணிக்கு தூத்துக்குடி வி.வி.டி. சாலை- டூவிபுரம் 5 ஆவது தெரு சந்திப்பில் இருந்து ஸ்டாலின் தலைமையில் பேரணி புறப்பட்டு வி.வி.டி. சிக்னல், பாளையங்கோட்டை சாலை வழியாக சிதம்பரநகர் பேருந்து நிறுத்தம் அருகில் அமைக்கப்பட்டிருந்த மே தின நினைவு சின்னத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டு பேரணி நிறைவுபெற்றது.
பேரணியில், திமுக மாநில மகளிரணி செயலாளர் கனிமொழி , தூத்துக்குடி வடக்கு மாவட்ட பொருப்பாளர் கீதா ஜீவன், தெற்கு மாவட்ட பொறுப்பாளர் அனிதா ராதாகிருஷ்ணன்,முன்னாள் அமைச்சர்கள் கே.என்.நேரு, பூங்கோதை,மாநில பொதுக்குழு உறுப்பினர் என்.பி.ஜெகன் தொமுச மாநில செயலாளர் சண்முகம், சமத்துவ மக்கள் கழக தலைவர் எர்ணாவூர் நாராயணன் மற்றும் தொமுச, திமுக நிர்வாகிகள், தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.
Also Read
-
தேர்வு முடியும் முன்பே வெளியான தேர்வுத்தாள் : ராஜஸ்தான் நீட் தேர்வில் நடைபெற்ற மாபெரும் மோசடி !
-
காசாவுக்கு பிறகு லெபனானை தாக்க தயாராகும் இஸ்ரேல் ? எல்லையில் இருந்து 1,80,000 பேர் இடம்பெயர்வு !
-
பாஜக தேசிய தலைவர் JP நட்டா உள்ளிட்ட பாஜக நிர்வாகிகள் மீது பாய்ந்த வழக்கு - பின்னணி என்ன ?
-
பாஜக தேர்தல் அறிக்கை : 76 பக்கத்தில் 67 முறை இடம்பெற்ற ‘மோடி’ பெயர் - வருத்தெடுக்கும் இணையவாசிகள்!
-
மோடியின் பேச்சு இந்தியா கூட்டணி வெல்லும் என அவரின் அச்சத்தை வெளிப்படுத்துகிறது - திருமாவளவன் !