M K Stalin
தூத்துக்குடியில் மே தின பேரணி: மு.க. ஸ்டாலின் பங்கேற்பு
ஓட்டப்பிடாரம் சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தல் பிரசாரத்தை தொடங்குவதற்காக நேற்று (ஏப். 30 ஆம் தேதி) தூத்துக்குடி வருகை தந்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு, தூத்துக்குடி விமான நிலையத்தில் தொண்டர்கள் உற்றாக வரவேற்பு அளித்தனர்.
அதனைத்தொடர்ந்து இன்று (மே 1 ஆம் தேதி) தூத்துக்குடியில் நடைபெற்ற மே தின பேரணிக்கு திமுக தலைவர் ஸ்டாலின் தலைமை தாங்கினார். காலை 8.30 மணிக்கு தூத்துக்குடி வி.வி.டி. சாலை- டூவிபுரம் 5 ஆவது தெரு சந்திப்பில் இருந்து ஸ்டாலின் தலைமையில் பேரணி புறப்பட்டு வி.வி.டி. சிக்னல், பாளையங்கோட்டை சாலை வழியாக சிதம்பரநகர் பேருந்து நிறுத்தம் அருகில் அமைக்கப்பட்டிருந்த மே தின நினைவு சின்னத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டு பேரணி நிறைவுபெற்றது.
பேரணியில், திமுக மாநில மகளிரணி செயலாளர் கனிமொழி , தூத்துக்குடி வடக்கு மாவட்ட பொருப்பாளர் கீதா ஜீவன், தெற்கு மாவட்ட பொறுப்பாளர் அனிதா ராதாகிருஷ்ணன்,முன்னாள் அமைச்சர்கள் கே.என்.நேரு, பூங்கோதை,மாநில பொதுக்குழு உறுப்பினர் என்.பி.ஜெகன் தொமுச மாநில செயலாளர் சண்முகம், சமத்துவ மக்கள் கழக தலைவர் எர்ணாவூர் நாராயணன் மற்றும் தொமுச, திமுக நிர்வாகிகள், தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.
Also Read
-
1531.57 சதுர கி.மீ பரப்பளவு கொண்ட கோயம்புத்தூர் 2-வது முழுமைத் திட்டம் 2041 : வெளியிட்டார் முதலமைச்சர்!
-
தமிழ்நாட்டில் மீட்கப்பட்ட சிறுமி.. சிறையில் அடைத்து பாலியல் வன்கொடுமை செய்த உ.பி. போலீஸ்.. நீதிபதி ஷாக்!
-
“அநீதிக்கு எதிராக அனைவரையும் ஓரணியில் திரட்டுவதற்கான முயற்சி - இது மண்ணைக் காக்கும் பரப்புரை” : முரசொலி!
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!